India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பாளை மகாராஜா நகரை சேர்ந்தவர் லட்சுமணன் (57). இவர் நெல்லை GH-ல் எலக்ட்ரிக் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது முடிவுக்கு யாரும் காரணம் இல்லை என கடிதம் எழுதி வைத்துள்ளார். இதுகுறித்து ஐகிரவுண்டு போலீசார் வழக்குப்பதிந்து பணியின் போது ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரேணுகா என்பவரால் பெண் குழந்தை பெற்றெடுக்கப்பட்டு பின்பு அவர் மருத்துவமனையிலேயே அக்குழந்தையை விட்டுச் சென்று விட்டார். அக்குழந்தையை குழந்தை உதவி மைய பணியாளர் மூலமாக மீட்டு குழந்தை நலக்குழுவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அக்குழந்தைக்கு குழந்தை நலக்குழுவால் கயல்விழி என்று பெயரிடப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் சுகுமார் நேற்று தெரிவித்தார்.

நெல்லை மாவட்ட எஸ்பி டாக்டர் வி.பிரசண்ண குமார் ஐபிஎஸ் “மக்களைத் தேடி மாவட்ட காவல்” திட்டத்தை அவர் மேலத்தாழையூத்தில் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு தனி காவலர். 3 மாதங்களில் 100% சிசிடிவி கண்காணிப்பு இலக்கு. பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க: 94981 01740 என்ற புதிய மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். *ஷேர் பண்ணுங்க.

நெல்லை மாவட்டத்தில் விசார பருவத்திற்கான நெல் அறுவடை செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் நெல்லை கலெக்டர் சுகுமார் உத்தரவின் பேரில் 74 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதில் தேவையான அனைத்து உபகரணங்களும் காலி சாக்குகளும் போதிய அளவில் வழங்கப்பட்டு வருகிறது.நெல் குவிண்டால் ஒன்றுக்கு அரசு நிர்ணயித்த விலை விபரங்கள் கொள்முதல் நிலையங்களே வைக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு – நிதி தகுதி தளர்வு TANFINET இணையதள போர்டல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார் இன்று தெரிவித்தார். தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் பாரத் நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களுக்கு உயர்தர இணைய சேவைகளை வழங்கி வருகிறது என்றார்.

திருநெல்வேலி, கண்டியப்பேரி அரசு மருத்துவமனை மேலப்பாளையம் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆஸ்பத்திரியில் சுகாதார வசதிகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார். காலை உணவுத் திட்ட பிரச்னைகள் குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். இதில் மருத்துவர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் முத்துப்பட்டன். இவர் தனது மனைவி சுதாவுடன் ஏற்பட்ட தகராறில் அரிவாளால் மனைவியை வெட்டி கொலை செய்தார். இது குறித்து தகவல் அறிந்த அம்பாசமுத்திரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட சுதாவின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். மனைவியை வெட்டிய முத்துப்பட்டனை கைது செய்தனர்.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய, 4 தென் மாவட்டங்களில் கைப்பற்றப்பட்ட 681 கிலோ கஞ்சா நீதிமன்றங்களின் உத்தரவின் படி, திருநெல்வேலிசரக DIG ப. சரவணன் தலைமையில், இன்று (மார்ச்.12) காலை திருநெல்வேலி மாவட்ட S.P. டாக்டர் V. பிரசண்ண குமார் முன்னிலையில், திருநெல்வேலி மாவட்டம், பாப்பாங்குளம் பொத்தையடி தனியார் நிறுவன ராட்சச அடுப்பில் வைத்து, தீயிட்டு எரித்து அழிக்கப்பட்டன.

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரம நிலை தொடர்கிறது. இந்நிலையில், உங்களின் G-PAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். G-PAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும்,. உடனடியாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

நெல்லை மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை கிளிக் செய்து அனைத்து சேவையையும் இதிலே பெறலாம். மேலும், இந்த சேவையைப் பெற உதவி தேவைப்பட்டால் 9884924299 என்ற உதவி எண்ணை அழைக்கலாம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Share பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.