Tamilnadu

News January 2, 2026

செங்கை: தாய் கண் முன்னே சிறுவன் பரிதாப பலி!

image

தாம்பரம் அருகே உள்ள புது பெருங்களத்தூர் அன்னை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கற்பகவல்லி(35). இவர், நேற்று(ஜன.1) தனது 2 மகன்களுடன் கூடுவாஞ்சேரி நோக்கி மொபெட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஊரப்பாக்கம் அருகே அரசு பஸ்ஸை முந்திச் செல்ல முயன்ற போது, அரசு பஸ் மோதியதில் அவரடு மகன் பிரதீப்(11) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கற்பகவல்லியும், மற்றொரு மகனும் உயிர் தப்பினர்.

News January 2, 2026

காஞ்சிபுரம்: எந்திரத்தில் தலை சிக்கி கொடூர பலி!

image

உத்திரமேரூர் ஒன்றியம் ரெட்ட மங்கலம் கிஉராமத்தில் டைல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜாய்னர் அபின்(19) என்பவர் வேலை செய்து வந்தார். நேற்று முன் தினம் இரவு 7:30 மணிக்கு எந்திரத்தை இயக்கிக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக ஜாய்னரின் தலை அதில் சிக்கி, கொடூரமாக பலியானார். இதுகுறித்து உத்திரமேரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 2, 2026

வேலூர்: பெண்ணிடம் ரூ.1 கோடி மோசடி!

image

குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த பானுமதி (55), ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் பாஸ்கரன் (65) என்பவரிடம், கீழ்யாச்சூர் பகுதியில் 1.41 ஏக்கர் நிலத்தை வாங்குவதற்காக, ஒரு கோடி ரூபாயை கடந்த மே மாதம் வழங்கியுள்ளார். ஆனால், பாஸ்கரன் நிலத்தை அவருக்கு விற்காமல், வேறு ஒருவருக்கு விற்று விட்டு, பானுமதியிடம் வாங்கிய பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றி வந்தார். இதுகுறித்த புகாரில் பாஸ்கரனை போலீசார் கைது செய்தனர்.

News January 2, 2026

கள்ளக்குறிச்சியில் மூதாட்டி அடித்து கொலை!

image

சின்னசேலம் அருகே வசித்து வரும் கன்னியம்மாளுக்கும் (70), அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (60) மனைவி வள்ளிக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஏற்பட்ட வாய்தகராறில், ராஜேந்திரன் ஊதாங்குழலால் கன்னியம்மாளை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் வைத்து உயிரிழந்தார். இது குறித்த வழக்கில் ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர்.

News January 2, 2026

திருச்செங்கோட்டில் மோதல்: அதிரடி கைது!

image

குமாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கவுதம் பிரசாத்தை (24), புதுத்தெருவை சேர்ந்த தனுஷ்(19) முன்விரோதத்தில் கூட்டாளிகளுடன் தாக்கினார். இதில் காயம் அடைந்த அவர் தன்னை தாக்கியது குறித்து உறவினர்களிடம் தெரிவித்தார். இது இருதரப்பு மோதலாக மாறியது. இந்த மோதல் தொடர்பாக இருதரப்பை சேர்ந்த கார்த்திக் பிரசாத், பூவரசன், நந்தகுமார், கிஷோர், கார்த்தி, பிரசாந்த், தனுஷ் ஆகிய 7 பேரை தி.கோடு ரூரல் போலீசார் கைது செய்தனர்.

News January 2, 2026

திருச்செங்கோட்டில் மோதல்: அதிரடி கைது!

image

குமாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கவுதம் பிரசாத்தை (24), புதுத்தெருவை சேர்ந்த தனுஷ்(19) முன்விரோதத்தில் கூட்டாளிகளுடன் தாக்கினார். இதில் காயம் அடைந்த அவர் தன்னை தாக்கியது குறித்து உறவினர்களிடம் தெரிவித்தார். இது இருதரப்பு மோதலாக மாறியது. இந்த மோதல் தொடர்பாக இருதரப்பை சேர்ந்த கார்த்திக் பிரசாத், பூவரசன், நந்தகுமார், கிஷோர், கார்த்தி, பிரசாந்த், தனுஷ் ஆகிய 7 பேரை தி.கோடு ரூரல் போலீசார் கைது செய்தனர்.

News January 2, 2026

தருமபுரி: லாரி மீது வேன் மோதி விபத்து – 10 பேர் காயம்!

image

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கோவிலுக்கு சென்று திரும்பிய வேன், அலமேலுபுரம் அருகே முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில் திருப்பத்தூர் மாவட்டம், எல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (32), சுரேஷ் (36) வீரபத்திரன் (45), ஜெயபால் (40) மற்றும் டிராவல்ஸ் டிரைவர் விஜய் (22) உள்ளிட்ட 10 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 2, 2026

மயிலாடுதுறையில் மின்தடை அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டம் பாலையூ மற்றும் மேக்கிரிமங்கலம் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (ஜன.03) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. எனவே அங்கிருந்து மின்விநியோகம் பெறும் பாலையூர், பருத்திக்காடு, பெரட்டக்குடி, திருவாவடுதுறைம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என பாலையூர் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் ரேனுகா தேவி தெரிவித்துள்ளார்.

News January 2, 2026

தேனி: சாலை விபத்தில் முதியவர் பலி

image

கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் சுருளி (78). இவர் நேற்று (டிச.31) மாலை திண்டுக்கல்-குமுளி சாலையில் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்பொழுது இவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் சுருளி படுகாயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 2, 2026

தஞ்சாவூரில் மின்தடை அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், திருப்பனந்தல், திருப்புறம்பியம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.03) சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே அத்துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!