India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிவகாசி, அருப்புக்கோட்டை, பார்த்திபனூர் வழியாக ஸ்ரீவி – ராமேஸ்வரம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக விருதுநகரில் இருந்து சிவகாசி வரையில் உள்ள சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் திட்ட பணிகள் நாளை துவங்க உள்ளது. இப்பணிகளை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் துவக்கி வைக்க உள்ளனர்.

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <

ஸ்ரீவி அருகே மம்சாபுரம் பேரூராட்சியில் நவ.2022 – நவ.2023 காலகட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீஸில் EX பேரூராட்சி தலைவர் ராஜா புகார் அளித்தார். அதில், பேரூராட்சியில் பல்வேறு பணிகளை செய்ததாக போலி பில் தயார் செய்து ரூ.32.78 லட்சம் கையாடல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து பேரூராட்சியில் பணியாற்றிய 2 செயல் அலுவலர்கள் உட்பட 8 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். SHARE IT

விருதுநகர் மக்களே; எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். மறக்காம SHARE பண்ணுங்க.ஆபத்தில் இது கண்டிப்பாக உதவும்.

விருதுநகர் மக்களே! பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு நேரடியாக சென்று வில்லங்கச்சான்றிதழ் வாங்க ரொம்ப கஷ்டப்படுவிங்க. அங்கே நீண்ட நேரம் காத்திருந்து, அதிகாரிகள் கிட்ட பேசி வாங்கறது உங்களுக்கு பெரிய வேலையா இருக்கும். ஆனா, இப்போ இந்த லிங்கில் <

சரஸ்வதிபாளையத்தை சேர்ந்தவர் பேச்சியம்மாள் (39). இவர் சிவகாசியில் உள்ள அடகு நிறுவனத்தில் 93 கிராம் தங்க நகைகளை தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்துவிட்டு மீட்க முயன்றுள்ளார். அப்போது அந்த நிதி நிறுவனத்தை சேர்ந்த திருத்தங்கல் லட்சம், முருகன் காலனி பாண்டியராஜ் ஆகியோர் பேச்சியம்மாளின் 11 பவுன் நகைகளை உருக்கி விற்றது தெரியவந்தது. இதையடுத்து இருவர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

சேது நாராயணபுரத்தில் அனுமதியின்றி வெடி தயாரித்ததாக சிவகாசி சேர்ந்த ஜெயலட்சுமி (34), பழனி செல்வம் (42) கைது செய்யப்பட்டனர். 15 கிலோ சல்பர், 30 கிலோ கரி தூள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்து இடம் சீல் வைக்கப்பட்டது. சம்பவ இடம் ஸ்ரீவி தொகுதி நாதக வேட்பாளர் கரிகால பாண்டியன் உறவினருக்கு சொந்தமானது. இடத்தை கரிகால பாண்டியன் பராமரித்து வந்ததால் அவரது பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி, 1901 ஆக இருந்த வாக்குச்சாவடிகள் தற்போது 98 வாக்குச்சாவடிகள் அதிகரித்து மொத்தம் 1999 வாக்குச்சாவடிகளாக உயர்ந்துள்ளது. அதில் 88 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்கனவே உள்ள அமைவிடத்திலும், 10 வாக்குச்சாவடிகள் புதிய அமைவிடங்களிலும் உள்ளன.

விருதுநகர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <
Sorry, no posts matched your criteria.