Madurai

News March 24, 2026

உசிலம்பட்டி: கிராம நிர்வாக அலுவலர் கைது

image

உசிலம்பட்டி அருகே முத்தையன்பட்டியை சேர்ந்த முத்துராமன் பட்டா மாறுதல் செய்ய ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் பட்டா மாறுதல் செய்ய இவரிடம் வேப்பனூர் கிராம நிர்வாக அலுவலர் சுப்பையா ரூ.5000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ரசாயனம் தடவிய ரூ.5000 பணத்தை வாங்கிய சுப்பையாவை அங்கு மறைந்து நின்று இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.

News March 23, 2026

மதுரை மாவட்டம் – இன்று இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் இலகுவான தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News March 23, 2026

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் தீர்ப்பு

image

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை நடைபெற்ற வந்த நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பு வழங்கினார். இதில் பெலிக்ஸ், ஜெயராஜ் உயிரிழந்ததற்கு ஒன்பது பேரும் காரணம் என்றும் எனவே ஒன்பது பேரையும் குற்றவாளியாக அறிவித்து தீர்ப்பு வழங்கினார். தண்டனை விவரங்கள் வருகிற ஏப்ரல்.9ம் தேதி அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

News March 23, 2026

BIG BREAKING: சிந்தாமணி கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு.!

image

சிந்தாமணி அருகே, 2012 ம் ஆண்டு தேவர் ஜெயந்திக்கு சென்று திரும்பியபோது, கார் மீது பெட்ரோல் குண்டு வீசி 7பேர் கொல்லப்பட்ட வழக்கில், 9 பேரும் குற்றவாளிகள் என கரூர் நீதிமன்றம் தீர்ப்பு. இந்த வழக்கில் 11 பேர் கைதான நிலையில், இருவர் கொல்லப்பட்டதால், மணிகண்டன், கார்த்திக், சந்திரசேகர், சோனையா, நாகராஜ், முத்துக்கருப்பன், சந்தோஷ் உள்ளிட்ட 9பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு. மார்ச் 25ல் தண்டனை விவரம் அறிவிப்பு.

News March 23, 2026

மதுரை: வேட்பாளர் நாதக; ஆனால் கட்சி கொடியோ பாஜக – எப்படி?

image

மதுரை கிழக்கு சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது வாகனத்தில் நாம் தமிழர் கட்சி கொடி கட்டி தேர்தல் பரப்புரை செய்ய, செல்வம் என்பவர் வாகன அனுமதி கோரி மதுரை கலெக்டரிடம் மனு செய்திருந்தார். செல்வம் என்பவர் வாகனத்தில் பாரதிய ஜனதா கட்சி கொடி கட்டி பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது என பதில் உள்ளது. இதனால் நாம் தமிழர் கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

News March 23, 2026

மதுரை: வேட்பாளர் நாதக; ஆனால் கட்சி கொடியோ பாஜக – எப்படி?

image

மதுரை கிழக்கு சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது வாகனத்தில் நாம் தமிழர் கட்சி கொடி கட்டி தேர்தல் பரப்புரை செய்ய, செல்வம் என்பவர் வாகன அனுமதி கோரி மதுரை கலெக்டரிடம் மனு செய்திருந்தார். செல்வம் என்பவர் வாகனத்தில் பாரதிய ஜனதா கட்சி கொடி கட்டி பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது என பதில் உள்ளது. இதனால் நாம் தமிழர் கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

News March 23, 2026

மதுரை: கேஸ் சிலிண்டர் புக் செய்வது EASY!

image

மதுரை மக்களே, கேஸ் சிலிண்டரை புக் செய்ய போனில் இருந்து SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் REFILL என டைப் செய்து 7718955555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், HP சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு அனுப்பி கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இனி கேஸ் ஏஜென்சிக்கு நேரில் செல்ல தேவையில்லை. SHARE பண்ணுங்க.

News March 23, 2026

மதுரை: கேஸ் சிலிண்டர் புக் செய்வது EASY!

image

மதுரை மக்களே, கேஸ் சிலிண்டரை புக் செய்ய போனில் இருந்து SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் REFILL என டைப் செய்து 7718955555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், HP சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு அனுப்பி கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இனி கேஸ் ஏஜென்சிக்கு நேரில் செல்ல தேவையில்லை. SHARE பண்ணுங்க.

News March 23, 2026

மதுரை: கேஸ் சிலிண்டர் புக் செய்வது EASY!

image

மதுரை மக்களே, கேஸ் சிலிண்டரை புக் செய்ய போனில் இருந்து SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் REFILL என டைப் செய்து 7718955555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், HP சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு அனுப்பி கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இனி கேஸ் ஏஜென்சிக்கு நேரில் செல்ல தேவையில்லை. SHARE பண்ணுங்க.

News March 23, 2026

BREAKING சிந்தாமணி வழக்கில் சற்று நேரத்தில் தீர்ப்பு

image

மதுரை சிந்தாமணி பகுதியில் 2012-ம் ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்று திரும்பிய மணலூர், பிளியங்குளத்தைச் சேர்ந்தவர்களின் வாகனம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் ஜெயபாண்டியன், சுந்தரராஜன், வெற்றிவேல், ரஞ்சித், விஷ்னு, சிவா என 7 பேர் கொல்லப்பட்டனர். கரூட் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

error: Content is protected !!