Tirunelveli

News March 25, 2026

நெல்லை: இரவில் சரமாரியாக வெட்டிக்கொலை

image

மூலைக்கரைப்பட்டி அருகே மாயநேரியை சேர்ந்தவர் ஆறுமுகப்பெருமாள். இவருடைய மனைவியின் அண்ணன் கிட்டு என்ற கிருஷ்ணபெருமாள். இவர்களுக்குள் ஏற்கனவே முன்விரோதம் உள்ள நிலையில் நேற்றி இரவு இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணபெருமாள் மறைத்து வைத்திருந்த அருவாளால் ஆறுமுகபெருமாளை சரமாரியாக வெட்டியதில் அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

News March 25, 2026

நெல்லை: இரவில் சரமாரியாக வெட்டிக்கொலை

image

மூலைக்கரைப்பட்டி அருகே மாயநேரியை சேர்ந்தவர் ஆறுமுகப்பெருமாள். இவருடைய மனைவியின் அண்ணன் கிட்டு என்ற கிருஷ்ணபெருமாள். இவர்களுக்குள் ஏற்கனவே முன்விரோதம் உள்ள நிலையில் நேற்றி இரவு இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணபெருமாள் மறைத்து வைத்திருந்த அருவாளால் ஆறுமுகபெருமாளை சரமாரியாக வெட்டியதில் அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

News March 24, 2026

நெல்லை வருகிறார் எடப்பாடி பழனிசாமி

image

சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்குகிறார். வருகிற 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்வார் என்று அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இதை அடுத்து பிரச்சார நிகழ்ச்சி ஏற்பாடுகளை அதிமுகவுடன் மும்முரமாக செய்து வருகின்றனர்.

News March 24, 2026

நெல்லையில் பரபரப்பு ஏற்படுத்திய கொலை வழக்கின் தீர்ப்பு

image

திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரியில் 2021 ஏப்.18ல் புகழ்பெற்ற சீவலப்பேரி சுடலை மாடசுவாமி கோவில் பூசாரி சிதம்பரம் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளிகளான தங்கபாண்டி, பேச்சிகுட்டி, முருகன் ஆகிய மூவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5000 அபராதம் விதித்து நீதிபதி ராபின்சன் ஜார்ஜ் இன்று தீர்ப்பளித்தார்.

News March 24, 2026

நெல்லையில் பரபரப்பு ஏற்படுத்திய கொலை வழக்கின் தீர்ப்பு

image

திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரியில் 2021 ஏப்.18ல் புகழ்பெற்ற சீவலப்பேரி சுடலை மாடசுவாமி கோவில் பூசாரி சிதம்பரம் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளிகளான தங்கபாண்டி, பேச்சிகுட்டி, முருகன் ஆகிய மூவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5000 அபராதம் விதித்து நீதிபதி ராபின்சன் ஜார்ஜ் இன்று தீர்ப்பளித்தார்.

News March 24, 2026

BREAKING நெல்லை அல்வாவுக்கு வந்த சிக்கல்?

image

நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் செல்லும் வழியில் உள்ள பிரபல அல்வா கடையில் சிலிண்டர் தட்டுப்பாட்டால் இன்று பிற்பகல் முதல் உற்பத்தி நிறுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. சிலிண்டர் கிடைக்காத நிலையில் அல்வா உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த இருப்பதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இருட்டுக்கடை அல்வாவுக்கு அடுத்தபடியாக நெல்லையில் இந்த கடை புகழ்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

News March 24, 2026

நெல்லை: என்.எல்.சி.யில் காலி பணியிடங்கள் அறிவிப்பு

image

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான என்.எல்.சி இந்தியாவில் 56 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் நெய்வேலியில் 26 பணி இடங்களும், தூத்துக்குடி என்.டி.பி.எல் அனல்மின் நிலையத்தில் 4 பணி இடங்களும் அடங்கும். ஆர்வமுள்ள 28 -31 வயதுடையவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு ஏப்.9 க்குள் விண்ணப்பிக்கலாm. SHARE IT

News March 24, 2026

நெல்லை: கேஸ் சிலிண்டர் புக் செய்வது EASY!

image

நெல்லை மக்களே, கேஸ் சிலிண்டரை புக் செய்ய போனில் இருந்து SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் REFILL என டைப் செய்து 7718955555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், HP சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு அனுப்பி கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இனி கேஸ் ஏஜென்சிக்கு நேரில் செல்ல தேவையில்லை. SHARE பண்ணுங்க.

News March 24, 2026

நெல்லை: வீடு புகுந்து அடுத்தடுத்து நகை, பைக் திருட்டு

image

சாந்தி நகரை சேர்ந்தவர் சங்கர்(65). கிருஷ்ணாபுரம் கலைக் கோவிலில் நகரில் உள்ள இவரது தம்பியின் பூட்டி இருந்த வீட்டில் மர்ம நபர் புகுந்து 8 பவுன் நகை, ரூ.5000 ரொக்கத்தை திருடிச் சென்றார். இதேபோல் கிருஷ்ணாபுரம் தனலட்சுமி நகரில் ரகு என்பவர் தனது வீட்டின் நிறுத்தி இருந்த பைக்கை மர்மநபர் திருடி சென்றார். இச்சம்பவங்கள் குறித்து சிவந்திப்பட்டி போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

News March 24, 2026

நெல்லை: வீடு புகுந்து அடுத்தடுத்து நகை, பைக் திருட்டு

image

சாந்தி நகரை சேர்ந்தவர் சங்கர்(65). கிருஷ்ணாபுரம் கலைக் கோவிலில் நகரில் உள்ள இவரது தம்பியின் பூட்டி இருந்த வீட்டில் மர்ம நபர் புகுந்து 8 பவுன் நகை, ரூ.5000 ரொக்கத்தை திருடிச் சென்றார். இதேபோல் கிருஷ்ணாபுரம் தனலட்சுமி நகரில் ரகு என்பவர் தனது வீட்டின் நிறுத்தி இருந்த பைக்கை மர்மநபர் திருடி சென்றார். இச்சம்பவங்கள் குறித்து சிவந்திப்பட்டி போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!