India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஜன.20) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

சேலம் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோருக்கான குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் தொழில்முனைவோர் கருத்தரங்கம் வரும் ஜனவரி 23-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் படைவீரர்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கி பயன்பெறலாம் என ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். தகுதியுள்ள நபர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவிப்பு!

சேலத்தில் பல்வேறு பகுதிகளில் மின் பராமரிப்பு பணி காரணமாக கீழ் கண்ட பகுதிகளில் நாளை(ஜன.21) காலை 9 மணி முதல் காலை 5 வரை மின் தடை: தெடாவூர், கெங்கவல்லி, ஆணையம்பட்டி,புனல்வாசல், கிழக்குராஜபாளையம், வீரகனூர்,நடுவலூர், ஓதியத்தூர், பின்னனூர்,லத்துவாடிஎட்டிக்குட்டைமேடு, கோணங்கிபூர்,ஏகாபுரம், பூலாம்பட்டி, எடப்பாடி,இளம்பிள்ளை, சித்தர்கோவில் இடங்கணசாலை,வேம்படித்தாளம்,காக்காபாளையம், மகுடஞ்சாவடி, சீரகாபாடி

சேலம் ஆட்டையாம்பட்டியில் கடந்த 2000-ம் ஆண்டு நடைபெற்ற அடிதடி வழக்கில் கோவிந்தராஜ், அவரது மனைவி சித்ரா மற்றும் மகன்கள் கணபதி, கோகுல்நாத் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். 24 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த இவர்கள், ஊருக்குள் வந்திருப்பதை அறிந்த ஆட்டையாம்பட்டி போலீசார், விரைந்து செயல்பட்டு நால்வரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

சேலம் மக்களே உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை <

சேலம் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

சேலம் மாவட்ட இளைஞர்களே வேலை வாய்ப்பு கிடைக்காமல் ஏங்கி தவிக்கிறீர்களா? உங்களுக்காக அருமையான ஒரு யோசனை. அரசு வேலைவாய்ப்புத்துறை சார்பில் சேலம் மாவட்டத்தில் இயங்கும் பல்வேறு தனியார் நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இங்கே <

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே வேரகொண்டபட்டியில் கோவில் திருவிழா நடைபெற்றது, திருவிழாவில் சண்முகம் (எ) மயில் (65) என்பவருக்கும் முத்துசாமி (27) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் முத்துசாமி தாக்கியதில் பின் மண்டையில் பலத்த காயமடைந்த சண்முகம், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துசாமியைக் கைது செய்தனர்.

சேலம் மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இங்கு <

சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். சேலம் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0427-2420011, தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441, Toll Free -1800 4252 441, சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756.(ஷேர் பண்ணுங்க)
Sorry, no posts matched your criteria.