India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெடரல் வங்கியில் காலியாக உள்ள Associate Officers (Sales) பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த 21-32 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.38,500 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கு<

கொல்லங்கோடு அருகே பனவிளையை சேர்ந்தவர் விஜயன் (51). தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் வீட்டில் தூங்க சென்ற அவர் நேற்று திடீரென வீட்டிற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தகவல் அறிந்து வந்த கொல்லங்கோடு போலீசார் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

காஞ்சிரக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரனும் அவரது நண்பரான வின்சென்ட் ராசும் பிப்.20ம் தேதி ஒன்றாக சேர்ந்து மது அருந்தினர். அப்போது ஏற்பட்ட தகராறில் ஜெயச்சந்திரனை கால்வாய் தண்ணீரில் மூழ்கடித்து வின்சென்ட் ராஜ் கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிகிச்சையில் இருந்த ஜெயச்சந்திரன் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து கொற்றிக்கோடு போலீசார் வழக்குப்பதிந்து வின்சென்ட் ராஜை கைது செய்தனர்.

குமரி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <

தக்கலை அருகே காட்டாத்துறை அடுத்த ஆதிச்சன் விளையை சேர்ந்தவர் பால்ராஜ் (76). ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் நேற்று மாலையில் காட்டாத்துறை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த கேரள அரசு பேருந்து இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பால்ராஜ் உயிரிழந்தார். இதுதொடர்பாக தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsAppல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்தார். வரும் வழியில் குமாரபுரம் அருகே உள்ள வீட்டு வசதி வாரியத்திற்கு உட்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை இன்று திறந்து வைத்தார். பின்னர் அங்கு நின்று இருந்தவர்களுடன் அவர் கலந்துரையாடினார். மேலும், பெண்களிடம் அரசின் திட்டங்கள் முறையாக கிடைக்கிறதா? என்று கேட்டறிந்தார்.

குமரி மாவட்டத்தில் கந்துவட்டி தொழில் அதிகம் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. எனவே, பொதுமக்கள் கந்துவட்டியால் பாதிக்கப்பட்டாலோ அல்லது வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டாலோ மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரிலோ அல்லது PUBLIC FEEDBACK CENTRE எண்கள் 7708239100, 8122223319 மூலமாக தொடர்பு கொள்ளலாம். புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. SHARE IT

முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக இன்றும், நாளையும் குமரி மாவட்டத்திற்கு வருகை தந்து பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்கவுள்ளார். இதை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக இன்றும், நாளையும் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பறக்க விடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குமரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் சுய உதவி குழுக்களுக்கு ரூ.15 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு குழு தொடங்கி 6 மாதங்கள் ஆகியிருக்க வேண்டும். பிசி, எம்பிசி, சீர்மரபினர்கள் இந்த கடனை பெற முடியும். மேலும் இந்த கடனை பெற கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் அலுவலகம் கூட்டுறவு வங்கிகள், கடன் சங்கங்கள் <
Sorry, no posts matched your criteria.