India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை மாவட்டம் வி.கே.புரத்தை அடுத்த அகஸ்த்தியர்பட்டி மின்னகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (23). இவர் சரியான வேலை கிடைக்காத விரக்தியில் நேற்று பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தினார். அம்பை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று வந்தார் . பின்னர் மேல்சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதனால் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது என ஆட்சியர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் TABCEDCO கறவை மாடுகளை வாங்க ரூ.1,20,000 வரை கடன் வழங்குகிறது. இந்த கடனை பயனாளிகள் 3 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ள 18 முதல் 60 வயதிற்குட்பட்டவர்கள், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இதற்கு விண்ணப்பிக்கலாம். SHARE IT

பாலாமடை பால்பண்ணை தெருவை சேர்ந்தவர் சுதாகர்(29). இவர் தனது மனைவி பேச்சியம்மாளை(26) இன்று நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில், வெட்டி படுகொலை செய்தார். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் தகாத உறவு காரணமாக கொலை நடந்தததாக தகவல். இதுகுறித்து மேலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது மற்றும் 2 வருடமாக கருத்து வேறுபாட்டால் பிரச்னை நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.

திருநெல்வேலி மக்களே..! போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!

நெல்லை பாஜக தெற்கு மாவட்டம், நாங்குநேரி சட்டமன்ற தொகுதிப் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆந்திர மாநில பாஜக செயலாளர் பாவணி ரெட்டி நேற்று நாங்குநேரி தொகுதிக்கு வருகை தந்தார். தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஒன்றியத் தலைவர்கள் மற்றும் அணி பிரிவு தலைவர்களை நேரில் சந்தித்து தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சியின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

கங்கைகொண்டான் அருகே கல்வெட்டான்குழியில் மூழ்கி ஆந்திராவை சேர்ந்த இளைஞர் கிருஷ்ண நாயுடு(22) உயிரிழந்தார். கட்டட தொழிலாளியான அவர் சீவலப்பேரி அருகே பதினாலாம்பேரியில் தங்கி வேலை செய்து வந்தார். சனிக்கிழமை மாலை குளிக்கச் சென்றவர் திரும்பாததால் புகார் அளிக்கப்பட்டது. தேடுதலில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. கங்கைகொண்டான் தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டனர்; Sevalaperi போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரம் வாய்க்கால் தெருவை சேர்ந்தவர் கங்காதரன்(50). இவர் அப்பகுதியில் உள்ள பலரிடம் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கங்காதரன் கந்துவட்டி கேட்டதாக ஒருவர்
வி கே புரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கங்காதரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்

பொதுத்துறை நிறுவனமான BSNL-ல் 120, Senior Executive Trainee (Telecom and Finance) காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E., B.Tech., C.A., C.M.A. படித்த, 21 முதல் 30 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஊதியமாக ரூ.24,900 – ரூ.50,500 வரை வழங்கப்படும். இதற்கான தேர்வு ஆன்லைன் மூலம் நடைபெறும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் <
Sorry, no posts matched your criteria.