India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடிகர் கார்த்திக் குமார் மீது அவரது முன்னாள் மனைவி சுசித்ரா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அதில், கார்த்திக் குமார் ஓரினச்சேர்க்கையாளர் என்றும், இதை திருமணமாகி 2 ஆண்டுகளுக்கு பின்பு கண்டுபிடித்ததாகவும் அவர் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள கார்த்திக் குமார், தான் ஓரினச்சேர்க்கையாளராக இருந்தால், அதற்காக வெட்கப்பட போவதில்லை, அது பெருமையான விஷயம் தான் என்றும் தெரிவித்துள்ளார்.
மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார். இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு செல்லும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், ஆஸ்திரேலிய அணியை சந்திப்பது இந்திய அணிக்கு சவாலாக இருக்கும் என்றார். இந்த தொடர் அக்டோபர் 3 முதல் 20ஆம் தேதி வரை வங்க தேசத்தில் நடைபெற உள்ளன.
நடந்து முடிந்த 4 கட்ட மக்களவைத் தேர்தலில் பாஜக 79 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மத்திய அரசின் உளவுத்துறை அதிகாரிகள் இதை பாஜகவிடமே கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுவரை 4 கட்டமாக 380 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. ஆனால், பாஜக 79 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எலக்சன்’ படத்தில் விஜய்குமார், பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, ‘வத்திக்குச்சி’ திலீபன், நவகீதன், ஜார்ஜ் மரியம், நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மே – 15 | வைகாசி- 2
▶கிழமை: புதன்
▶நல்ல நேரம்: 09:30AM – 10:30AM, 4:30PM – 5:30PM
▶கெளரி நேரம்: 10:30 AM – 11:30 AM, 06:30 PM – 07:30 PM
▶ராகு காலம்: 12:00 PM – 01:30 PM
▶எமகண்டம்: 07:30 AM – 09:00 AM
▶குளிகை: 10:30 AM – 12:30 PM
▶சூலம்: வடக்கு
▶பரிகாரம்: பால்
▶ திதி : சூன்யம்
ஈசிஆர் பகுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கல்பாக்கம் அருகே வயலூர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரமாக இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் வடபழனி, சூளை பகுதிகளை சேர்ந்த நண்பர்கள் பலியாகினர். இவர்கள் அனைவரும் பாண்டிச்சேரிக்கு சென்று திரும்பிய நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மத்தியில் அடுத்த அரசாங்கத்தை INDIA கூட்டணி கட்சிகள் அமைக்கும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மோடி 3ஆவது முறையாக பிரதமர் பதவியில் அமர மாட்டார் என்று சவால் விடுத்த அவர், 300 இடங்களில் INDIA கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும் என்றார். பரப்புரைகளில் பிரதமர் மோடி பொய் கூறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளதாக விமர்சித்த அவர், 200 இடங்களில் மட்டுமே பாஜக வெற்றிபெறும் என்று சூளுரைத்தார்.
அயர்லாந்து எதிரான மூன்றாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் களமிறங்கிய அயர்லாந்து 178/7 ரன்களைச் சேர்த்தது. சிறப்பாக பந்துவீசிய ஷாஹின் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் ஆடத்தொடங்கிய பாகிஸ்தான், 17 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் 2-1 என்ற கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது.
➤ தகுதிக்கு மீறி வாங்கப்படும் கடனுக்கு வட்டியாக மானத்தையும் கட்ட வேண்டியிருக்கும்.
➤ சில நேரங்களில் குள்ள நரியின் புத்தி கொஞ்சமாவது இருக்க வேண்டும். குழி பறிக்க அல்ல குழியில் விழாமல் இருக்க.
➤ மனிதனுக்கு பிரச்னை இல்லை என்றால், கடவுளுக்கு அர்ச்சனை இல்லை.
➤ ஒருபோதும் உங்களை நியாயப்படுத்திக் கொள்ள பிறரை காயப்படுத்தி விடாதீர்கள்.
➤ கடின உழைப்பால் தடைகள் அனைத்தையும் வெல்ல முடியும்.
திருப்பூரில் இவிஎம் இயந்திரம் வைக்கப்பட்டிருந்த அறையில் மின்சாரம் தடைபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் இந்த மின்தடை ஏற்பட்டது. 10 நிமிடங்கள் வரை மின் தடை நீடித்த நிலையில், அதை அதிகாரிகள் சரி செய்தனர். ஈரோடு, நெல்லை தொகுதியிலும் இதே பிரச்னை சில நாள்களுக்கு முன் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.