India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மே 18-ம் தேதி நடக்கவுள்ள கேது பெயர்ச்சியால் பின்வரும் 3 ராசிகள் அதிக நன்மைகள் அடைவர்: *சிம்மம்: தடைகள் நீங்கும். தொழில், வேலையில் உயர்வு, நிதிநிலை மேம்படும். பெண்களின் அந்தஸ்து உயரும். *விருச்சிகம்: புதிய முயற்சிகள் பலன் தரும், திருமண யோகம், குடும்ப வாழ்க்கை பலப்படும் *மகரம்: மன அழுத்தத்திலிருந்து விடுதலை. திருமண யோகம் உண்டு. காதல் வாழ்க்கை சிறக்கும். நிதிநிலை மேம்படும்.
இன்றைய ஆட்டத்தில் PBKS – DC அணிகள் மோதுகின்றன. முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. மழை காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கினாலும், 20 ஓவர்கள் முழுமையாக வீசப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டி 8:30-க்கு தொடங்கும்
27 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி-மின்னலுடன் மழைக்கு வாய்ப்பிருப்பதாக IMD தெரிவித்துள்ளது. மிதமான மழை: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம். லேசான மழை: சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கடலூர், தஞ்சை, திருவாரூர், கரூர், தேனி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தென்காசி, விருதுநகர்.
சிபிஎஸ்இ 10,12ம் வகுப்பு தேர்வு மறுமதிப்பீட்டில் புதிய முறை அமலுக்கு வருகிறது. இதுவரை மதிப்பெண் சரிபார்ப்புக்கு விண்ணப்பித்து, பின் விடைத்தாள் நகலை பெற்று, மறுமதிப்பீடு செய்ய வேண்டியிருந்தது. ஆனால் புதிய முறையில், மாணவர்கள் முதலில் திருத்திய விடைத்தாள் நகலை பெற வேண்டும். அதன்பின் மதிப்பெண்கள் சரிபார்ப்பு (அ) மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். 2024-25-ல் தேர்வு எழுதியோர் இதை பயன்படுத்தலாம்.
இந்தியா ஏவிய டிரோன்களை <<16345828>>சுட்டு வீழ்த்தியதாக<<>> பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இதற்கு ஆதாரமாக லாகூர் விமான நிலைய ரேடார் நிலையத்தில் கிடந்த டிரோன் பாகங்களை அந்நாட்டு ராணுவம் காட்டியது. ஆனால், அப்படி இருக்க முடியாது என்கின்றனர் நிபுணர்கள். ஏன் தெரியுமா? இந்த சூசைட் டிரோன்கள் இலக்கை அடைந்தவுடன் தானே வெடித்து சேதத்தை ஏற்படுத்தக் கூடியவை. ஆகவே, பாக்., கூறுவது அவ்வளவு நம்பும்படியாக இல்லை.
PBKS மற்றும் DC அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. மாலை 7:00-க்கு டாஸ் போட வேண்டிய நிலையில், இதுவரை டாஸ் சுண்டப்படவில்லை. இந்த ஆட்டத்தில் வென்றால், முதல் அணியாக PBKS அணி, பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும். இன்றைய ஆட்டத்தில் எந்த அணி வெல்லும்? கமென்ட்டில் சொல்லுங்கள்.
‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்தியர்களின் உயிரை பறித்த மனித அரக்கர்களான பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் கொன்று குவித்தது. இதை இந்தியர்கள் கொண்டாடுகிறார்கள். இச்சம்பவம் என்றென்றும் நினைவில் இருக்கும் வகையில், மே 7-ல் பிறந்த தங்கள் குழந்தைகளுக்கு சிலர் இப்பெயரை சூட்டத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், பிஹாரில் குந்தன் குமார் என்பவர் தனது மகளுக்கு ‘சிந்தூர்’ என்று பெயரிட்டு, தேசபக்தியை வெளிப்படுத்தினார்.
இந்தியாவுக்கு விஸ்கியை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடாக இங்கிலாந்து உள்ளது. இந்நிலையில், அந்நாட்டுடன் இந்தியா அண்மையில் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதில் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி ஆகும் மதுபானங்கள் மீதான வரி 75%ஆக குறைக்கப்பட்டுள்ளது. எனவே அந்நாட்டில் இருந்து இறக்குமதி ஆகும் ஸ்காட்ச், ஜின் விலை குறைகிறது. இதேபோல் விஸ்கியும் விலையும் கணிசமாக குறையவுள்ளது.
‘Operation Sindoor’ என்ற பெயருக்கு வணிக டிரேட்மார்க் லைசன்ஸ் கோரி ரிலையன்ஸ் நிறுவனம் உள்பட நான்கு பேர் விண்ணப்பித்ததாக தகவல் வெளியானது. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ஒரே நாளில் நாட்டு மக்களின் மனத்தில் பதிந்துவிட்ட நிலையில், இந்த பெயருக்கு போட்டிப் போடுகின்றனர். ஆனால், தவறுதலாக விண்ணப்பம் கொடுக்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ள ரிலையன்ஸ், அதை வாபஸ் பெற்றுள்ளது.
இந்தியா நடத்திய தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பொய் சொல்வதாக நம் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். தீவிரவாதிகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் உயிரிழந்தவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் மட்டுமே, பொதுமக்கள் அல்ல என்று கூறிய மிஸ்ரி, தீவிரவாதிகளுக்கு ஆதரவு தரவில்லை எனில், அவர்களின் உடல்களுக்கு ஏன் பாக்., அரசு கொடி போர்த்தி மரியாதை தந்தது எனக் கேள்வி எழுப்பினார்.
Sorry, no posts matched your criteria.