India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேலூர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <

வேலூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 11,33,587 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண் வாக்காளர்கள் மொத்தம் 5,49,654 பேரும், பெண் வாக்காளர்கள் மொத்தம் 5,83,769 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 164 பேரும் உள்ளனர். உங்கள் பெயர் உள்ளதா என்பதை <<19214867>>இங்கு க்ளிக்<<>> செய்து தெரிந்துகொள்ளவும். SHARE NOW!

பள்ளிகொண்டா அருகே அகரம்சேரியில் இன்று(பிப்.23) நடைபெற்ற தவெக பரப்புரை கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், ‘முதலமைச்சர், எதிரிகள் எல்லாம் என் நண்பர் என்று சொல்கிறார். அப்படி என்றால், கரூர் விவகாரத்தில் என் மேல் ஏன் பலி போட வேண்டும்? உங்களுக்கு மனசாட்சி இருக்கா..? உங்கள் உண்மையான நண்பர்கள் லஞ்சம், ஊழல், அரசியல் ஆதாயம்’ என காட்டமாக சாடினார்.

பள்ளிகொண்டா அருகே அகரம்சேரியில் இன்று(பிப்.23) நடைபெற்ற தவெக பரப்புரை கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய் ’உங்க வீட்டில் இருக்கும் ஒருவர் தான் நமது வேட்பாளர். நமக்கு எதிராக அவ்வளவு அவதூறு கிளப்புகிறார்கள். என் மீது அவதூறு பரப்பினால், அது மக்கள் மீது பரப்புவது மாதிரி. இந்த விஜய்யும் மக்களும் வேறு, வேறு இல்லை’எனப் பேசிய விஜய், மேடையில் சில நிமிடங்கள் கலங்கிய படி நின்றார்.

பள்ளிகொண்டா அருகே அகரம்சேரியில் நடந்த தவெக பரப்புரைக் கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய் ‘நாம் ஒவ்வொரு வீடுகளையும் உயிராக, உணர்வாக இருக்குறோம். ஆனால், உங்கள் அனைவரையும், ஊரில் வந்தே சந்திப்பதே என் ஆசை. ஆனால், நமக்கு பல சூழ்ச்சிகள் நடக்கின்றன. நாம் ஆட்சிக்கு வந்த உடன், உங்கள் அனைவரையும் உங்கள் ஊருக்கே, வீடுக்கே வந்து சந்திப்பேன்’ என வாக்குறுதி தந்தார்.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே அகரம்சேரியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு, பரப்புரைக் கூட்டம் இன்று(பிப்.23) நடைபெறவுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் தற்போது வேலூர் மாவட்டம் வந்தடைந்துள்ளார். சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக வந்த அவரது வாகனத்தை சுற்றி வளைத்த ரசிகர்கள், தொண்டர்கள் அவருக்கு வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். மேலும், அகரம் சேரியில் திரளான தவெகவினர் குவிந்துள்ளனர்.

வேலூர் மாவட்ட மக்களே.., எஸ்.ஐ.ஆர் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், உங்கள் தொகுதி பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா எனத் தெரிந்துகொள்ள <

பள்ளிகொண்டா அருகே அகரம்சேரியில் இன்று(பிப்.23) நடைபெறவுள்ள தமிழக வெற்றி கழகம் மாநாட்டில் ஏராளமான ரசிகர்கள் வந்து குவிந்துள்ளனர். நிர்வாகிகள், கட்சி பொறுப்பாளர்கள் ஏராளமான திரண்டுள்ளனர். இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். பொதுமக்கள் யாரும் அனுமதி இல்லை. இதனால் காவல்துறையினர் தேசிய நெடுஞ்சாலையில் பேரிகார்ட் அமைத்துள்ளனர்.

பள்ளிகொண்டா அருகே அகரம்சேரியில் இன்று(பிப்.23) நடைபெறவுள்ள தமிழக வெற்றி கழகம் மாநாட்டில் ஏராளமான ரசிகர்கள் வந்து குவிந்துள்ளனர். நிர்வாகிகள், கட்சி பொறுப்பாளர்கள் ஏராளமான திரண்டுள்ளனர். இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். பொதுமக்கள் யாரும் அனுமதி இல்லை. இதனால் காவல்துறையினர் தேசிய நெடுஞ்சாலையில் பேரிகார்ட் அமைத்துள்ளனர்.

குடியாத்தம் மேல்பட்டி ரோடு பகுதியில் தனிப்படை போலீசார் குடியாத்தம் தாலுகா போலீசார் நேற்று(பிப்.22) ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரணை செய்தபோது வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த அன்பழகன் (20), சுனில் (19) என்பதும், அவர்கள் வந்த பைக் குடியாத்தத்தில் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.