India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தனியார் நிறுவனம் மற்றும் தாட்கோ இணைந்து ஒப்பனை மற்றும் அழகுக்கலை பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. 18 வயது நிரம்பிய விருப்பமுள்ள இளைஞர்கள் மாவட்ட மேலாளர், தாட்கோ (அ) ஆட்சியர் அலுவலகம் தேனி என்ற முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது 04546-260995 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டோ விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

தேனி மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

தேனியில் நாளுக்கு நாள் போதை பொருள், புகையிலை, கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. எனவே பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் சட்ட விரோத மதுவிற்பனை, கஞ்சா (ம) போதைப்பொருள் கடத்தல், விற்பனை செய்தல் தொடர்பான புகார்களை 93638 73078 என்ற WhatsApp எண்ணிற்கோ (அ) கட்டணமில்லா தொலைப்பேசி எண் 10581 என்ற எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் விபரம் பாதுகாக்கப்படும் என காவல்துறை அறிவிப்பு. SHARE

தேனியை சேர்ந்தவர் சங்கரகுமார். இவர் குடும்பத்துடன் ஏரல் சேர்மன் கோயிலுக்கு சென்றவர் தாமிரபரணி ஆற்றில் நேற்று மாலை 4 மணி அளவில் குடும்பத்தோடு குளித்தார். அப்போது சங்கரகுமாரின் மகள்கள் அபிநயா (16), மீனாட்சி (12) ஆகியோர் ஆற்றில் குளித்த போது மூழ்கினர். ஏரல் தீயணைப்பு துறையினர் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தேனி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் குமரி ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டு, இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, மக்கள் தங்களது அனைத்து அடிப்படை தேவைகளை தயார் நிலையில் வைத்துக் கொள்வது நல்லது.

தேனி மாவட்டத்தில் இன்று 20.02.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

ஆண்டிபட்டி, முத்தனம்பட்டியை சேர்ந்தவர் சிவராஜர் (41). இவர் நேற்று க.விலக்கு பகுதியில் அவரது பைக்கில் சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முற்பட்ட போது, ரஞ்சித் குமார் என்பவர் ஓட்டி வந்த லோடு ஆட்டோ இவரது பைக் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சிவராஜர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து க.விலக்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை.

தேனி மக்களே, நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. இங்கே <

தேனி மக்களே, E.C ஒரே சான்றிதழ் 01.01.1975 – 17.02.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.இங்கு <
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 17.02.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும்.
எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் துவங்க உள்ளது. இதனை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியும் 53 எஸ்.ஐ.,க்களை திண்டுக்கல் மாவட்டத்திற்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் 58 எஸ்.ஐ,க்களை தேனி மாவட்டத்திற்கும் என மொத்தம் 111 பேரை பணியிட மாறுதல் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.