Tirunelveli

News July 8, 2025

நெல்லை: பாங்க் ஆப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு

image

நெல்லை: பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் உள்ளூர் வங்கி அலுவலர் (Local Bank Officer) பணிக்காக தமிழகத்திற்கு 60 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 24ம் தேதி கடைசி நாளாகும். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை சம்பளம் வழங்கப்படும். நெல்லையில் தேர்வு நடைபெறுகிறது. விண்ணப்பிக்க இங்கே <>க்ளிக்<<>> செய்யவும்.

News July 8, 2025

நெல்லை மாநகரில் 21ஆம் தேதி வரை போலீஸ் தடை உத்தரவு

image

திருநெல்வேலி மாநகரில் இன்று நள்ளிரவு முதல் ஜூலை 21, 2025 வரை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, அனுமதியின்றி பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், தர்ணா, ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது அமைதி மற்றும் மக்கள் நலன் கருதி இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

News July 7, 2025

மாநகர காவல் இரவு ரோந்து பணி அதிகாரிகள் விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (ஜூலை 7) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர், விபரம், காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News July 7, 2025

மாவட்டத்தில் இன்று இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

image

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (ஜூலை 7) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News July 7, 2025

குதிரையில் மிடுக்காக பரிவேட்டைக்கு சென்ற சுப்ரமணிய சுவாமி

image

நெல்லையப்பர் திருக்கோவிலில் ஆனி பெருந்திருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8ம் திருநாளான இன்று காலை சுவாமி அம்பாளுக்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து சுவாமி நடராஜர் பச்சை சாத்திய கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். பின்னர் மதியம் சுப்பிரமணிய சுவாமி குதிரை வாகனத்தில் பரிவேட்டை சென்றார். இதனை நூற்றுக்கணக்கான பக்தர்கள் கண்டு கழித்தனர்.

News July 7, 2025

நெல்லை: ஆன்லைன் ரம்மியால் உயிரை மாய்த்த வாலிபர்

image

நெல்லை மாவட்டம், சீவலப்பேரி அருகே மேல பாலாமடையைச் சேர்ந்த ஆறுமுக கனி (33), டிரைவரான இவர், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்சம் ரூபாய் இழந்து கடனில் சிக்கினார். இதனால் விரக்தியடைந்த அவர் விஷம் குடித்து மயங்கினார். உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (ஜூலை.07) அதிகாலை உயிரிழந்தார்.

News July 7, 2025

நெல்லை: கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு (1/1)

image

தமிழ்நாடு வருவாய்த் துறையில் 2,299 கிராம உதவியாளர் (தலையாரி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில். நெல்லைக்கு 45 காலிப் பணியிடங்கள் உள்ளது. விண்ணப்பிக்க ஆகஸ்ட் 4 கடைசி நாளாகும். இப்பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், தமிழில் எழுத/படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மாத சம்பளம்: ரூ.11,100 முதல் 35,100 வரை வழங்கப்படும். சைக்கிள்/ டூவீலர் ஒட்டத் தெரிந்தால் கூடுதல் மதிப்பெண். <<16974235>>மேலும் அறிய<<>>

News July 7, 2025

நெல்லை: கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு (1/2)

image

▶️விண்ணப்பதாரர்களுக்கு திறனறிவு தேர்வு, நேர்காணல் ஆகியவை நடத்தப்படும்.

▶️அனைவரும் கட்டாயம் 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

▶️மேலும், தேர்வர்கள் அப்பகுதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

▶️ விவரங்களுக்கு நெல்லை கலெக்டர் அலுவலகம் மற்றும் அருகேயுள்ள தாலுகா அலுவலகத்தை நேரில் அணுகலாம்.

News July 7, 2025

சொத்து தகராறில் பஞ்சாயத்து தலைவிக்கு அரிவாள் வெட்டு

image

களக்காடு அருகே உள்ள சேதுராயபுரத்தை சேர்ந்த சாமுவேல் மற்றும் இவரது சகோதரர் லட்சுமணபாண்டிக்கு இடையே பூர்வீக சொத்து சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. நேற்று (ஜூலை.06) இரு குடும்பத்திற்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதனை தடுக்க முயன்ற சீவலப்பேரி பஞ்சாயத்து தலைவி அய்யம்மாள் என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. களக்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News July 7, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [ஜூலை 06] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் ரகுபதிராஜா இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

error: Content is protected !!