India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶️ ஈரோடு கலெக்டர்- 0424-2262444. ▶️காவல்துறை கண்காணிப்பாளர்-0424-2260100 ▶️ ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் 0424-2258312▶️ மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் 0424-2260455 ▶️மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்-0424-2252052 ▶️மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் 0424-2260255. இது போன்ற முக்கிய எண்களை SHARE பண்ணுங்க
பெருந்துறை அருகே விஜயமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் கணேஷ் ராஜ்(40). இவர் சம்பவத்தன்று மனைவி ஜானகியை கட்டையால் அடித்து கொன்று விட்டு நாடகம் ஆடினார். இந்த கொலையை விசாரித்த பெருந்துறை போலீசார், பிரேத பரிசோதனை அடிப்படையில் கணேஷ்ராஜ் கட்டையால் அடித்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. இந்த உண்மையை ஒத்துக் கொண்ட கணேஷ் ராஜை நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஈரோடு மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) தொடர்பு எண்கள் ஈரோடு- 0424-2268087, ஈரோடு நகரம்-04242269100, பவானி-04256-230200, சத்தியமங்கலம்-04295-222226, பெருந்துறை-04294-222343, கோபி- 04285222027 உங்கள் பகுதியில் உள்ள காவல்துறைக்கு புகார் மற்றும் கோரிக்கைகளை இதன் வாயிலாக தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க
ஈரோடு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், மற்றும் காரைவாயக்கால் மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த மாதம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. திருவிழாவிற்கு வந்த பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக தற்காலிக உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. உண்டியல் என்னும் பணி நேற்று 30-4-2025 கோவிலில் நடைபெற்றது. தற்காலிக உண்டியலில் மட்டும் மொத்தமாக 6,82,000 ரூபாய் உண்டியலில் இருந்ததாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கோபி, பெருந்துறை, கொடுமுடி, பவானியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் (BFSI Process Lead) காலிபணியிடங்கள் உள்ளது. இப்பணிக்கு டிகிரி முடித்த 18 வயது முதல் 25 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க, <
அந்தியூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட செம்புளிச்சாம்பாளையம், மேற்குக்கும், கூத்தாடியூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அந்தியூர் தெற்கு ஒன்றியத்தலைவர் சேகர் தலைமையில் பா.ம.க.வினர், சித்திரை முழுநிலவு மாநாட்டு அழைப்பிதழைக் கொடுத்து மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார்கள். அப்படி மேற்குக்காடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அழைப்பிதழைக் கொடுத்தபோது அவர்கள் மாநாட்டிற்கு உறுதியாக வருவதாக தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டம் நகர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கஸ்தூரி ரங்கன் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக கஸ்தூரி ரங்கர் அனந்த சயன கோலத்தில் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், கோப குணம் மாறும், மன நிம்மதி உண்டாகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
ஈரோட்டில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தை(நீட்ஸ்) செயல்படுத்துகிறது. இத்திட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி அல்லது ஐ.டி.ஐ., படித்தோர், இளங்கலை பட்டம் பெற்ற, 21 முதல் 55 வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். மேலும் மகளிர், சிறுபான்மையினர் முன்னுரிமையும் அளிக்கப்படுகிறது. விண்ணப்பிக்க இந்த <
ஈரோடு, தமிழக காவல்துறையில், 245 எஸ்.ஐ,.க்களுக்கு, இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு கிடைத்துள்ளது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் எஸ்.ஐ.,க்களாக பணியாற்றி வந்த ராம்பிரபு (ஈரோடு-தனிப்பிரிவு), சங்கர், சகாதேவன், பிரகாஷ் (ஈரோடு கியூ பிராஞ்ச்), ரம்யா(ஈரோடு சி.பி.சி.ஐ.டி.,), மேனகா (ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு) ஆகியோர் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை டி.ஜி.பி. பிறப்பித்துள்ளார்.
ஈரோடு: பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மனம், உடல், பாலியல் சார்ந்த அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்களும், தேர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட தகவல்களை பெற 14417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.