India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மார்க்கெட் பகுதியில் மது விலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சட்டவிராதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட பாளையை சேர்ந்த ராமகிருஷ்ணன்(28) என்பவரிடமிருந்து 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, மது விலக்கு அமலாக்க பிரிவு குற்ற எண் 42/2026 ன் படி வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.

மானூர் அருகே உக்கிரன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த லின்சன் மைக்கேல் தனது மனைவியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகிறார். மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியில் இருந்த மைக்கேல் வேலைக்கு செல்லாமல் உக்கிரன்கோட்டையில் உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். இந்நிலையில் அங்குள்ள கருமேனியன் குளத்தில் அவருடைய உடல் மிதந்துள்ளது. மானூர் போலீசார் உடலை கைப்பற்றி இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை – மங்களூர் இடையே புதன்கிழமை தோறும் நெல்லையிலிருந்து வாராந்திர ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது. மதியம் 3. 45 மணிக்கு இந்த ரயில் புறப்படும். கோவில்பட்டி, சாத்தூர் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கொல்லங்கோடு, பாலக்காடு, சொரனூர், திரூர், கோழிக்கோடு வடகரை தலசேரி, காஞ்சங்காடு, காசர்கோடு வழியாக மங்களூர் செல்லும்.

நெல்லை மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றை தனித்தனியாக பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <

திருநெல்வேலி மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் மின்தடை உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த கவலை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க.

நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய் தலைமையில் இன்று மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோப்புகளை முறையாக பராமரிக்கும் விதம் குறித்தும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் காவல் அதிகாரிகளுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.

நெல்லை எம் எல் ஏ நைனார் நாகேந்திரன் செய்தி குறிப்பில், மதிய உணவின் தரத்தைக் கூட உறுதி செய்ய இயலாத போலி சமூகநீதி மாடல் அரசு இது. கோவை கவுண்டம்பாளையம் மாநகராட்சி பள்ளியில், பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்ட 44 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது போலி சமூக நீதி மாடல் அரசின் கோர முகத்தை மீண்டுமொரு முறை வெளிப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த மாயாண்டி என்பவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டில் குடும்பத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன் தினம் மாயாண்டி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தனது தாயை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் அவரது தாய் நிலை குலைந்த நிலையில் தற்காப்புகாக வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மாயாண்டியின் மார்பில் சரமாரியாக குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே மாயாண்டி இறந்தார்.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரும்பத்து, மஞ்சங்குளம் ஆகிய பகுதிகளில் இன்று மத்திய துணை ராணுவ படையினர் மற்றும் மாவட்ட காவல் துறையினர் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தினர். விரைவில் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பொதுச் தேர்தல் பாதுகாப்பு மற்றும் அமைதியாக தேர்தல் நடைபெறுவது தொடர்பாக இந்த அணிவகுப்பு நடைபெற்றது. இதில் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரும்பத்து, மஞ்சங்குளம் ஆகிய பகுதிகளில் இன்று மத்திய துணை ராணுவ படையினர் மற்றும் மாவட்ட காவல் துறையினர் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தினர். விரைவில் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பொதுச் தேர்தல் பாதுகாப்பு மற்றும் அமைதியாக தேர்தல் நடைபெறுவது தொடர்பாக இந்த அணிவகுப்பு நடைபெற்றது. இதில் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.