India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் இந்த 3 தாவரங்களை நடுவது வீட்டிற்கு செல்வத்தையும், அதிர்ஷ்டத்தையும் தரும் என நம்பப்படுகிறது. *துளசி: வீட்டின் முற்றத்திலோ அல்லது கிழக்கு திசையிலோ துளசி செடியை வைத்திருப்பது சிறந்தது *மணி பிளாண்ட்: வீட்டின் தென்கிழக்கு திசையில் வைத்திருப்பது நல்லது *நெல்லிக்காய் மரம்: வீட்டின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் வைப்பது நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். SHARE IT.

சர்வதேச சந்தையில் கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்றும் (பிப்.26) 1 அவுன்ஸ்(28g) $25(இந்திய மதிப்பில் ₹2,339) அதிகரித்து $5,183-க்கு விற்பனையாகிறது. இதனால், இந்திய சந்தையிலும் தங்கம் விலை இன்று உயர வாய்ப்புள்ளது. அதேநேரம், சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை ஒரு அவுன்ஸ், $1.49 உயர்ந்து $88.96 ஆக உள்ளது.

தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிப்பால் காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதாக பொது சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். காய்ச்சல் குடும்பத்தில் ஒருவருக்கு வந்தால் அது அனைவருக்கும் பரவும் என்பதால், வீட்டிலும் முகக்கவசம் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளனர். இன்ப்ளூயன்ஸா காய்ச்சல் பரவி வருவதால் சளி, இருமல், உடல் சோர்வு, வாந்தி, பேதி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் டாக்டரை அணுகுவது சிறந்தது என்று தெரிவித்துள்ளனர்.

<<19234938>>கிரிஷ் சோடங்கர்<<>> நேற்று பேசியது, திமுக – காங்கிரஸ் கூட்டணி இன்னும் முடிவாகவில்லை என்பதை காட்டுகிறது. ஆட்சியில் பங்கு என்று அடம்பிடிக்கும் நிலையில், வரும் மார்ச் 5-ம் தேதி ராகுல் தமிழகம் வருகிறார். அப்போது <<19234988>>காங்கிரஸ் யாருடன் கூட்டணி<<>> என்பது தெரியவரும். மேலும், செல்வப்பெருந்தகை திமுகவுடன் இணக்கமாக இருந்தாலும், காங்கிரஸார் பலரும் தவெகவுடனான கூட்டணியை விரும்புவதாக தகவல்கள் வெளிவருகின்றன.

தேமுதிக 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா சீட்டு கேட்பதால், திமுக தலைமை அதிர்ந்துள்ளதாம். ரிஷிவந்தியம், விருத்தாசலம், விக்கிரவாண்டி, கெங்கவல்லி, சாத்தூர், விருதுநகர், மதுரை தெற்கு, தி.குன்றம், பண்ருட்டி, விருகம்பாக்கம், கடலூர் உள்ளிட்ட தொகுதிகளின் பட்டியலை பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், திமுக தரப்பில் 7 + 1 சீட் கொடுக்க தயாராகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அரசு பஸ்களில் ரேடியோ மற்றும் டேப் ரெக்கார்டர்களை பயன்படுத்தக் கூடாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பயணத்தின்போது ரேடியோக்களில் இருந்து அதிக சத்தம் ஏற்படுவதாக பயணிகளிடமிருந்து வரும் புகாரை தொடர்ந்து அரசு டிரைவர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை மீறும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் TNSTC மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

டெல்லி செங்கோட்டை அருகே <<18254468>>கடந்தாண்டு<<>> நடந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் 2 பேரை NIA கைது செய்துள்ளது. இந்த நடவடிக்கையால் குண்டுவெடிப்பு வழக்கில் இதுவரை மொத்தமாக 11பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது கைதான இருவரும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் குண்டுவெடிப்புக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்கியதாகவும் NIA தெரிவித்துள்ளது.

T20 WC உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இன்று இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை செய்ய உள்ளன. இரு அணிகளுக்கு இந்த போட்டியின் வெற்றி மிகவும் அவசியம். குறிப்பாக, அரையிறுதி வாய்ப்புக்கு இந்திய அணி இன்று 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்ய வேண்டும். சென்னையில் நடைபெறும் இந்த போட்டி மீதான ஆர்வம் ரசிகர்கள் அனைவரிடத்திலும் அதிகரித்து உள்ளது.

▶பிப்ரவரி 26, மாசி 14 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 12:30 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:00 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 PM ▶திதி: தசமி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் HC-ல் போலி நீதிபதி ஒருவர் 5 ஆண்டுகளாக நீதி வழங்கி வந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 2020-ல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட தாரிக்கின் கல்வி சான்றிதழ் போலியானது என்பது தெரியவந்ததை அடுத்து அவர் நீக்கம் செய்யப்பட்டதோடு அவர் 5 ஆண்டுகளாக வழங்கிய அனைத்து தீர்ப்புகளும் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தான் நீதித்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.