Ramanathapuram

News January 23, 2026

இராம்நாடு: ரூ.520 செலுத்தினால் ரூ.10 லட்சம் மருத்துவக் காப்பீடு

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். *SHARE

News January 23, 2026

ராமநாதபுரம்: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

image

ராமநாதபுரம் மக்களே, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது, பயிர்களை ஆய்வு செய்வது VAOவின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04567 230036) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

News January 23, 2026

ராம்நாடு: இலவச வக்கீல் வேண்டுமா? இதை பண்ணுங்க!

image

ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.ராமநாதபுர மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04567-230444
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
4.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 23, 2026

ராமநாதபுரத்தில் 3 நாள் குடிநீர் வராது!

image

ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில், சக்கரக்கோட்டை ரயில்வே தண்டவாளம் அருகே பிரதான குழாயில் ஏற்பட்டுள்ள கசிவைச் சரிசெய்யும் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் ராமநாதபுரம், கீழக்கரை, ராமேஸ்வரம் நகராட்சிகள் மற்றும் திருப்புல்லாணி, மண்டபம் ஒன்றிய பகுதிகளில் ஜனவரி வரும் 27 முதல் 29-ம் தேதி வரை 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு கூட்டு குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. SHARE!

News January 23, 2026

இராமநாதபுரம் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

இராமநாதபுரம் பழைய ஆட்சியர் அலுவலகம் கட்டிடத்தில் வருகின்ற ஜன 30ம் தேதி விவசாயிகளுக்கு குறைதீர் கூட்ட முகாம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் காலோன் தலைமையில் அனைத்து வகையான துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர். விவசாயிகள் கலந்து கொண்டு அவர்களின் குறைகளை மனுக்களாக அளிக்கும்படி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 23, 2026

இராமநாதபுரம் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

இராமநாதபுரம் பழைய ஆட்சியர் அலுவலகம் கட்டிடத்தில் வருகின்ற ஜன 30ம் தேதி விவசாயிகளுக்கு குறைதீர் கூட்ட முகாம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் காலோன் தலைமையில் அனைத்து வகையான துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர். விவசாயிகள் கலந்து கொண்டு அவர்களின் குறைகளை மனுக்களாக அளிக்கும்படி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 23, 2026

ராம்நாடு : 1975 – 2026 வரை ஒரே வில்லங்க சான்று – CLICK NOW!

image

இராமநாதபுரம் மக்களே, E.C 01.01.1975 – 23.01.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.இங்<>கு க்ளிக்<<>> செய்யுங்க
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 23.01.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

News January 23, 2026

பாம்பன் பாலம் கடந்து வந்த பாதை!

image

1902 ஆங்கிலேயர் காலத்தில் பாலம் கட்டுமான பணிகள்
1913 கப்பல்கள் செல்ல தூக்குப்பால பணிகள் ஜூலையில் தொடங்கின.
1914 பிப்.24 ரயில் போக்குவரத்து தொடங்கியது.
2007 அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது.
2022 டிச. 23 ரயில் போக்குவரத்து நிறுத்தம்
2026 ஜன.22 பாலத்தை அகற்றுவதற்கான பணிகள்
பாம்பன் பாலத்தின் உங்களின் நினைவுகளை பகிருங்க..
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர்!

News January 23, 2026

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஜனவரி 22) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

News January 22, 2026

இராம்நாடு: விடைபெற தயாராகும் பாம்பன் பாலம்

image

பாம்பனில் ஆங்கிலேயர் அமைத்த பழைய ரயில் தூக்குபாலம் அதன் உறுதித்தன்மை இழந்ததால் ரயில்வே நிர்வாகம் அதனை அகற்ற முடிவு செய்து டெண்டர் விடப்பட்டு ரூ.2.81கோடியில் தனியார் நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது. இன்று(ஜன.22) முதல் பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான பூஜையானது தனியார் நிறுவனம் சார்பில் நடைபெற்றுள்ளது.

error: Content is protected !!