India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சுதந்திரத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் நடைபெற்ற 16 பேரவைத் தேர்தல்களில் இதுவரை 2 முதல்வர்கள் தோல்வியைச் சந்தித்துள்ளனர். 1967-ல் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் அப்போதைய முதல்வர் பக்தவத்சலம் திமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். இவர் தான் தற்போது வரை தமிழகத்தின் கடைசி காங்கிரஸ் முதல்வர் ஆவார். அதேபோல் 1996-ல் நடைபெற்ற தேர்தலில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, திமுகவின் EG சுகவனத்திடம் தோல்வியடைந்தார்.

KYC அப்டேட்டால் <<19398205>>கேஸ் சிலிண்டர்<<>> புக் செய்பவர்களிடையே எழுந்துள்ள குழப்பத்திற்கு மத்திய அரசு அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஏற்கெனவே KYC அப்டேட் செய்தவர்கள் மீண்டும் செய்ய வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அப்டேட் செய்யாதவர்கள் மட்டுமே KYC பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், உஜ்வாலா திட்ட பயனாளிகள் ஆண்டுக்கு ஒருமுறை KYC அப்டேட் செய்யுமாறு தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் தவெகவை இணைக்க மறைமுக பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், தவெகவை அதிமுக கூட்டணியில் இணைக்கும் முடிவை பாஜக தலைமை கைவிட்டுவிட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதனால் 2026 தேர்தலில் தவெக தனித்தே களம் காணும் என்பதும், 4 முனைப் போட்டிதான் என்பதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து என்ன?

விழுப்புரம் நிகழ்ச்சியில் <<19406314>>நடிகை நயன்தாரா<<>> குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு CV சண்முகம் வருத்தம் தெரிவித்துள்ளார். அவரது பேச்சுக்கு மகளிர் ஆணையம் உள்பட பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இதனையடுத்து, வருத்தம் தெரிவித்த CV சண்முகம், நயன்தாராவின் பெயர் தவறாக உச்சரிக்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார். உள்நோக்கத்தோடு பேசவில்லை; வாய் தவறி பேசி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

<<19406314>>நடிகை நயன்தாரா<<>> குறித்து C.V.சண்முகம் சர்ச்சையாக பேசியது அரசியல் ரீதியாக விவாதப்பொருளாக மாறியுள்ளது. தமிழ்நாட்டு பெண்களிடம் சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று Ex MLA பாலபாரதி, வலியுறுத்தியுள்ளார். மேலும், பெண்கள் குறித்து சி.வி.சண்முகம் இவ்வாறு பேசுவது, இது முதல்முறை அல்ல என்றும் அவர் தேர்தலில் போட்டியிடாத வகையில் ECI நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

ரம்ஜான் மாதத்தில் அதிகாலை முதல் மாலை வரை உண்ணாமல், நீர் அருந்தாமல் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். சூரிய உதயம், மறைவை பொறுத்து ஒவ்வொரு நாட்டிலும் நோன்பு நேரம் மாறுபடுகிறது. கிரீன்லாந்து, ஐஸ்லாந்து நாட்டு மக்கள் ஒருநாளில் 16 மணி 30 நிமிடங்கள் நோன்பு இருக்கிறார்களாம். இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் 13 மணி 45 நிமிடங்கள் நோன்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

திமுக – சிபிஎம் இடையில் இன்று நடைபெற்ற 3-ம் கட்ட தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை. இதுகுறித்து பேசிய பெ.சண்முகம், கடந்த தேர்தலை ( 6 தொகுதிகள்) விட, கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக கூறினார். மேலும், திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வந்திருப்பதால், பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை; விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்றார்.

TN-ல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால், வீட்டில் அதிகளவில் தங்கம் வைத்திருந்தால் சிக்கல் எழுமா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். வருமான வரி விதிப்படி, திருமணமான பெண்கள் 500 கிராம், திருமணம் ஆகாத பெண்கள் 250 கிராம், ஆண்கள் 100 கிராம் வரை ஆவணங்களின்றி தங்கத்தை வீட்டில் வைத்துக் கொள்ளலாம். இந்த அளவுக்கு மேல் வீட்டில் தங்கம் வைத்திருந்தால், ரெய்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும்.

ரஜினிகாந்த் பற்றி ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு <<19405631>>ரஜினி<<>> பதிலடி கொடுத்திருந்தார். இதில் கவனிக்கத்தக்க வகையில், தனது X பக்கத்தில், ‘ . ‘ என்று மட்டும் குறிப்பிட்டு அறிக்கையை ரஜினி வெளியிட்டிருந்தார். இதனை பகிர்ந்துவரும் அவரது ரசிகர்கள், ‘தலைவர் சம்பவம் வேற மாதிரி’ என கூறி வருகின்றனர். முன்னதாக, அடுத்த சூப்பர் ஸ்டார், காக்கா – கழுகு கதை என ரஜினி – விஜய் ரசிகர்கள் மோதியுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

₹5,000 மூலம் வாக்குகளை விலைக்கு வாங்க நினைத்த திமுகவின் ஆணவம், காட்டாட்சிக்கு முடிவு கட்ட ஏப்.23-ம் தேதிக்காக மக்கள் காத்திருப்பதாக TTV தினகரன் கூறியுள்ளார். தஞ்சையில் பேசிய அவர், TN-ல் தினந்தோறும் கொலை, வன்கொடுமை சம்பவங்கள் அதிகரிக்க கஞ்சா புழக்கமே காரணம் என்றார். அதிமுக ஆட்சியில் பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு முகவரியை மாற்றியவர்களுக்கு அரசியல் எதிர்காலம் காணாமல் போகும் என OPS-ஐ சாடினார்.
Sorry, no posts matched your criteria.