News May 15, 2024

சாலை விபத்தில் 4 நண்பர்கள் பலி

image

ஈசிஆர் பகுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கல்பாக்கம் அருகே வயலூர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரமாக இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் வடபழனி, சூளை பகுதிகளை சேர்ந்த நண்பர்கள் பலியாகினர். இவர்கள் அனைவரும் பாண்டிச்சேரிக்கு சென்று திரும்பிய நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Similar News

News December 15, 2025

சோஷியல் மீடியாவில் ஆதார் போட்டோ போடுறீங்களா?

image

யாரும் சோஷியல் மீடியாவில் தங்களது ஆதார் அட்டையின் போட்டோவை பதிவிட வேண்டாம் என UIDAI எச்சரித்துள்ளது. நிதி மோசடிகள், அடையாள திருட்டுகள் போன்றவற்றை தவிர்க்க, இந்த அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஆதார் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற சந்தேகம் இருந்தால், சைபர் கிரைம் Helpline 1930, UIDAI ஹெல்ப்லைன் 1947 அல்லது help@uidai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் புகார் அளிக்கலாம். SHARE IT.

News December 15, 2025

40 தொகுதிகளில் காங்., போட்டியா?

image

டெல்லியில் காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கருடன் செல்வப்பெருந்தகை ஆலோசனை செய்து வருகிறார். இதன்பின், ராகுலை சந்தித்து திமுக கூட்டணியில் எத்தனை இடங்களை கேட்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கும் அவர், எந்தெந்த தொகுதிகளில் காங்., வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதற்கான லிஸ்ட்டையும் வழங்கவிருக்கிறார். 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளை காங்., குறிவைத்துள்ளதாம்.

News December 15, 2025

BREAKING: வங்கிக் கணக்கில் ₹1,000 வந்தது

image

மகளிர் உரிமைத்தொகை ₹1,000 சற்றுமுன் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. கடந்த 12-ம் தேதி ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ நிகழ்ச்சியில் 2-ம் கட்ட திட்ட விரிவாக்கத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 17 லட்சம் மகளிருக்கு ₹1,000 செலுத்தப்பட்டது. இந்நிலையில், ஏற்கெனவே பயன்பெற்று வரும் 1.13 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் 28-வது தவணை தற்போது வரவு வைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு வந்துவிட்டதா?

error: Content is protected !!