News May 8, 2025

பஞ்சாபில் இன்று இரவு முழு மின் தடை

image

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக பல்வேறு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இதன் ஒருபகுதியாக பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் இரவு முழுமையாக மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறை, மருத்துவமனைகளை தவிர, இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை குர்தாஸ்பூரில் முழு மின்தடை செய்யப்படுகிறது.

News May 8, 2025

USA ஜர்னலிஸ்ட் கொலைக்கு ஆபரேஷன் சிந்தூரால் நீதி

image

JeM செயல்பாட்டு தலைவர் அப்துல் ராஃப் அசார் கொல்லபட்டது சர்வதேச நலனுக்கானது என கூறப்படுகிறது. 1999-ல் ஐசி 814 விமான கடத்தலுக்கு மூளையாக இருந்த ராஃப், இந்தியா உள்பட சர்வதேச நாடுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். வால் ஸ்ட்ரீட் ஜர்னல்(USA) ஜர்னலிஸ்ட் டேனியல் பேர்லை கடத்தி கொலை செய்தது குறிப்பிடத்தக்கது. இப்போது ஆபரேஷன் சிந்தூர் மூலம் அந்த கொலைக்கு நீதி கிடைத்துள்ளது. <<-se>>#operationsindoor<<>>

News May 8, 2025

இந்திய ராணுவத்திற்கு சிறிய சேதம் : ராஜ்நாத் சிங்

image

ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ராணுவத்திற்கு சிறிய அளவில் சேதம் அடைந்துள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்; பொதுமக்களில் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என விளக்கமளித்துள்ளார். மேலும், அமிர்தசரஸ் பொற்கோயிலைத் தாக்கும் பாகிஸ்தானின் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

News May 8, 2025

‘ஆபரேஷன் சிந்தூர்’ துணிவின் வெளிப்பாடு: ராஜ்நாத் சிங்

image

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க ஆயுதப்படை எடுத்த நடவடிக்கைகளுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத துணிவுடன் நடத்தப்பட்டது. துல்லியமான நடவடிக்கையின் மூலம் ஆபரேஷன் சிந்தூரை சிறப்பாக செய்து முடித்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

News May 8, 2025

நெட் தேர்வு ரத்தா? யுஜிசி முக்கிய அறிவிப்பு

image

போர் பதற்றம் நிலவுவதால் நாடு முழுவதும் நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டதாகவும், மாணவர்கள் உடனடியாக தங்கள் வீடுகளுக்கு திரும்புங்கள் என்றும் யுஜிசி அறிவிப்பு ஒன்று தீயாகப் பரவியது. ஆனால், இது போலியானது எனத் தெரிவித்துள்ள யுஜிசி, இதுபோன்ற தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம், எந்தவொரு தகவலையும் www.ugc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே பார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

News May 8, 2025

பாகிஸ்தான் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு

image

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையால் பாகிஸ்தானில் பீதி நிலவுகிறது. இது பாகிஸ்தான் பங்குச்சந்தையிலும் எதிரொலிக்கிறது. இதனால் நேற்று ஒரே நாளில் கராச்சி பங்குச்சந்தையில் 6,500க்கும் மேல் புள்ளிகள் சரிவை சந்தித்தன. இது ஏறத்தாழ 6% சரிவாகும். இந்த சரிவு இன்றும் நீடித்தது. இன்று 5,000 புள்ளிகளுக்கும் மேல் வீழ்ச்சி கண்டது. இதனால் பங்குச்சந்தையில் வர்த்தகம் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

News May 8, 2025

எனது தொடையில் கிள்ளினார் இயக்குனர்: மலைகா அரோரா

image

பிரபல இயக்குநர் தனது தொடையில் கிள்ளியதாக நடிகை மலைகா அரோரா குற்றஞ்சாட்டியுள்ளார். மணிரத்னத்தின் உயிரே படத்தில் உள்ள தையா தையா பாடலுக்கு நடனமாடியவர் மலைகா அரோரா. சல்மான் கானின் தம்பி அர்பாஸ் கானை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், இயக்குனர் ஒருவர் தன்னிடம் அத்துமீறியதாக கூறியுள்ளார். ஆனால் இயக்குனர் பெயரை மலைகா வெளியிடவில்லை.

News May 8, 2025

ஒரே நேரத்தில் ஓய்வை அறிவித்த தோனி, ரோஹித்!

image

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் சர்மா அறிவித்த நேரத்தில், ஒரு சுவாரசியம் அடங்கியுள்ளது. ஆம், தோனி தனது ஓய்வை அறிவித்த மாலை 19:29 மணி நேரத்திலேயே ரோஹித்தும் ஓய்வு அறிவித்துள்ளார். அதேபோல, எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி, தோனியை போலவே சைலண்டாக அறிவித்து விட்டார் ரோஹித். தோனியின் கேப்டன்சியில் தான் ரோஹித் பட்டைத் தீட்டப்பட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.

News May 8, 2025

தேசிய விருது பட நடிகர் காலமானார்

image

பிரபல மராத்தி நடிகர் மாதவ் வாழி (85) காலமானார். 1953-ல் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமாகி பின்னர் பல படங்களில் மாதவ் நடித்துள்ளார். இதில் தேசிய விருது பெற்ற Shyamchi Aai படமும் ஒன்று. அந்தப் படத்தில் ஸ்யாம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தியில் 2009-ல் வெளியான த்ரீ இடியட்ஸ் படத்திலும் நடித்திருந்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News May 8, 2025

பாக்., ஏவுகணைகளை தவிடு பொடியாக்கிய S-400

image

பாகிஸ்தான் ஏவிய நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை நமது ராணுவம் இடைமறித்து அழித்துவிட்டது. இதில் முக்கிய பங்கு வகித்தது ரஷ்ய தயாரிப்பான S-400 Air Defence system தான். உலகின் சக்திவாய்ந்த வான்பாதுகாப்பு அமைப்பான இது, 400 கிமீ தொலைவுவரை எதிரி விமானங்கள், ஏவுகணைகளை வருவதை கண்டறிவதுடன், 600 கிமீ வரை இலக்குகளை தாக்கி அழிக்கும் திறனுள்ளது. எல்லை மாநிலங்களில் நான்கு S-400 அமைப்புகளை ராணுவம் நிலைநிறுத்தியுள்ளது.

error: Content is protected !!