India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமரி மக்களே; உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், குமரி மாவட்ட மக்கள் 8903331912 என்ற எண்ணில் மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இதை மறக்காம SHARE பண்ணுங்க.

குமரி மாவட்டம், செண்பகராமன் புதூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை வேலைக்கு செல்ல சாலையை கடக்க முயன்ற போது கார் ஒன்று இவர் மீது மோதியது. விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரி, தக்கலை அருகே மயிலோடு பகுதியைச் சேர்ந்தவர் எட்வின் ஜோஸ் (45). கொத்தனாரான இவர் ஆழ்வார்கோயிலில் இருந்து வட்டம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டெம்போ எட்வின் ஜோஸ் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக தக்கலை போலீசார் நேற்று டெம்போ டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மண்டைக்காடு கோவில் திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் வருகை தர இருப்பதையொட்டி நடு ஊர் கரை, வெட்டுமடை, புதூர் ஆகிய இடங்களில் 3 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகிறது. 6 சக்கர வாகனங்கள், ஆம்னி பேருந்துகள், வேன் ஆகியவை லட்சுமிபுரம் ஆம்னி பேருந்து நிலையத்திற்குள் அனுமதிக்கப்படும் என்று கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உங்கள் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக உள்ளது பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம். இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. சொந்த வீடு இல்லாதவர்கள் <

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவிற்காக 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளதாக குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதில் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களான பார்க்கிங் பகுதிகள், மக்கள் கூடும் இடங்கள், கடற்கரை பகுதிகளில் சுமார் 150 சிசி டிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு அதனைக் கண்காணிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவித்துள்ளார்.

குமரி மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1.விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். SHARE IT

குமரி மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய்க்கு இலவசமாக தடுப்பூசி செலுத்துதல் இன்று முதல் தவணையாக வழங்கப்பட உள்ளது. குமரியில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் இவை வழங்கப்படவுள்ளது. இந்தத் தடுப்பூசி மூலம் 14 வயதுடைய பெண் குழந்தைகள் 8,000 பேர் பயனடைவார்கள் என்று குமரி மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதற்கு மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் 18 -50 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார், பான் கார்டு, வருமான சான்று, சுய உதவிக்குழு உறுப்பினர் சான்றிதழுடன் அருகிலுள்ள சுய உதவிக்குழு அலுவலங்கள் (அ) <

குமரி மாவட்டம், ஈசாந்திமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட நாவல்காடு பகுதியை சார்ந்த திமுக கிளை பிரதிநிதி கண்ணன் நேற்று திமுகவில் இருந்து விலகி கன்னியாகுமரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இதில் அதிமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.