India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்சி மக்களே (Bharatgas, HP, Indane) கேஸ் சிலிண்டர் புக் பண்ண இனி ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும்.
Bharatgas: 77150 12345
HP: 94936 02222
Indane: 84549 55555
இந்த எண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தா… கேஸ் புக் பண்ண SMS உங்க போனுக்கு வரும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…!

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலின் உப கோயிலான, ஆதி மாரியம்மன் கோயில் மாசி மாத தேரோட்டத்தை முன்னிட்டு பூச்சொரிதல் விழா கடந்த 8-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசி தேரோட்டம் வரும் மார்ச் 1-ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு அமேசான் வலை சேவைகள் மறு தொடக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு குறித்து, இரண்டு மாத பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சி முடிந்த பின்னர் சான்றிதழ் மற்றும் தகுதி உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்யப்படும். இது குறித்த விவரங்களுக்கு 0431-2463969 என்ற எண்ணில், தாட்கோ அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது <

திருச்சி மக்களே இன்றைய சூழலில் கையில் பணம் வைத்து செலவு செய்வதை விட போன் மூலமாகவே அதிக பண பரிவர்த்தனைகள் நாம் மேற்கொள்கிறோம். இப்படியான நேரத்தில் நீங்களோ அல்லது உங்களது நண்பர்களோ யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். G-Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

திருச்சி மக்களே இன்றைய சூழலில் கையில் பணம் வைத்து செலவு செய்வதை விட போன் மூலமாகவே அதிக பண பரிவர்த்தனைகள் நாம் மேற்கொள்கிறோம். இப்படியான நேரத்தில் நீங்களோ அல்லது உங்களது நண்பர்களோ யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். G-Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

மதுரை மாவட்டம் நாகமங்கலத்தை சேர்ந்த நிஜாமுதீன் என்பவர் பெங்களூரில் தனியார் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் இன்று மாலை டூவீலரில் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாரம் அருகே சென்ற போது பின்னால் வந்த கார் மோதியதில் எதிர்பாராதவிதமாக நிஜாமுதீன் தலை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த துவரங்குறிச்சி போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சியை சேர்ந்த தேசிங்கு ராஜன் என்பவர் தனது நண்பர்களுடன் திருச்சியில் இருந்து ஆன்மீகப் பயணமாக தென்கைலாயம்” எனப் போற்றப்படும் கோவை வெள்ளியங்கிரி மலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் தேசிங்கு ராஜன் 5-வது மலையான சந்தன மலையை எட்டியபோது, திடீரென கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கிச் சரிந்து விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்ட காவல்துறைக்கு 2025-26 ஆம் ஆண்டுக்கு தேவையான சாலை பாதுகாப்பு உபகரணங்கள் விநியோகிக்க, தகுதி வாய்ந்த அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் இருந்து டெண்டர் வரவேற்கப்படுகின்றன. மதிப்பீடுகள் வந்து சேர பிப்.24 கடைசி நாளாகும். உபகரணங்கள் தொடர்பான விரிவான விவர குறிப்புகளை பெறுவதற்கு, திருச்சி மாவட்ட எஸ்பி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என எஸ்பி செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி பெருங்கோட்ட அளவிலான நிர்வாகிகள், சட்டமன்ற பொறுப்பாளர்கள், ஆலோசனைக் கூட்டம், திருச்சி மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு, திருச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பரப்புரை கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினர்.
Sorry, no posts matched your criteria.