India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேவிநகர் பகுதியைச் சேர்ந்தவர் பெஞ்சமின்(81). இவர் ஐ.சி.எம்.ஆர் என்கிற மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று முன் தினம் தனது மொபட்டில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது லாரி மோதியதில் படுகாயமடைந்த அவரை , அக்கம்பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு போரூர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மாதேஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோ(59). விவசாயியான இவர், தனது வீட்டில் விஷம் அருந்து மயங்கிக் கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்த பாப்பாரப்பட்டி போலீசார், அவரது தற்கொலை காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மாதேஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோ(59). விவசாயியான இவர், தனது வீட்டில் விஷம் அருந்து மயங்கிக் கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்த பாப்பாரப்பட்டி போலீசார், அவரது தற்கொலை காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில், வருகிற ஜன.9 மற்றும் 10 தேதிகளில் கடுமையான மழைப்பொழிவு வர உள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்கள் மின் கம்பங்கள் மற்றும் பழைய கட்டிடங்கள் அருகே நிற்க வேண்டாம், மழையில் நனையாமல் தானியங்களை பாதுகாப்பான முறையில் வைத்திருக்க வேண்டும், கால்நடைகளை மின்கம்பங்கள் அருகில் செல்லாமல் பாதுகாக்க தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலூர் சரக போதைப்பொருள் ஒழிப்புக் குழுவால் பறிமுதல் செய்யப்பட்ட 1 நான்கு சக்கர வாகனம், 1 ஆட்டோ, 18 இருசக்கர வாகனங்கள் என 20 வாகனங்கள் வருகிற ஜன.12 அன்று ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்படுகின்றன. காலை 8 முதல் 12 மணி வரை பார்வையிட்டு, இருசக்கர வாகனத்திற்கு ரூ.5,000, நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.10,000 முன்பணம் செலுத்தி பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் ஏலத்தில் பங்கேற்கலாம்.

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தலைமையில், ஆட்சியராக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் பொங்கல் பரிசு தொகுப்பாக அரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ரூ.3000, வேட்டி, சேலைகள், நியாயவிலைக்கடைகள் மூலம் இன்று (ஜன.8) முதல் 1,93,921 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளன என ஆட்சியர் தெரிவித்தார்.

திருமண்டக்குடியைச் சேர்ந்த கூரியர் ஊழியரான புகழேந்தி, மருதாநல்லூரைச் சேர்ந்த சிபிசக்கரவர்த்தி நண்பர்களுடம் சேர்ந்து புகழேந்தியை தாக்கியதில் உயிரிழந்தார். புகாரின்பேரில் 5 பேர் மீது வழக்கு பதிந்து போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், சிபிசக்கரவர்த்தி, குபேரன், விக்னேஷ் ஆகிய மூவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நாளை 4,98,208 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அருணா தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 3000 ரொக்க பணம் மற்றும் பொங்கல் தொகுப்புகளை குடும்ப அட்டைதாரர்கள் தங்களுடைய அர்பன் விநியோக கடையில் கொடுக்கப்பட்டுள்ள டோக்கன் குறிக்கப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் சென்று பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டு கஞ்சாவுக்கு எதிரான நடவடிக்கையில் 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் ஒரு பெண் உட்பட 45 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 7.135 கிலோ கிராம் கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 நபர்களின் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆரணி, தண்டு மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த குப்பு (83) என்பவரிடம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், வீட்டுப் பிரச்சனையை தீர்க்க மேஜிக் செய்வதாக கூறியுள்ளார். அவரிடம் இருந்த 2 மூக்குத்திகளை வாங்கி கொண்டு, அங்கிருந்து தப்பினார். இதுகுறித்து ஆரணி நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
Sorry, no posts matched your criteria.