India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி உள்பட 5 மாநில தேர்தல் தேதிகளை இன்று (மார்ச்.15) இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்துள்ளார். அதில் தமிழகத்தில் ஏப்.23 அன்று வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதல்வர் படங்கள் மற்றும் சுவர் விளம்பரங்களில் அரசியல் கட்சி தலைவர்கள் படங்கள் அகற்றப்பட்டது.

குமரி மக்களே, உங்கள் VOTER ID மிகவும் பழையதாகவும், மோசமான நிலைமையிலும் இருக்கும் பட்சத்தில் அதனை புதிதாக மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.
1). <
2). 1-ஐ தேர்ந்தெடுங்கள்.
3). உங்க VOTERID எண்ணை பதிவிடுங்கள்.
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க!

தமிழக அரசின் NEEDS திட்டத்தின் கீழ் முதல்முறை தொழில் தொடங்குவோருக்கு ரூ.25 லட்சம் வரை மானியம் தரும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 21 வயது நிரம்பியவர்கள், குறைந்தபட்சம் 12th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க, மேலும் தகவல் தெரிய <

தமிழ்நாடு அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவையை வாட்ஸ்அப் மூலம் பெற அறிமுகம் செய்துள்ளது.
1. 94450 30725 எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும்.
2. Book Ambulance -ஐ தேர்வு செய்து உங்கள் (Location) பகிரவும்.
3. கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும்.
அவசர தேவை எண்ணை உங்க போனில் Save பண்ணுங்க..இந்த எண்ணை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையடுத்து அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக குமரி, கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முஞ்சிறை வட்டார காங்கிரஸ் OBC பிரிவு சார்பில் நடைக்காவு சந்திப்பில் அரசியல் விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் MLA ராஜேஷ் குமார் MP விஜய் வசந்த் கலந்து கொண்டு தேர்தல் பணிகள் குறித்து சிறப்புரையாற்றினர்.

திருத்துவபுரம் அருகே குறுமத்தூர் பகுதியை சேர்ந்த ஜஸ்டஸ் (72) என்பவர் மீது மார்த்தாண்டம் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை நாகர்கோவில் கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில் தனக்கு தூக்கு தண்டனை கிடைக்கும் என நினைத்து ஜஸ்டஸ் நேற்று முன் தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.

தென்தாமரைகுளம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (26). இவரது தாயார் இறந்துவிட்ட நிலையில் தந்தை தூத்துக்குடியில் வசித்து வந்தார். கார்த்திக் மட்டும் தனியாக வசித்து வந்த நிலையில் அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து உறவினர்கள் கதவை உடைத்து பார்த்த போது தூக்கில் அவர் பிணமாக தொங்கினார். தென்தாமரை குளம் போலீசார் அழுகிய நிலையில் கிடந்த அவரது உடலை மீட்டு தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை.

தென்தாமரைகுளம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (26). இவரது தாயார் இறந்துவிட்ட நிலையில் தந்தை தூத்துக்குடியில் வசித்து வந்தார். கார்த்திக் மட்டும் தனியாக வசித்து வந்த நிலையில் அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து உறவினர்கள் கதவை உடைத்து பார்த்த போது தூக்கில் அவர் பிணமாக தொங்கினார். தென்தாமரை குளம் போலீசார் அழுகிய நிலையில் கிடந்த அவரது உடலை மீட்டு தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை.

பொதுத்துறை நிறுவனமான BSNL-ல் 120, Senior Executive Trainee (Telecom and Finance) காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E., B.Tech., C.A., C.M.A. படித்த, 21 முதல் 30 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஊதியமாக ₹24,900 – ₹50,500 வரை வழங்கப்படும். தேர்வு_முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல். ஆர்வமுள்ளவர்கள் இங்கே<

பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்தவர் கலாவதி. இவரது மகள் சுருதி கல்லூரியில் தன்னுடன் படிக்கும் அபிலாஷ் என்பவருடன் பழகியுள்ளார். இந்நிலையில் சுருதி வீட்டில் இருந்த நகையை அபிலாசுக்கு கொடுத்துள்ளார். நகையை கேட்டு மகளிடம் கலாவதி சண்டையிட்டதால் இருவரும் சேர்ந்து கலாவதியின் கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சி செய்தனர். இதுகுறித்து கலாவதி அளித்த புகாரில் 2 பேரையும் சுசீந்திரம் போலீசார் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.