India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமரி மாவட்டம், ஈசாந்திமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட நாவல்காடு பகுதியை சார்ந்த திமுக கிளை பிரதிநிதி கண்ணன் நேற்று திமுகவில் இருந்து விலகி கன்னியாகுமரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இதில் அதிமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தக்கலை அருகே புலியூர்குறிச்சியை சேர்ந்தவர் ஐயப்பன் (60). இவர் தங்க நகை செய்யும் தொழிலாளி. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், ஐயப்பனுக்கு முன்பு போல் நகைகள் செய்வதற்கான வேலை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் வேதனையில் இருந்து வந்த ஐயப்பன் நேற்று முன்தினம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தக்கலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

செண்பகராமன் புதூர் பகுதியை சேர்ந்தவர் சாமிதாஸ் (63). இவர் மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததில் சிறுமி கர்ப்பமானார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நாகர்கோவில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கை விசாரித்த நாகர்கோவில் போக்சோ நீதிமன்ற நீதிபதி சுந்தரய்யா குற்றம் சாட்டப்பட்ட சாமிதாசுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.

புதுக்கடை அருகே பருத்திவிளையைச் சேர்ந்தவர் பொன்னப்பன் (வயது 40). இவரது அண்ணன் செந்தில்குமார் வீட்டு முன்பு செல்லும்போது, இரண்டு பேர் தடுத்து நிறுத்தி முன் விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க முயன்ற செந்தில்குமாரும் வெட்டப்பட்டார். இது தொடர்பாக பொன்னப்பன் கொடுத்த புகாரின் பேரில், புதுக்கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுக்கடை அருகே பருத்திவிளையைச் சேர்ந்தவர் பொன்னப்பன் (வயது 40). இவரது அண்ணன் செந்தில்குமார் வீட்டு முன்பு செல்லும்போது, இரண்டு பேர் தடுத்து நிறுத்தி முன் விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க முயன்ற செந்தில்குமாரும் வெட்டப்பட்டார். இது தொடர்பாக பொன்னப்பன் கொடுத்த புகாரின் பேரில், புதுக்கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

(27.02.2026) கன்னியாகுமரி மாவட்டம் காவல்துறை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. .

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே நான்கு வழி சாலையில் தனியார் பள்ளி பேருந்து கொண்டு சென்று கொண்டிருந்தது. இன்று மாலை அந்த பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த மாணவர்கள் சிலர் லேசான காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை.

குமரி மக்களே, நீங்க போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா.? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <

கன்னியாகுமரி மக்களே, கரண்ட்பில், தண்ணீர் வரி, கேஸ்பில், ரீசார்ஜ் என அனைத்துமே செலுத்த மத்திய அரசின் NPCI சார்பாக உங்க வாட்ஸ் ஆப்பில் இருந்து BILL செலுத்த அறிமுகம் செய்திருக்கு. 9167777776 எண்ணில் உங்க CONSUMER NUMBER -ஐ பதிவிட்டால் போதும். பணம் எவ்வளவுன்னு அதுவே காட்டும். அதை நீங்கள் வாட்ஸ் ஆப்பிலே செலுத்தலாம். மாதந்தோறும் Hi அனுப்பி BILL-ஐ செலுத்துங்க. இந்த நல்ல தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க.

குமரி மக்களே, உங்க வங்கி கணக்கில் பணம் எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனிமே அடிக்கடி வங்கிக்கும் (அ) UPI-ஐ திறந்து பார்க்க தேவையில்லை
Indian bank: 87544 24242
SBI: 90226 90226
HDFC: 70700 22222
Axis: 7036165000
Canara Bank – 9076030001
இந்த நம்பர்களுக்கு வாட்ஸ்ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உங்க பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.