India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10ஆம் வகுப்பு படித்தவர்கள்<

விருதுநகர் திருச்சுழியை சேர்ந்த ஆனந்தராஜ்(29) கொட்டாம்பட்டி யூனியன் அலுவலக புதிய கட்டிடத்தில் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். நேற்று புத்தாண்டு கொண்டாடத் திற்காக கொட்டாம்பட்டி டாஸ்மாக் கடைக்கு சென்றவர், நள்ளிரவு கத்தி காயங்களுடன் இறந்து கிடந்தார். கொட்டாம்பட்டி விஏஓ மூர்த்தி கொடுத்த தகவலின் பேரில் கொட்டாம்பட்டி போலீசார் கொலையாளிகள் குறித்து இன்று விசாரித்து வருகின்றனர்.

மதுரை மாவட்ட வட்டாட்சியா் அலுவலக எண்கள்
1.வடக்கு – 0452-2532858
2.மேற்கு – 0452-2605300
3.திருப்பரங்குன்றம் – 0452-2482311
4.வாடிப்பட்டி – 04543-254241
5.தெற்கு – 0452-2531645
6.கிழக்கு – 0452-2422025
7.மேலூா் – 0452-2415222
8.கள்ளிக்குடி – 04549-278889
9.உசிலம்பட்டி – 04552-252189
10.திருமங்கலம் – 04549-280759
11.பேரையூா் – 04549-275677

தேனி பெரியகுளத்தை சேர்ந்தவர் போத்தம்மாள்(60). கப்பலூரில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக வந்தவர், பின் ஊருக்கு செல்வதற்காக உறவினரின் டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்றார். திருமங்கலம் மறவன்குளம் அருகே பின்னால் வந்த டூவீலர் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுரை அருகே விருசமரத்து ஊரணி பகுதியை சேர்ந்த மூக்கையா மகன் முனீஸ்(26) ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். நேற்றிரவு மதுரை விமான நிலைய சாலையில் தனது சகோதரியுடன் பேசி கொண்டிருந்த போது பெருங்குடியை சேர்ந்த 4 பேர் முனீஸிடம் வாக்குவாதம் செய்து கத்தி, அரிவாள் கொண்டு சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். முன்பகை காரணமாக கொலை நடந்ததா என அவனியாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுரை மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் மதுரை வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000449, 9445000450, 8870678220, 9003314703 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.

பேரையூர் அருகே டி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் வெள்ளையம்மாள்(93). கணவருடன் தனித்து வசித்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவரும் இறந்து போனார். இவரது குழந்தைகளில் சிலர் இறந்து போன நிலையில், இருக்கும் மற்ற குழந்தைகள் இவரை கவனிக்கவில்லை. இதனால் எருக்க இலையை அரைத்து குடித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் நேற்று முன்தினம் இறந்து போனார். இதுகுறித்து சாப்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுரை பெருங்குடி ரோட்டில் உள்ள சாய் ஓட்டல் அருகே, சாலையோரத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் படுத்திருந்தார். அங்கு நிறுத்தி இருந்த காரை அதன் உரிமையாளர் எடுக்கும் போது, படுத்திருந்தவர் மீது கார் ஏறியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், நேற்று முன்தினம் உயிரிழந்தார். மதிச்சியம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார். இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.