India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திமுக ஆட்சிக்கு உள்ள செல்வாக்கை கண்டு இபிஎஸ் விரக்தியின் உச்சத்துக்கே சென்றுவிட்டார் என ஆர்எஸ் பாரதி விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026-ல் மட்டுமல்ல இனி எப்போதும் அதிமுகவால் வெற்றிபெற முடியாது. எங்களை குறை கூறுவதற்கு கேடுகெட்ட ஆட்சி நடத்தியவருக்கு அருகதை இல்லை. இப்படி கதைவிட்டால் மக்கள் நம்புவார்கள் என நினைக்கிறார். எங்கள் காதுகளும் பாவம் இல்லையா? என சாடியுள்ளார்.
கொரோனா காலத்தில், இந்தியாவில் 2021-ல் கூடுதலாக 20 லட்சம் பேர் பலியாகி இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய உள்துறை அமைச்சக பதிவாளர் ஜெனரல் அலுவலகம், 2018-2021 உயிரிழப்புகள் குறித்த 3 புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் 2018-ல் 82 லட்சம், 2019-ல் 83 லட்சம், 2020-ல் 81 லட்சம், 2021-ல் 1.03 கோடி பேர் உயிரிழந்திருப்பதாக கூறியுள்ளது. இது 2020 உடன் ஒப்பிடுகையில் 20 லட்சம் அதிகம்.
இந்தியா – பாக்., இடையே தற்போதைய பதற்றத்துக்கு தொடக்கப்புள்ளி பஹல்காம் தாக்குதலே என்று வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இந்தியா பதற்றத்தை உருவாக்க முயலவில்லை என்றும், இந்தியாவின் பதிலடி பதற்றத்தை தூண்டாத வகையில், பயங்கரவாதிகள் மீது மட்டுமே நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார். மேலும், பஹல்காம் தாக்குதலுக்கு டி.ஆர்.எப்., அமைப்பு 2 முறை பொறுப்பேற்றதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
+2 பொதுத்தேர்வில் 2 மாணவர்கள் மாநில அளவில் 599 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளனர். பழனியை சேர்ந்த மாணவி ஓவியாஞ்சலி ஆங்கிலத்தை (99) தவிர, மற்ற அனைத்து பாடத்திலும் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தார். அதேபோல், தாராபுரத்தை சேர்ந்த மளிகைக் கடைக்காரரின் மகன் ராகுல் என்பவரும் ஆங்கிலத்தை (99) தவிர, மற்ற அனைத்து பாடத்திலும் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தார்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், OTT தளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. ஏற்கெனவே, பாகிஸ்தான் YouTube சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், Amazon Prime, Netflix, ZEE5, JioHotstar, SonyLIV உள்ளிட்ட OTT தளங்களில் உள்ள பாகிஸ்தானின் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள், பாடல்களை உடனடியாக நீக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலின் பதிலடியை தாங்கிக்கொள்ள முடியாத பாகிஸ்தான், உலகம் முன்பு ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறது. மரணமடைந்தவர்களின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற பாகிஸ்தானின் ஜனாதிபதி, பிரதமர், ராணுவத் தலைவர் மிகவும் உணர்ச்சிகரமாக காணப்பட்டனர். நீங்களே, அந்த போட்டோஸை பாருங்க. இந்தியாவிற்கு எப்படி பதிலடி கொடுப்பது என தவிப்பும், பயத்தால்தான் இப்படி ரியாக்ட் செய்கின்றனர் என ட்ரோல்ஸ் பறக்கிறது.
24 கேரட் தங்கம் விலை இன்று 1 கிராம் ₹60 அதிகரித்து, ₹9,960ஆகவும், 10 கிராம் ₹600 உயர்ந்து, ₹99,600 ஆகவும் விற்கப்படுகிறது. இதேபோல், 22 கேரட் தங்கம் விலை இன்று 1 கிராம் ₹55 அதிகரித்து, ₹9,130-க்கு விற்பனையாகிறது. 10 கிராம் ₹550 உயர்ந்து, ₹91,300-க்கு விற்கப்படுகிறது. இதனுடன் செய்கூலி, சேதாரம், மாநில, மத்திய ஜிஎஸ்டி வரிகளை சேர்த்து நகை வாங்குகையில் 10 கிராம் ₹1 லட்சத்தை தாண்டியுள்ளது.
70 வயது மூதாட்டி 12-ம் வகுப்பில் 348 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். கோவையை சேர்ந்த ராணிக்கு கணவர் மறைவுக்கு பிறகு படிப்பில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. வீட்டில் இருந்தபடியே படித்து 12-ம் வகுப்பு தேர்வு எழுதியவர் 348 மதிப்பெண் உடன் தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழில் 89 மதிப்பெண்களும் ஆங்கிலத்தில் 50 மதிப்பெண்களும் வரலாற்றில் 52 மதிப்பெண்களும் எடுத்துள்ளார். ராணியின் ஆர்வத்தை பாராட்டலாமே..
மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் மாதந்தோறும் பெண்களுக்கு ₹ 1,000 மாநில அரசு வழங்கி வருகிறது. இந்தத் திட்டம் வருகிற ஜூன் மாதம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. அப்போது புதிதாக ரேஷன் அட்டைகள் வாங்கிய குடும்ப பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. திமுக அரசின் ஆட்சியில் 18.46 லட்சம் புதிய அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு அரசு முன்னுரிமை அளிக்கலாம் எனத் தெரிகிறது.
நடிகை சமந்தா இயக்குநர் ராஜை டேட் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனை சமந்தாவின் சமீபத்திய போஸ்ட் உறுதிப்படுத்துவது போல உள்ளது. அவரின் தயாரிப்பில் உருவான, ‘சுபம்’ படத்தின் ப்ரோமோஷன் குறித்து பதிவிட்டுள்ள போட்டோக்களில் சமந்தாவுடன் ராஜும் இருக்கிறார். மேலும், கேப்ஷனில் ‘ஒரு நீண்ட பயணத்திற்குப் பிறகு, we’re here.. for new beginnings’ என்றும் சமந்தா குறிப்பிட்டுள்ளார். ஒருவேள இருக்குமோ..?
Sorry, no posts matched your criteria.