Tamilnadu

News January 8, 2026

BREAKING திருப்பூர்: தேர்வில் தோல்வியால் தற்கொலை

image

திருப்பூர், பி.என்.ரோடு பூலுவப்பட்டி பகுதியைச் சேர்ந்த சக்தி சரவணகுமார் -சிவசங்கரி தம்பதியின் மகள் தக்சிதாஸ்ரீ. இவர் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நடந்து முடிந்த அரையாண்டு தேர்வில் 2 பாடங்களில் குறைவான மதிப்பெண் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பெற்றோர் கண்டித்ததால் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

News January 8, 2026

தூத்துக்குடியில் 7 1/2 லிட்டர் கஞ்சா எண்ணெய் பதுக்கல்!

image

போதை பொருள் நடமாட்டதை தடுக்க தூத்துக்குடி நகர சரக துணை போலீஸ் எஸ்.பி ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில், கோயில்பிள்ளைவிளை, ஜார்ஜ் ரோடு பகுதியில் உள்ள வீடுகளில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 7 1/2 லிட்டர் கஞ்சா எண்ணெய் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக மரியநவமணி ஸ்மைலன் (37), மரிய அந்தோணி ஜேசுசகாயராஜ் (38) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News January 8, 2026

விழுப்புரம்: வாலிபர் தூக்கி வீசப்பட்டு பலி!

image

விழுப்புரம்: பூண்டியைச் சேர்ந்தவர்கள் விக்னேஷ் (20), அஜித்குமார் (18). நண்பர்களான இருவரும் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்துள்ளனர். நேற்று இருவரும் பைக்கில் விழுப்புரம் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அரசு பஸ் மோதியதில், இருவரும் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் அஜித்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். விக்னேஷ் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்பத்தியுள்ளது.

News January 8, 2026

செங்கல்பட்டு மக்களே பிப்ரவரியில் HAPPY NEWS

image

செங்கல்பட்டியில் ரூ.100 கோடி செலவில் கட்டப்படும் புதிய பேருந்து நிலையம் பிப்ரவரி மாத இறுதிக்குள் திறக்கப்படும். ஒரு பிரதான கட்டடம், 3 நுழைவாயில்கள், ஒரே நேரத்தில் 56 பேருந்துகள் நிறுத்தும் வசதி, தினம் 25,000 பயணிகள் பயன்பாடு, மலிவு விலை உணவகம், டார்மிடரி, மருத்துவ மையம், 34 கடைகள் மற்றும் பிற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர்கள், அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

News January 8, 2026

ராம்நாடு: சிக்கிய பலே திருடர்கள்.60 வழக்குகள் சிறையிலே திருட திட்டம்

image

R.S மங்கலம் அருகே பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட சிவகங்கை, வெள்ளைச்சாமி 35, திருவாடானை, அய்யப்பன் 56, ஆகிய இருவரையும் சில நாட்களுக்கு முன் பெரியகீரமங்கலத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மறைந்திருந்து போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது 60க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளதும், சிறையிலிருந்து திட்டம் தீட்டியிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

News January 8, 2026

ராம்நாடு: சிக்கிய பலே திருடர்கள்.60 வழக்குகள் சிறையிலே திருட திட்டம்

image

R.S மங்கலம் அருகே பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட சிவகங்கை, வெள்ளைச்சாமி 35, திருவாடானை, அய்யப்பன் 56, ஆகிய இருவரையும் சில நாட்களுக்கு முன் பெரியகீரமங்கலத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மறைந்திருந்து போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது 60க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளதும், சிறையிலிருந்து திட்டம் தீட்டியிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

News January 8, 2026

ஈரோடு: பொங்கல் பரிசு ரூ.3,000.. கலெக்டர் அறிவிப்பு

image

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை எதிர்வரும் 15.01.2026-ம் தேதியன்று சிறப்பாக கொண்டாடும் விதமாக பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கத்தொகை ரூ.3000 வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக புகார்கள் ஏதேனுமிருப்பின் 1967 மற்றும் 1800-425-5901 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களிலும் மற்றும் 0424-2252052 தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம் என ஈரோடு கலெக்டர் ச.கந்தசாமி தெரிவித்துள்ளார். (SHARE)

News January 8, 2026

முன்மாதிரி விருது: நாகை ஆட்சியர் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் அரசு உதவி பெறாமல் சுயமாக வாழ்க்கையில் முன்னேறிய திருநங்கைகளுக்கு முன்மாதிரி விருது அளிக்கப்பட உள்ளது. இந்த விருதுனை பெற விண்ணப்ப படிவங்களை <>awards.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, உரிய சான்றுகளுடன் வருகிற பிப்.18ஆம் தேதிக்குள் நாகை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News January 8, 2026

குமரியில் ரூ.1.60 கோடி அபராதம்..!

image

குமரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் குட்கா, பான் மசாலா விற்பனை போன்றவைகளுக்காக ரூ.1.60 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 950 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று (ஜன.7) தெரிவித்தனர். மேலும், தொடர்ந்து சோதனை நடைபெறும் எனவும் கூறினர்.

News January 8, 2026

கடலூர்: நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு

image

சிதம்பரம் மாரியப்பா நகரை சேர்ந்தவர் கலா (50). அண்ணாமலை பல்கலைக்கழக நூலகத்தில் பணிபுரிந்து வரும் இவர், நேற்று மாலை வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மாரியப்பா நகர் அருகே சென்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் கலா கழுத்தில் இருந்த 11 சவரன் செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!