India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

துண்டத்துவிளை பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (21). பட்டதாரியான இவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற நிலையில் வேலை பிடிக்காமல் 1மாதத்திற்கு முன் திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் ஒரு பெண்ணை காதலித்த அவர் திருமணம் செய்ய சம்மதம் கேட்டதற்கு பெண் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று அவர் அந்த பெண்ணிற்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு

குமரி மக்களே, (Bharatgas, HP, Indane) கேஸ் சிலிண்டர் புக் பண்ண இனி ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும்.
Bharatgas: 77150 12345
HP: 94936 02222
Indane:84549 55555
இந்த எண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் போது கேஸ் புக் பண்ண SMS உங்க போனுக்கு வரும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க.

குமரி ஆட்சியர் அழகு மீனா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பு – தமிழக முதல்வர் குமரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால் 24.02.2026 மற்றும் 25.02.2026 ஆகிய நாட்களில் குமரி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி கன்னியாகுமரி மாவட்டத்தில் ட்ரோன்கள் & இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க விடும் நபர்கள் மீது சட்டப்படி மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் இன்று 23.02.2026 தொடங்குகிறது. இந்த முகாம் 28.02.2026 தேதி வரை அனைத்து அங்கன்வாடி மையங்களிலும், துணை சுகாதார நிலையங்களிலும் வைத்து நடைபெறும். 6 மாதம் முதல் 11 மாதம் வரையிலான குழந்தைகளுக்கு நடைபெறுகிறது என்று குமரி ஆட்சியர் அழகு மீனா தெரித்துள்ளார்.

குமரி மக்களே, SIR இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. உங்களுக்கு ஓட்டு இருக்கான்னு தெரியலையா? <

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளையும் நாளை மறுதினமும் குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதனை ஒட்டி குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேற்று செய்தியாளர்களிடம் பேசும் போது முதலமைச்சர் வருவதை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருப்பதாக அவர் கூறினார்.

குமரி மக்களே; உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், குமரி மாவட்ட மக்கள் 8903331912 என்ற எண்ணில் மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இதை மறக்காம SHARE பண்ணுங்க.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளையும் நாளை மறுநாளும் குமரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதையொட்டி குமரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொட்டாரம் அனைத்து வாகனங்களும் மகாதானபுரம் ரவுண்டானா, முருகன் குன்றம் வழியாக அனுமதிக்கப்படும் குமரி ரவுண்டானாவிற்கு எந்த வாகனமும் அனுமதிக்கப்படமாட்டாது. நாயுடு ஆஸ்பத்திரி முதல் ஈத்தாமொழி விலக்கு வரை எந்த வாகனமும் அனுமதி இல்லை.

சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் 3 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலாக பணியாற்றி வரும் SI-க்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் குமரி மாவட்டத்தில் பணியாற்றி வந்த 60 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ராஜாக்கமங்கலம் ஜான் போஸ்கோ, தக்கலை ஆண்டோ கெவின், நேசமணி நகர் விஜயன், கன்னியாகுமரி வினிஷ்பாபு, ஆசாரிப்பள்ளம் சத்திய சோபன், ராஜன் உட்பட 60 பேர் மாற்றப்பட்டுள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை, நாளை (பிப்.24, 25) முடிவுற்ற (ம) புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்காக குமரி வருகிறார். சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடியில் இருந்து குமரி வரும் முதல்வர் அன்று மாலை திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நினைவு அலங்கார வளைவு, கல்லடிவிளையில் முதல்வர் படைப்பகம், முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை (ம) தியாகி பொன்னப்பநாடார் சிலை ஆகியவற்றை திறந்து வைக்கிறார்.
Sorry, no posts matched your criteria.