India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

நெல்லை மக்களே, பிறப்பு, இறப்பு, வருமானச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ் என 50 வகையான அரசு சான்றிதழ்களை பெற இனி அரசு அலுவலகலகம் சென்று அலைய வேண்டியதில்லை. தமிழக அரசு மெட்டா நிறுவனத்துடன் இணைந்து 7845252525 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்துள்ளது. தங்களுக்கு தேவையான சான்று பற்றி குறுஞ்செய்தியும், தகுந்த ஆதாரமும் அனுப்பினால் போதும். தேவையான சான்றிதழ் உங்கள் வாட்ஸ் அப்-க்கே வரும். SHARE பண்ணுங்க.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை 11ம் தேதி புதன்கிழமை தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நெல்லை மாவட்டத்தில் 96 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 22,601 பேர் இந்த தேர்வு எழுத உள்ளனர். இதில் 11,243 பேர் மாணவிகள் ஆவர் 11,358 பேர் மாணவர்கள் ஆவர் என சிஇஓ சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

நெல்லை – கர்நாடக மங்களூரு இடையே புதிய வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நாளை (புதன்கிழமை) காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.தொடங்கி வைக்கிறார். வண்டி எண்: 16707 / 16708 நெல்லையிலிருந்து ஒவ்வொரு புதன்கிழமையும் பிற்பகல் 3:45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6:55 மணிக்கு மங்களூரு செல்லும். மறுமார்க்கத்தில், மங்களூருவிலிருந்து வியாழன் மதியம் 1 மணிக்கு புறப்படும்.

நெல்லை மக்களே, உங்கள் ஏரியாவில் உள்ள குறைகளை தெரிவிக்க உங்கள் பகுதி தாசில்தார் செல்போன் நம்பரை அவசியம் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
திசையன்விளை- 9384094224
சேரன்மகாதேவி- 9384094223
மானூா்- 9384094222
இராதாபுரம்- 9445000674
நாங்குநேரி- 9445000673
அம்பாசமுத்திரம்- 9445000672
பாளையங்கோட்டை- 9445000669
திருநெல்வேலி- 9445000671
இதை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

களக்காடு புலிகள் காப்பக பகுதியில் அமைந்துள்ள தலையணை சூழல் சுற்றுலா பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி களக்காடு தலையணை சூழல் சுற்றுலா பகுதியில் இன்று (10.03.2026) முதல் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. அதேபோல் தலையணையை பார்வையிடவும் தடை விதிக்கப்படுகிறது.

கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி(30) கீழநத்தம் பகுதியில் வாளை காட்டி பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டார். இது குறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரிடம் விசாரணை நடத்த முயன்ற போது போலீசாரையும் வாளை காட்டி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் பாளை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து மாயாண்டியை நேற்று கைது செய்தனர்.

சிவந்திப்பட்டி கலைக் கோவில் நகரைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் குடித்து விட்டு மதுபோதையில் வீட்டில் தனது தாயாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாயாண்டியின் தாயார் மகனை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் மாயாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த சிவந்திபட்டி காவல்துறையினர் மகனை கொலை செய்த தாயாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின்படி இன்று இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீஸ் சரகம் வாரியாக காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் விபரத்தை மாநகர காவல் துறை இன்று இரவு வெளியிட்டுள்ளது. அவரது கைபேசி எண் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற
1. இங்கு <
2. உங்க விவரங்களை பதிவிட்டு ‘Register ‘ பண்ணுங்க.
3. விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் கொடுங்க.
இலவச சிலிண்டர் உங்க வீடு தேடி வரும். விவரங்களுக்கு: 1800-233-3555, 1800-266-6696
Share பண்ணுங்க…!
Sorry, no posts matched your criteria.