Tamilnadu

News January 9, 2026

குமரி: முன்னாள் எம்.எல்.ஏ வின் பேரன் குண்டாசில் கைது

image

அஞ்சுகிராமம் அருகே தனியார் சொகுசு விடுதியில் பிறந்தநாள் விழா என்ற பெயரில் போதை விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது தமிழகத்தையே அதிர வைத்தது. இதில் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த குலசேகரம் பகுதியை சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ-வின் பேரன் கோகுல் கிருஷ்ணன்(34) உட்பட 8 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து கோகுலகிருஷ்ணன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

News January 9, 2026

ராமநாதபுரம்: 7330 பேர் விபத்தில் சிக்கினார்கள்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டு 108 அவசர ஊர்தி மூலம் 43,413 பேர் பயனடைந்துள்ளனர். அதன்படி விபத்தில் சிக்கியவர்கள் 7330, கர்ப்பிணிகள் 14643, இருதயம் பாதிப்பு 2656, சுவாச பிரச்னை 1836, வாதப் பிரச்னை 736, பச்சிளம் குழந்தைகள், தாய்மார்கள் 381 பேர் என மொத்தம் 43,413 பேர் பயன் அடைந்துள்ளதாக இராமநாதபுரம் மாவட்ட 108 சேவை மேலாளர் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

News January 9, 2026

விழுப்புரம்: விஜய்க்கு பேனர்-தவெக நிர்வாகிக்கு வழக்கு!

image

விழுப்புரம்: நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்யின் ஜன நாயகன் படம் வெளியாகவுள்ள நிலையில், விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் தவெக-வினர் அனுமதியின்றி பேனர் வைத்துள்ளனர். இந்நிலையில், பேனர் வைத்த தவெக பிரமுகர் ஹரி கிருஷ்ணன் மீது நேற்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 9, 2026

கோயம்புத்தூரை அதிர வைத்த கொலை

image

கோவையைச் சேர்ந்தவர் ஐயப்பன் (எ) பிரவீன் குமார் (24). மைசூரில் வேலை செய்து வந்த இவர் நேற்று முன் தினம் கோவைக்கு வந்துள்ளார். அப்போது கெம்பட்டி காலணியில் நண்பர்களுடன் சேர்ந்து முட்புதரில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். அங்கு வந்த மர்ம நபர்கள் 4 பேர் இவரை கல்லால் அடித்து கொலை செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News January 9, 2026

விருதுநகர்: 15 ஆண்டுகளுக்குப்பின் ஓருவர் கைது

image

விருதுநகர் இந்திரா நகரை சேர்ந்தவர் கணேசன் 40. இவரை 2010 ல் வீடு புகுந்து மூன்றரை பவுன் நகை திருடிய வழக்கில் டவுன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமினில் வெளிவந்த இவர் நீதிமன்றத்தில் ஆஜராக வில்லை.இந்நிலையில் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை டவுன் போலீசார் கைது செய்தனர்.

News January 9, 2026

கரூரில் வெளியான அதிரடி அறிவிப்பு!

image

கரூர் மாவட்டத்தில் 3.33 லட்சம் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை டோக்கன் கிடைக்காத அரிசி குடும்ப அட்டைதாரர்கள், உடனடியாகவோ ரேஷன் கடைகளுக்குச் சென்று தங்களது பொங்கல் தொகுப்பைப் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து ஏதேனும் புகார்கள் இருப்பின் 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்களுக்குத் தொடர்பு கொள்ளலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

News January 9, 2026

கெங்கவல்லியில் காதல் ஜோடி தஞ்சம்!

image

கெங்கவல்லி அருகே கடம்பூரை சேர்ந்தவர் லோகநாதன் (25) கூலிதொழிலாளி. ஆத்துாரை சேர்ந்த ஜனனி (19) கல்லுாரி படிக்கிறார். இருவர்களது காதலுக்கு இரு வீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம், வீட்டை விட்டு வெளியேறி, இருவரும் திருமணம் செய்து கொண்டு நேற்று கெங்கவல்லி போலீசில் தஞ்சமடைந்தனர். இரு வீட்டு பெற்றோரை அழைத்த போலீசார் பேச்சு நடத்தி லோகநாதனுடன், ஜனனியை அனுப்பினர்.

News January 9, 2026

புதுக்கோட்டை: தொடர் திருட்டில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

image

கந்தர்வகோட்டையில் விவசாய நிலங்களுக்கு அருகில் உள்ள மின்மாற்றியில் உள்ள காப்பர் கம்பிகளை மர்ம நபர்கள் தொடர்ந்து திருடி வந்தனர். இதுகுறித்து கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் விவசாயிகள் புகரளித்தனர். இதில், போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தஞ்சாவூரை சேர்த்த மணிகண்டன்(24), தங்கமணி(24) ஆகியோர் தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. பின் 2 பேரையும் கைது செய்த போலீசார் 300 கிலோ காப்பரை பறிமுதல் செய்தனர்.

News January 9, 2026

புதுக்கோட்டை: தொடர் திருட்டில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

image

கந்தர்வகோட்டையில் விவசாய நிலங்களுக்கு அருகில் உள்ள மின்மாற்றியில் உள்ள காப்பர் கம்பிகளை மர்ம நபர்கள் தொடர்ந்து திருடி வந்தனர். இதுகுறித்து கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் விவசாயிகள் புகரளித்தனர். இதில், போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தஞ்சாவூரை சேர்த்த மணிகண்டன்(24), தங்கமணி(24) ஆகியோர் தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. பின் 2 பேரையும் கைது செய்த போலீசார் 300 கிலோ காப்பரை பறிமுதல் செய்தனர்.

News January 9, 2026

தூத்துக்குடி: லாரி கவிழ்ந்து விபத்து..

image

சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் பகுதியில் உள்ள கல்குவாரியிலிருந்து ஏராளமான டாரஸ் லாரிகள் மணல் கற்கள் ஏற்றி சென்று வருகிறது. இந்த நிலையில் நேற்று, பழனியப்பபுரத்திலிருந்து பேய்குளம் வரும் சாலையில் பழனியப்பபுரம் ஊருக்கு அருகே டாரஸ் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த டிரைவர் மற்றும் பயணிகள் காயமின்றி தப்பினர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!