Virudunagar

News January 5, 2026

விருதுநகர்: மக்களே இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க

image

விருதுநகர் மாவட்ட தீயணைப்பு துறை எண்கள்
அருப்புகோட்டை – 04566 240101
ராஜபாளையம் – 04563 220101
சாத்தூர் – 04562 264101
சிவகாசி -04562 220101
ஸ்ரீவில்லிபுத்தூர்- 04563265101
திருச்சுழி – 04566 282101
வத்ராப் – 04563288101
விருதுநகர் – 04562 240101
காரியாபட்டி – 04566 255101
ஏழாயிரம்பண்ணை – 04562 226101
வெம்பகோட்டை 04562 284101
*ஷேர் பண்ணுங்க

News January 5, 2026

BREAKING விருதுநகர் எம்.பி.க்கு திமுக கடும் பதிலடி

image

கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாடும் வெல்ல முடியாது. அதே நேரம் இப்போது அதிகாரம் மட்டும் அல்ல அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்திருந்தார். ஆட்சியில் பங்கு என்பது இந்துத்துவ அமைப்புகளால் உருவாக்கப்பட்டது என்பதை உணராத பேச்சு. மாணிக்கம் தகூர் RSS குரலை எதிரொலிக்கிறார் என திமுக முன்னாள் எம்.பி அப்துல்லா விமர்சித்துள்ளார்.

News January 5, 2026

விருதுநகரில் ரூ.4.97 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் 1.1.2025 – 31.12.2025 வரை குற்றங்களை குறைக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். அதில் பதிவான 353 திருட்டு வழக்குகளில் 295 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.3,10,74,278 மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது. இதே போல் பாரி குற்ற வழக்கில் பதிவான 48 வழக்குகளில் 46 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு அதில் ரூ.1,86,87,202 மதிப்புள்ள சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது.

News January 5, 2026

விருதுநகர்: ஒரு மெசேஜ் போதும், உடனடி தீர்வு !

image

உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், திருச்சி மாவட்ட மக்கள் ‘94861-11912’ என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News January 5, 2026

சிவகாசி: கொலை மிரட்டல் விடுத்த ஐ.டி ஊழியர் மீது வழக்கு

image

சிவகாசி உள்ள தனியார் ஓட்டலின் மதுபான கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு மது அருந்த வந்த சிவகாசி பள்ளப்பட்டி சேனையாபுரம் காலனியை சேர்ந்த ஐ.டி ஊழியர் சண்முகவேல் (வயது 24)ஏற்கனவே மதுபோதையில் இருந்ததாக கூறப்படு கிறது. இதனால் அவரை ஓட்டல் மேலாளர் காசிராஜன் (34) மதுகூடத்துக்கு செல்ல அனுமதிக்காததால் தகராறு செய்த சண்முகவேல் மேலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சண்முகவேல் மீது வழக்குப்பதிவு.

News January 5, 2026

விருதுநகர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

விருதுநகர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 5, 2026

சிவகாசி: சிறுமிக்கு பிறந்த குழந்தை; இளைஞருக்கு வலை

image

சிவகாசி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்ததாக ஊர்நல அலுவலர் மணிமாலாவுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மணிமாலா நடத்திய விசாரணையில், 17 வயது சிறுமிக்கும் கட்டிட தொழிலாளி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு சிறுமியை, அந்த தொழிலாளி பல முறை பலாத்காரம் செய்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து கட்டிட தொழிலாளி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

News January 5, 2026

ஸ்ரீவில்லிபுத்தூரில் முதியவர் தற்கொலை

image

ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக 8 வருடங்களாக பிரிந்து ராமசாமி அம்மாவுடன் வாழ்ந்து வந்தார். இவருக்கு குடி பழக்கம் இருந்தால் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் ராமசாமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News January 5, 2026

விருதுநகர்: ரூ.1,20,940 சம்பளத்தில் BANK வேலை; இன்றே கடைசி APPLY

image

விருதுநகர் மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு இன்றே (ஜன.5) கடைசி நாள். சம்பளம் ரூ.64,820 – ரூ.1,20,940 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவர். நல்ல வாய்ப்பை அனைவருக்கும் SHARE செய்யுங்க.

News January 5, 2026

ராஜபாளையத்தில் மதுபானக் கூடத்தில் பணம் திருட்டு

image

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே அரசு மதுபானக் கடையில் மதுபானக் கூடம் செயல்பட்டு வருகிறது. திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த கோபி மேலாளராக பணிபுரிந்து வருகிறாா். கோபி மதுபானக் கூடத்தை பூட்டிவிட்டு காலையில் வந்து பாா்த்தபோது பூட்டை உடைத்து ரூ. 6000 திருடப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறுத்து வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!