India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தின், இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளராக உள்ள, மாநிலங்களவை உறுப்பினர். ஆர். தர்மர், அதில் இருந்து விலகி அஇஅதிமுகவில் இணைந்தார். இன்று (ஜன, 24) மாலை முன்னாள் முதல்வர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்று தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். உடன் ஆதரவாளர்கள் இருந்தனர்.

முதுகுளத்தூரை சேர்ந்தவர் ஆர்.தர்மர், 1987-ல் அதிமுகவில் இணைந்து
1990 – 1995 புளியங்குடி கிராம கிளை செயலாளர்
1996 – 2006 ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி து.செ
2006 – 2014 முதுகுளத்தூர் ஒ.செ
2014 – 2016 மா.செ
முதுகுளத்தூர் ஒன்றியப் பெருந்தலைவர்
20 ஆண்டுகள் ஒன்றிய யூனியன் கவுன்சிலர்
2 முறை முதுகுளத்தூர் கூட்டுறவு நிலவள வங்கி தலைவர் மற்றும்
தற்போது ராஜ்ய சபா எம்.பியாக பதவி வகிக்கிறார்.

தமிழக அரசின் NEEDS திட்டத்தின் கீழ் முதல்முறை தொழில் தொடங்குவோருக்கு ரூ.25 லட்சம் வரை மானியம் தரும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 21 வயது நிரம்பியவர்கள், குறைந்தபட்சம் 12th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க, மேலும் தகவல் தெரிய இங்கு <

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மிதமான மழை பெய்து வரும் நிலையில், நாளை(ஜன.25) கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க.

ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளரான ராஜ்யசபா எம்.பி தர்மர், அதிமுகவில் இன்று இணைய உள்ளார் என தகவல். முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த எம்.பி நவாஸ்கனி, அமைச்சர் ராஜ கண்ணப்பன் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், எம்.பி தர்மர் அதிமுகவில் இணைவது இபிஎஸ்-க்கு கூடுதல் வலு சேர்க்கும் என கூறப்படுகிறது. இதனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் இராமநாதபுரத்தில் கடும் போட்டி உருவாகலாம்!

இராம்நாடு மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். இங்கு <

முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட கூவர் கூட்டம் கிராமத்தை சேர்ந்தவர் முருகவேல் (39). இவர் இடப்பிரச்சனை காரணமாக 2021ம் ஆண்டு தனது பெரியப்பா முனியசாமியை (85) கொலை செய்தார். இதுகுறித்த புகாரின் பேரில் இளஞ்செம்பூர் போலீசார் முருகவேலை கைது செய்தனர். இது தொடர்பாக பரமக்குடி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இந்நிலையில் முருகவேலுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி பாலமுருகன் தீர்ப்பு அளித்தார்.

ராம்நாடு மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த (டிச.23) மீன்பிடிக்க சென்று எல்லை தாண்டி மீன்பிடித்த வழக்கில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களை நேற்று (ஜன.23) மன்னார் நீதிமன்ற நீதிபதி ஹிபத்துல்லா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்கள் 12 பேருக்கும் தலா ரூ.1.50 லட்சம் அபராதம், தொகையை கட்ட தவறினால் 6 மாத சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஜனவரி 23) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.