India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராம துளசி பச்சை நிறத்திலும், கிருஷ்ண துளசி ஓரளவு பழுப்பு மற்றும் ஊதா நிறத்திலும், குடை வடிவத்திலும் காணப்படுகிறது. ராம துளசி மிகவும் லேசான நறுமணத்தை கொண்டுள்ளது, அதே நேரத்தில் கிருஷ்ண துளசி மிகவும் வலுவான நறுமணத்தை கொண்டுள்ளது. வீட்டின் வடகிழக்கு திசையில், கிருஷ்ண துளசியை நடுவது வீட்டின் நிதி நிலைமையை பலப்படுத்தும் என நம்பப்படுகிறது. இத்தகவலை அனைவருக்கும் பகிரவும்.

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் போட்டியிட போவதாக தவெக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இதையடுத்து அவரை எதிர்த்து போட்டியிட தகுதியான வேட்பாளரை தேடும் வேட்டையில் திமுக இறங்கியுள்ளதாம். அதன்படி வடசென்னையில் பலமாக உள்ள சேகர்பாபு பெரம்பூரிலும், கிறிஸ்துவ சமயத்தை சேர்ந்த இனிகோ ருதயராஜை திருச்சி கிழக்கிலும் வேட்பாளராக களமிறக்க திட்டமிட்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திருச்சி பொதுக்கூட்டத்தில் TTV தினகரன் பேசியது கவனம் பெற்றுள்ளது. PM மோடி டெல்லியில் இருந்து ஆட்சி செய்தாலும், அவர் குஜராத்தை சேர்ந்தவர்; குஜராத் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்துடன் தொடர்பு கொண்ட நிலம் என்றார். பாரி, அதியமான் போன்ற வேளிர் இனத்தை சேர்ந்த திராவிட மன்னர்கள் ஆட்சி செய்த பகுதியை சேர்ந்தவர் மோடி எனவும், TN-க்கும், PM மோடிக்கும் தொப்புள் கொடி உறவு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

13 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் அக்கவுண்ட்களை பெற்றோர் மேற்பார்வையிடும் வசதியை WhatsApp அறிமுகம் செய்துள்ளது. குழந்தைகளின் WhatsApp அக்கவுண்ட் உடன் QR மூலம் பெற்றோர்கள், தங்கள் அக்கவுண்ட்டையும் இணைக்கலாம். அப்போது பெற்றோர்களுக்கு 6 இலக்க PIN கிடைக்கும். இதன்மூலம், குழந்தைகளின் Chat-ல் ஒருவரை சேர்ப்பது, தடை செய்வது ஆகியவற்றை பெற்றோர்களே செய்யலாம். குழந்தைகள் Calls & Messages மட்டுமே செய்ய முடியும்.

இந்தியாவுக்கு 30,000 டன் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. UAE-ல் இருந்து குஜராத்தின் கண்ட்லா துறைமுகம் நோக்கி புறப்பட்ட தாய்லாந்து கப்பல் மீது ஹார்முஸ் நீரிணையில் வைத்து தாக்குதல் நடந்துள்ளது. எனினும் எரியும் கப்பலில் இருந்து 20 ஊழியர்கள் தப்பினர். ஏற்கெனவே பெட்ரோல், டீசல் குறித்த அச்சம் நாட்டில் தலைவிரித்தாடும் நிலையில், இத்தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டி20 WCல் சிஎஸ்கே வீரர்கள் சஞ்சு & துபே இருவரும் சிறப்பாக செயல்பட்டதால் தாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம் என அந்த அணியின் CEO காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். அப்போது தோனி குறித்து பேசிய அவர், IPL 2026 சீசனின் அனைத்து போட்டிகளிலும் தோனி பங்கேற்பார்; அதேநேரம் அவர் விக்கெட் கீப்பராக விளையாடுவாரா? இம்பேக்ட் பிளேயராக விளையாடுவாரா? என்பதை அணி கிரிக்கெட் தலைமை முடிவு செய்யும் எனவும் கூறியுள்ளார்.

போர் காரணமாக LPG சிலிண்டர்களுக்கு தட்டுபாடு நிலவும் நிலையில், வதந்திகளை நம்ப வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. LPG தட்டுப்பாடு காரணமாக வணிக சிலிண்டர்களின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது; வீட்டு உபயோக LPG சிலிண்டர்கள் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்றும், வீட்டு நுகர்வோருக்கு எந்தவிதமான தட்டுப்பாடும் இன்றி சிலிண்டர் தொடர்ந்து கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

▶மார்ச் 12, மாசி 28 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 12:30 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: நவமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்

PM மோடி 2029-க்கு பிறகு அவரது பதவி நாற்காலியில் இருந்து தூக்கி எறியப்படுவார் என வைகோ பேசியுள்ளார். தனி சின்னத்தில் போட்டியிடுவதற்காக சமரசம் செய்யப்பட்டதா என்ற கேள்விக்கு<<19354958>>, கட்சியின் பதிவை பாதுகாப்பதற்காக ஒரு தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறோம்.<<>> இதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார். தொகுதி பங்கீட்டில் சுமுகமான உடன்பாடு ஏற்பட்டு தாங்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி சூட்டில் <<19359220>>ஜம்மு காஷ்மீர் Ex CM ஃபரூக் அப்துல்லா மயிரிழையில் உயிர் தப்பியது<<>> குறித்து ஓமர் அப்துல்லா சந்தேகம் தெரிவித்துள்ளார். தன் தந்தைக்கு மிக நெருக்கமாக குண்டு பாய்ந்ததாகவும், எனினும் சுட்டவரை தடுத்து பாதுகாப்பு குழு படுகொலை முயற்சி தோல்வியடைய செய்ததாகவும் கூறியுள்ளார். அத்துடன் Z+ NSG பாதுகாப்பு உடைய Ex CM-ஐ எப்படி ஒருவரால் நெருங்கிச் செல்ல முடிந்தது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.