India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தனது வீட்டிற்குள் ஒட்டுக்கேட்கும் கருவி கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அன்புமணி ராமதாஸ் உடனான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், இரு தினங்களுக்கு முன்பு இந்தக் கருவி கண்டுபிடிக்கப்பட்டதாகவும், லண்டனில் இருந்து இது வாங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை 12.07-2025 ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும், தனி வட்டாட்சியர், வழங்கல் அலுவலர்களால் குறைதீர் முகாம் நடத்தப்படவுள்ளது. குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை / நகல் அட்டைகோரும் மனுக்களை பதிவு செய்து பொதுமக்கள் தங்களுடைய குறைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 19.07.2025 சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் மதியம் 3.00 மணிவரை திண்டிவனம்புனித அன்னாள் கலை & அறிவியல் கல்லூரி, நடைபெற உள்ளது. இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கத்திற்கு திறன்மிக்க சமூக தொண்டாற்றுவதில் ஆர்வமுள்ள கிறிஸ்துவ சமுதாயத்தை சேர்ந்தோர் வரும் ஜூலை 18ஆம் தேதிக்குள் மாவட்ட சிறுபான்மையினர நல அலுவலகத்தில் பெயர், முகவரி, கல்வித் தகுதி, குடும்ப விபரம் மற்றும் சமூகத் தொண்டுகள் ஆகிய சுய விபரங்களோடு விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் முதல் சென்னை வரை 167 கி.மீ தூரத்திற்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கக்கூடிய புதிய அதிவேக ரயில் சேவைக்கு தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம் நிறைவேறும்பட்சத்தில் விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு 1 மணி நேரத்தில் செல்ல முடியும். இந்த ரயில் விழுப்புரம் – திண்டிவனம் – காஞ்சிபுரம் – சென்னை வழி தடத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
▶விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (ஜூலை 12) குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது.
▶தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
▶ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
▶கருப்பு மை கொண்ட பேனா மட்டுமே அனுமதி.
▶காலை 9 மணிக்குள்ளேயே தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
▶வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய கூடாது.
தேர்வு எழுதும் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
மாவட்டக்கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம். விழுப்புரம் தனியார் பள்ளிகள் மா.கல்வி அலுவலர் சண்முகவேல் நெல்லை தொடக்கக்கல்வி மா.அலுவராகவும், திண்டிவனம் தொடக்கக்கல்வி மா.அலுவலர் அருள் விழுப்புரம் தனியார் பள்ளிகள் மா.கல்வி அலுவலராகவும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் விழுப்புரம் மா.தொடக்க கல்வி அலுவராக, கள்ளக்குறிச்சி தனியார் பள்ளிகள் மா.அலுவராக இருந்த துரைராஜ் நியமனம்செய்யப்பட்டு உள்ளார்.
இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, புதிய விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காப்பீடு, ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் வரையிலான செலவுகளை கவர் செய்யக்கூடியது. விபத்தில் உயிரிழந்தால் 100% காப்பீடு தொகை வழங்கப்படும். விபத்தில் எலும்புமுறிவு ஏற்பட்டால் ரூ.25,000 வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு விழுப்புரம் அஞ்சலகத்தை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க. <<17028551>>தொடர்ச்சி<<>>
▶18-65 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த காப்பீடை பெறலாம்.
▶ஆப்ஷன் 1 – ரூ.5 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.355 கட்டினால் போதும்.
▶ஆப்ஷன் 2 – ரூ.10 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.555கட்டினால் போதும்.
▶ஆப்ஷன் 3- ரூ.15 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.755 கட்டினால் போதும்
▶இந்த லிங்கில் <
விழுப்புரம் மாவட்டம். வளவனுார் அடுத்த வி.பூதூர் ஊராட்சியில், கிராம மக்கள் நேற்று 100 நாள் வேலை செய்து கொண்டு இருந்த போது, சாலையோரம் குழந்தையின் அழுகுரல் கேட்டு, துணியால் சுற்றப்பட்டு இருந்த குழந்தையை கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் குழந்தையை மீட்டு யார் அந்த குழந்தையை வீசி சென்றது என விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.