Mayiladuthurai

News July 6, 2025

மயிலாடுதுறை அருகே வாலிபருக்கு நன்னடத்தை சான்றிதழ்

image

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு கள்ளிக்காட்டை சேர்ந்த இளைஞர் விக்னேஷ் என்பவர் காதல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரின் பேரில் விக்னேஷ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். இந்நிலையில் நீதிமன்ற ஜாமினில் சிறையிலிருந்து வெளியே வந்த விக்னேஷ் மீது எஸ்பி அறிவுறுத்தலின்பேரில் நிர்வாக நடுவர் மயிலாடுதுறை கோட்டாட்சியர் முன்னிலையில் நன்னடத்தை சான்றிதழ் பிறப்பிக்கப்பட்டது.

News July 5, 2025

ஊட்டச்சத்து இயக்கத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

image

வேளாண்மை துறை மூலம் ஊட்டச்சத்து இயக்கத்தில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். துவரை தட்டை பயறு வகை விதைகள் 1500 பேருக்கும் தக்காளி, கத்திரி, உள்ளிட்ட காய் விதை தொகுப்பு 20 ஆயிரம் பேருக்கும் பப்பாளி, கொய்யா, போன்ற பழ செடிகள் 11,750 பேருக்கும் 100% மானியத்தில் வழங்கப்பட உள்ளது. இதற்கு tnhorticulture.tn.gov.in/kit/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 5, 2025

மயிலாடுதுறை: சொந்தமாக தொழில் தொடங்க கடன் உதவி

image

மயிலை மாவட்டத்தில் கூலித்தொழில் செய்பவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ‘கலைஞர் கைவினை’ திட்டம் மூலம் ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடன் தொகையில் 25% சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது.இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். இது குறித்த மேலும் தகவலுக்கு மயிலை மாவட்ட தொழில் மையத்தை (04364- 212295) தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்ங்க

News July 5, 2025

சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருது – ஆட்சியர்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் கடைப்பிடிக்கும் ஊராட்சிகளை கௌரவிக்கும் வகையில் தகுதியான 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகையுடன் கூடிய சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுகள் வழங்கப்படவுள்ளது. இதற்கு பழங்குடியினா் நல அலுவலகத்திற்கு ஜூலை 10-ஆம் தேதிக்குள் நேரில் வர வேண்டும் மயிலாடுதுறை ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

News July 5, 2025

மயிலாடுதுறை: 12th போதும், ரூ.81,000 சம்பளத்தில் அரசு வேலை

image

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 3131 Data Entry Operator (DEO) உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறைந்தது 12-ஆம் வகுப்பு முடித்த, 18 முதல் 27 வயதுக்குட்பட்ட நபர்கள் இங்கே<> க்ளிக்<<>> செய்து வரும் ஜூலை.18-க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு இதை SHARE செய்யவும்.

News July 5, 2025

மயிலாடுதுறை: மனை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு?

image

மயிலாடுதுறை மக்களே அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் இடம் வாங்கியவர்கள், (ஜூலை 1) முதல் அவற்றை வரன்முறை செய்ய விண்ணப்பிக்க தகவல் வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் <>onlineppa.tn.gov.in <<>>என்ற இணையதளம் மூலம் தங்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். கூடுதல் தகவல்களுக்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தை நேரடியாகத் தொடர்புகொண்டு விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News July 5, 2025

மயிலாடுதுறையில் சிக்கிய மோசடி நபர்!

image

மயிலாடுதுறை, சேந்தங்குடியில் ஹிமாஜ் ஓவர்சீஸ் கன்சல்டன்சி என்ற பெயரில் அலுவலகம் நடத்தி வரும் சுபாஷ்சந்திரபோஸ் வெளிநாட்டில் நிரந்தர வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக வந்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் விசாரணை செய்ததில் சுபாஷ் சந்திரபோஸ் 3 நபரிடம் ரூ. 21,85,000 பணம் வாங்கி மோசடி செய்தது தெரியவந்து. சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் அவரது நண்பர் கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர்.

News May 8, 2025

மயிலாடுதுறை: விபத்தில் உயிரிழந்த மாணவன் தேர்ச்சி

image

சீர்காழி அருகே வானகிரி கிராமத்தை சேர்ந்த மாணவன் கபிலன் மேலையூர் தனியார் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த நிலையில், கடந்த மார்ச் 30 ஆம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில், கபிலன் 343 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். இந்நிலையில் மாணவனின் பெற்றோர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

News May 8, 2025

மயிலாடுதுறை: வனத்துறையில் வேலை

image

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 257 வனக் காவலர், வனக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 18 முதல் 32 வயது வரை உள்ள, 10th, 12th முடித்தவர்கள் <>www.tnpsc.gov.in<<>> என்ற இணையதளம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கவும். சம்பளமாக மாதம் ரூ.16,600 முதல் ரூ.57,900 வரை வழங்கப்படும். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு இதை SHARE செய்யவும்!

News May 8, 2025

மயிலாடுதுறை: சீர்காழி மாணவி முதலிடம்

image

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி உள்ள தனியார் பள்ளி மாணவி ஜெஸ்மியா 597 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அதே பள்ளியில் பயிலும் மாணவி மதுஷா 596 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். சாதனை புரிந்துள்ள மாணவிகளுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!