news

News July 11, 2025

பங்குச்சந்தைகள் சரிவால் முதலீட்டாளர்கள் கலக்கம்!

image

இந்தியப் பங்குச்சந்தைகள் 2-வது நாளாக இன்றும்(ஜூலை 11) சரிவைக் கண்டுள்ளன. வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 249 புள்ளிகள் சரிந்து 82,941 புள்ளிகளிலும், நிஃப்டி 67 புள்ளிகள் சரிந்து 25,288 புள்ளிகளிலும் வர்த்தகமாகிறது. குறிப்பாக TCS, Infosys, Tech Mahindra உள்ளிட்ட முக்கிய ஐடி நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைக் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

News July 11, 2025

வைகோ அல்ல ‘பொய்கோ’: வைகைச்செல்வன் விளாசல்

image

திருச்சி திமுக மாநாட்டிற்குச் செல்லாமல், போயஸ் கார்டன் சென்று ஜெயலலிதாவை சந்தித்ததே அரசியல் வாழ்க்கையில் தான் செய்த மிகப்பெரிய தவறு என <<17024276>>வைகோ<<>> பேசியிருந்தார். இந்நிலையில், மதிமுகவின் பம்பரம் சின்னத்திற்கான அங்கீகாரத்தை பெற்றுத்தர உழைத்தது அதிமுக என்பதை அவர் மறந்திடக்கூடாது என வைகைச்செல்வன் கூறியுள்ளார். அவர் வைகோ அல்ல, ‘பொய்கோ’ என்றே அழைக்க வேண்டும் என்றும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.

News July 11, 2025

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹440 உயர்வு

image

சென்னையில் தங்கம் விலை இன்று (ஜூலை 11) சவரனுக்கு ₹440 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் 1 கிராம் ₹9,075-க்கும், சவரன் ₹72,600-க்கும் விற்பனையாகிறது. நேற்று சவரனுக்கு ₹160 அதிகரித்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹121-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,21,000-க்கும் விற்பனையாகிறது.

News July 11, 2025

கடலூர் கோர விபத்து: மூவர் குழு விசாரணை துவக்கம்

image

கடலூர் அருகே பள்ளிவாகனம் மீது ரயில் மோதிய விபத்து தொடர்பாக விசாரணை நடத்த தெற்கு ரயில்வே முதன்மை பாதுகாப்பு அதிகாரி தலைமையில் மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு 13 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி திருச்சியில் விசாரணையை துவக்கியுள்ளது. ரயில் வருவது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதா? ரயில் கடந்த போது ரகசிய குறியீட்டு எண்கள் கொடுக்கப்பட்டதா என பல கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பதிவுசெய்யப்படுகின்றன.

News July 11, 2025

பாக்., பஸ்ஸில் 9 பேரை சுட்டுக் கொன்ற கொடூரம்

image

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பஸ்ஸில் 9 பயணிகளை கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. குவெட்டாவில் இருந்து லாகூர் சென்று கொண்டிருந்த பஸ்ஸில் துப்பாக்கியுடன் ஏறிய சிலர், பயணிகளை தீவிரமாக சோதனை செய்தனர். பின்னர், அதில் 9 பேரை மட்டும் சுட்டுக் கொன்றனர். இந்த கொடூர சம்பவத்திற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. So Sad..!

News July 11, 2025

95 வருட சாதனையை உடைப்பாரா கில்?

image

இந்திய டெஸ்ட் கேப்டன் கில் ENG-க்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரில், 4 இன்னிங்ஸில் 585 ரன்களை விளாசி இருக்கிறார். அவர் இன்னும் 6 இன்னிங்ஸில் 390 ரன்களை அடித்தால் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனின் 95 வருட ரெக்கார்டை தகர்த்து விடுவார். 1930-ல் பிராட்மேன் ENG-க்கு எதிராக 974 ரன்களை அடித்திருந்ததே சாதனையாக இருக்கிறது. சாதிப்பாரா கில்?

News July 11, 2025

ஜூலை 14-ல் பூமி திரும்பும் ஆக்சியம் 4 குழு

image

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் கடந்த ஜூன் 25-ம் தேதி ஃபுளோரிடாவின் கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டனர். அங்கு தங்களின் ஆராய்ச்சி பணிகளை முடித்துக்கொண்டு ஜூலை 10-க்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் பூமிக்கு திரும்பலாம் என்ற தகவல் இருந்தது. இந்நிலையில், ஜூலை 14-ல் இந்த ஆக்சியம் 4 குழு பூமிக்கு திரும்பவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

News July 11, 2025

‘செல்லம்மா… செல்லம்மா…’

image

Checked ஷர்ட், ஜீன்ஸ் பேண்ட்டில் சிம்பிளாக பிரியங்கா மோகன் வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாகி இருக்கிறது. கோல்டன் ஆரோ பாட்டுக்கு டான்ஸ் ஆடி இளைஞர்களின் நெஞ்சில் அம்புவிட்டவர், தற்போது பவன் கல்யாணின் ‘OG’ படத்தில் நடித்து வருகிறார். அவரது போட்டோஸ் பார்த்து, ‘கட்டம் போட்ட சட்டையில் கண்ணழகு நெருப்பாக, ஜீன்ஸ் நடையில் என் நெஞ்சு பனியாக கசிகுற லாவகமா’ என நெட்டிசன்கள் கவிதை பாட தொடங்கிவிட்டனர்.

News July 11, 2025

75 வயதில் ஓய்வு பெற வேண்டும்: மோகன் பகவத்

image

அரசியல் தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என RSS தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். PM மோடிக்கு தற்போது 74 வயதாகும் நிலையில், அடுத்தாண்டு அவரை ராஜினாமா செய்ய வைக்க RSS மறைமுகமாக அழுத்தம் கொடுத்து வருவதாக அரசியல் களத்தில் பேச்சு எழுந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு நாக்பூர் RSS அலுவலகத்திற்கு PM சென்றபோது இது தொடர்பாக பேசப்பட்டதாகவும் சொல்கின்றனர். மோகன் பகவத் கருத்து பற்றி உங்க கமெண்ட் என்ன?

News July 11, 2025

சட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

image

3 ஆண்டு LLB சட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்க இன்று வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த காலக்கெடுவை நீட்டித்து தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதன்படி, ஜூலை 25-ம் தேதி மாலை 5:45 மணி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் சந்தேகங்களுக்கு 044-24641919 (அ) 24957414 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யுங்கள்.

error: Content is protected !!