Tamilnadu

News January 2, 2026

புதுக்கோட்டை: சாலை விபத்தில் இளைஞர் உடல் நசுங்கி பலி

image

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ஆராங்கல் சாலையில் இன்று காலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி பலியானர். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த நமண சமுத்திரம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 2, 2026

நீலகிரி: விடுமுறை அறிவிப்பு!

image

நீலகிரியில் படுக இன மக்களின் குலதெய்வம் ஹெத்தையம்மன் ஆகும். ஜனவரி மாதத்தில் ஹெத்தையம்மன் பண்டிகை ஆண்டுதோறும் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ஹெத்தையம்மன் பண்டிகை அடுத்த மாதம் ஜனவரி 7-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி (7.01.2025) புதன்கிழமை அன்று உள்ளுர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.

News January 2, 2026

தாராபுரம் அருகே சோகம்

image

தாராபுரம் அருகே உள்ள கவுண்டையன் வலசு கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ன கண்ணன். இவரது மனைவி சுப்பம்மாள்(60). இவர் தனது உறவினரின் துக்க நிகழ்வுக்கு சென்று விட்டு மீண்டும் உப்புத்துறைபாளையம் பகுதிக்கு வருகை புரிந்து பஸுக்காக காத்திருந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் எதிர்பாராதமாக மோதியதில் பரிதாபமாக மூதாட்டி உயிரிழந்தார்.

News January 2, 2026

குஜிலியம்பாறை அருகே விபத்து: ஒருவர் உயிரிழப்பு

image

திண்டுக்கல், குஜிலியம்பாறை ஆலம்பாடி ஊராட்சி காடமநாயக்கனூரைச் சேர்ந்தவர் முனியாண்டி மகன் வினோத் (23). அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருடன், ஆர்.வெள்ளோடு – பிச்சனாம்பட்டி ரோட்டில் காரை ஓட்டிச் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து காடமநாயக்கனூர்டி முத்துச்சாமி காடு அருகே கார் கவிழ்ந்தது. இதில் வினோத் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 2, 2026

புதுவை: மானியம் பெறும் விவசாயிகள் பட்டியல் வெளியீடு

image

புதுவை, அரசு வேளாண்துறை கூடுதல் வேளாண் இயக்குனர் சண்முகவேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2025-ல் தோட்டக்கலைப்பயிர் சாகுபடி செய்து விண்ணப்பித்த விவசாயிகளின் பெயர் பட்டியல், சமுதாய தணிக்கை செய்வதற்காக, புதுவை பிராந்தியத்தின் சம்பந்தப்பட்ட உழவர் உதவியகங்களின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. வரும் 9ம் தேதி வரை இதில் ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம்.” என கூறியுள்ளார்.

News January 2, 2026

பெரம்பலூர்: ரூ.24 கோடிக்கு காய்கள் விற்பனை!

image

பெரம்பலூர் உழவர் சந்தையில் கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 5,170.64 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனைக்கு வந்துள்ளது. இவைகள் ரூ.24 கோடியே 99 லட்சத்து 61 ஆயிரத்துக்கு விற்பனையாகி உள்ளது. மேலும், 27,444 விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்துள்ளனர். இதுமூலம் 10,34,346 நுகர்வோர்கள் காய்கறிகள் வாங்கி பயனடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

News January 2, 2026

கோவை: குழந்தை, தாய் உயிரிழப்பு

image

கோவை அம்மன்குளம் பகுதியைச் சேர்ந்த சங்கீதா. குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்திருந்த போதும் மீண்டும் கர்ப்பமாகி GH-ல் சிகிச்சை பெற்று வந்தார். 6 மாதக் கருவில் இருந்த குழந்தை இறந்த நிலையில், அறுவை சிகிச்சைக்கு பின் உடல் நல மோசமடைந்து சங்கீதா உயிரிழந்தார். பின் சிகிச்சை அலட்சியம் காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டினர். பின் மருத்துவர்கள் உயர் ரத்த அழுத்தமே காரணம் என விளக்கம் அளித்தனர்.

News January 2, 2026

ராணிப்பேட்டை: நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார்!

image

சிறுகரும்பூர் பேருந்து நிறுத்தம் அருகில் நேற்று (ஜன.1) சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் கார் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதிலிருந்த படுகாயமடைந்த மற்றொரு நபர் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 2, 2026

சேலம் அருகே சுட்டு கொன்றவர் கைது!

image

குள்ளம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிவேல் மனைவி மகேஸ்வரி, 42. இவர் வளர்த்து வந்த நாயை, நேற்று மரத்தில் கட்டி வைத்திருந்தபோது, வலசையூர் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார், 30. நாட்டு துப்பாக்கியால் நாயை சுட்டுக்கொலை செய்தார். இது குறித்து மகேஸ்வரி புகாரின் பேரில் காரிப்பட்டி போலீசார் நேற்று நந்தகுமாரை கைது செய்து, அவரிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 2, 2026

தென்காசி மாவட்டத்தில் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்

image

தென்காசி மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் ஜனவரி மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் ஜனவரி 04.01.2026 மற்றும் 05.01.2026 ஆகிய தேதிகளில் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட உள்ளது. வயது முதிர்ந்தோர், மாற்று திறனாளிகள் உடைய குடும்ப அட்டைதாரர்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி பயனடையலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!