India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [ஜூலை 06] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் ரகுபதிராஜா இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
நெல்லையப்பர் கோயில் ஆனித்தேரோட்டத்தை முன்னிட்டு வரும் 8ம் தேதி சுமார் 1000க்கும் மேற்பட்ட போலீசார் மாநகர கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தேரோட்ட பாதுகாப்பு பணிக்காக பிரத்யேகமாக 3 ட்ரோன்கள், CCTV உட்பட 300க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மேலும் 10 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் இன்று அறிவித்துள்ளது. *ஷேர்
திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [ஜூலை 06] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் தர்ஷிஐஆ இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில்; திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விபத்துகளின் மூலம் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு அரையாண்டில் விபத்துகளின் மூலம் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை 19% குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நாங்குநேரியைச் சேர்ந்த கண்ணன், பார்வதிநாதன் ஆகியோர் நெல்லையிலிருந்து நாங்குநேரி சென்ற பஸ்ஸில் ஏறிய போது பைபாஸ் வழியாக செல்லும் என நடத்துனர் கூறினர். பின்னர் இருவரையும் பஸ் நிலையத்தில் இறக்கி விட்டார். மேலும் டிக்கெட் கட்டணத்தில் ரூ.4 கூடுதலாக பெற்றார். இது குறித்து இருவரும் அளித்த புகாரின் படி நெல்லை நுகர்வோர் குறைதீர் ஆணையம் விசாரித்து நடத்துனர் ரூ.12 ஆயிரம் வழங்க உத்தரவிட்டது.
நெல்லையில் ரேஷன் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட 25 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உரிமையாளர்கள் ஆவணங்கள், ஆதார் அட்டையுடன் மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஆஜராகி, அபராதம் செலுத்தி வாகனங்களை மீட்கலாம். உரிமை கோரப்படாவிட்டால், வாகனங்கள் ஏலம் விடப்படும் என குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நெல்லை மக்களே இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6,238 டெக்னீசியன் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10, 12, ஐடிஐ முடித்தவர்கள் இந்த <
கங்கைகொண்டான் சிப்காட்டில் தொழில் பூங்கா வேகமாக வளர்ந்து வருகிறது. இங்கு மேலும் ஒரு தொழில் பூங்கா அமைக்கப்படுகிறது. இதை தொடர்ந்து நாங்குநேரி வட்டாரம் மறுகால் குறிச்சி, திருவரமங்மைபுரம் ஆகிய பகுதிகளில் 2260 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. கங்கைகொண்டான் மற்றும் மூலைக்கரைப்பட்டியிலும் தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும் இன்று (ஜூலை 05) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் சத்யராஜ் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
நெல்லையப்பர் கோயில் ஆனி பெரும் தேர்த் திருவிழா நடைபெற்று வருகிறது. முக்கிய விழாவான தேரோட்டம் வருகிற செவ்வாய்க்கிழமை 8ஆம் தேதி காலை நடைபெறுகிறது. இதில், லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு வசதியாக காவல்துறை சார்பில் அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதை தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.