Tamilnadu

News January 7, 2026

கடலூர்: பஸ் ஸ்டாண்டில் கிடந்த பிணம்..

image

திட்டக்குடி பஸ் நிலையத்தில் நேற்று 75 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணமாக கிடந்துள்ளார். உடனே திட்டக்குடி போலீசார் இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரித்தனர். அதில், இறந்தவர் பெரம்பலூர் மாவட்டம், சின்னவெண்மணியை சேர்ந்த கொளஞ்சி (75) என்பதும், கடந்த 5 மாதங்களுக்கு முன் அவர் வீட்டைவிட்டு வெளியே வந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து இதுகுறித்து திட்டக்குடி போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

News January 7, 2026

கள்ளக்குறிச்சியில் துணிகரம் – பெண்ணுக்கு நடந்த சம்பவம்!

image

கள்ளக்குறிச்சி: ஏமப்பேரைச் சேர்ந்த பிரியா (38) டியூஷனில் இருந்த தனது மகள் சுவேதாவை (16) அழைத்துவர பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 2 மர்மநபர்கள், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில், அவரது கழுத்திலிருந்த தங்க சங்கிலியை பறித்தனர். அப்போது பிரியாவும் பிடித்து இழுத்த நிலையில் பாதியை மட்டும் (2.5 பவுன்) பறித்துச் சென்றனர். இது குறித்த புகாரில் SP அரவிந்த் நேரில் சென்று விசாரித்தார்.

News January 7, 2026

வேலூர்: அக்கா வீட்டிற்கு வந்த தம்பிக்கு நேர்ந்த சோகம்!

image

வேலூர்: ஆந்திராவைச் சேர்ந்த சீனிவாசலு (38), வேலூர் முள்ளிப்பாளையத்தில் உள்ள தனது அக்கா தமிழ் செல்வி வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் அங்குள்ள கிணற்றில் குளிக்கச்சென்றுள்ளார். அப்போது, நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 7, 2026

விழுப்புரத்தில் பரபரப்பு – குளத்தில் மிதந்த சடலம்!

image

விழுப்புரம்: புளிச்சப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் அகமத் கான். இவர் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென அகமத் கான் காணாமல் போனார். அதைத்தொடர்ந்து அவரது மகள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் வீட்டின் அருகேயுள்ள குளத்தில் சந்தேகத்தின் பேரில் தீயணைப்பு வீரர்கள் தேடினர். அப்போது அகமத் கான் சடலமாக கிடைத்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 7, 2026

சென்னையில் துடிதுடித்து பலி

image

காஞ்சிபுரம் முடிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (20). பிளம்பிங் வேலைக்காக வேளச்சேரிக்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது தனியார் மருத்துவமனையின் வேன் டிரைவர் திடீரென வேனின் கதவை திறந்ததால் அப்துல் ரகுமான் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இந்நிலையில், பின்னால் வந்த பின்னால் வந்த தனியார் பள்ளி வாகனம் அப்துல் ரகுமானின் தலையில் ஏறியதால் அவர் துடிதுடித்து உயிரிழந்தார்.

News January 7, 2026

ராஜபாளையத்தில் மாணவருக்கு அரிவாள் வெட்டு

image

ராஜபாளையம் பாரதிநகரைச் சோ்ந்தவா் கல்லூரி மாணவர் ஹரிஹரன். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த முனியராஜ் என்பவருக்கும் முன் பகை இருந்த நிலையில் நெசவாளா் குடியிருப்பு அருகே ஹரிஹரன் சென்றபோது வழிமறித்த முனியராஜ், அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் காயமடைந்த ஹரிஹரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தெற்கு காவல் நிலையத்தில் விசாரித்து வருகின்றனர்.

News January 7, 2026

அரியலூர் ஆட்சியர் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக் இயலாது. ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்காக புதிதாக உருவாக்கப்பட்ட இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவைத்துள்ளார்.

News January 7, 2026

நெல்லை மாநகரில் 89 பேர் குண்டர் சட்டத்தில் கைது

image

நெல்லை மாநகரில் கடந்த 2025 ஆம் ஆண்டு மொத்தம் 89 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதாக மாநகர காவல் துறை சார்பில் இன்று ஜன.6 தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 70 பேர் சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் விளைத்ததால் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். பாலியல் மற்றும் இணையதள குற்றவாளிகள் தலா இருவர். 14 பேர் கஞ்சா வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதானார்கள்.

News January 7, 2026

பெரம்பலூர்: விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

வேளாண் உட்கட்டமைப்பு பணிகளுக்கு வட்டி மானியத்துடன் கடன் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் மின் சந்தையுடன் கூடிய வினியோக தொடர்பு சேவை, சேமிப்பு கிடங்குகள், காளான் – தேனி வளர்ப்பு உள்பட பல்வேறு திட்டங்களுக்கு கடன் பெறலாம். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். மேலும், விபரங்களுக்கு பெரம்பலூர் வேளாண்மை துணை இயக்குனர் அலுவலகத்தை தொடர்புகொள்ளவும். ஷேர்

News January 7, 2026

நாமக்கல்லில் நாளை இங்கெல்லாம் மின்தடை!

image

நாமக்கல்லில் நாளை(ஜன.08) மின்பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக வையப்பமலை, அன்னாசிப்பட்டி, கருங்கல்பட்டிபிள்ளாநத்தம்,மொரங்கம், சீத்தக்காடு, எலச்சிபாளையம், ராமாபுரம்
பி.கே.பாளையம்,வளையப்பட்டி, குரும்பப்பட்டி,என்.புதுப்பட்டி,நல்லுார்,மேட்டுப்பட்டி வாழவந்தி, மோகனுார், ஜம்புமடை, ஒருவந்தூர், செவந்திப்பட்டி, அரூர்மேடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின்தடை

error: Content is protected !!