India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுவை மாநிலம் கோரிமேடு பகுதியைச் சேர்ந்த ஆடியபாதம் (39). இவர் 2013-ம் ஆண்டு போக்ஸோ (POCSO) வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்து, தற்போது தலைமறைவாக உள்ளார். அவருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பிய நிலையில், அவர் வீட்டில் இல்லாததால், வரும் 23-ம் தேதி காலை 10:00 மணிக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மத்திய அரசு வருமான வரித்துறையில் Sport’s Quota பிரிவில் காலியாக உள்ள Stenographer, Tax Assistants மற்றும் Multi-Tasking Staff பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 97
3. வயது – 18 – 27
4. சம்பளம்: ரூ.18,000-ரூ.81,100
5. தகுதி: 10th, 12th, டிகிரி/விளையாட்டு தகுதி
6. கடைசி தேதி: 31.01.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

புதுச்சேரி விமான நிலைய ஆலோசனைக் குழுக் கூட்டம் காந்தி வீதியில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் எம்.பி வைத்திலிங்கம் தலைமை வகித்தார். இதில் புதிய வழித் தடங்களில் விமானங்கள் இயக்குவது, புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம், விமான நிலையம் அருகில் உள்ள பகுதிகளில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு ஆட்சேபனையில்லா சான்றிதழ் பெறுவது, விமான பயணிகளுக்கான வசதிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகளையும் வழங்கும் செயலிகள் உங்கள் போனில் உள்ளதா? இல்லை என்றால் இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு அலைவதை தவிர்கவும்.
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு, PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3. DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4. POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5. BHIM UPI – வங்கி பரிவர்த்தனை
6. M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ். SHARE IT

காரைக்கால் பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர், கைலாசநாதர் கோயிலில் மெய்க்காப்பாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் கோயிலைச் சுற்றி வந்தபோது, தண்டாயுதபாணி சுவாமி சன்னதியில் உள்ள ஒரு உண்டியலில் இருந்து இரண்டு நபர்கள் சுவிங்கம் தடவிய குச்சி மூலம் பணத்தைத் திருட முயல்வதைக் கண்டுள்ளார். அவர்களைக் கோயில் ஊழியர்கள் கையும் களவுமாகப் பிடித்து நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

ஏம்பலத்தைச் சேர்ந்தவர் குமரேசன். இவர் தனது மனைவியுடன் ஸ்கூட்டரில் திருவந்திபுரம் கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது பாகூர் மேம்பாலத்தில், அவர்கள் பின்னால் வந்த கார் ஒன்று, ஸ்கூட்டர் மீது மோதியுள்ளது. இதில் குமரேசன், அவரது மனைவி இருவரும் படுகாயமடைந்தனர். தற்போது இவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கிருமாம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி மின்துறை செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “புதுச்சேரி நகர்ப்புற மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு உட்பட்ட கடற்கரை சாலை, வம்பாகீரப்பாளையம், முருங்கப்பாக்கம் முதல் முத்தியால்பேட்டை வரை, சாரம் பாலாஜி நகர், வெஙகட்டா நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளவர்கள் தங்கள் மின் கட்டணத்தை செலுத்தி மின் துண்டிப்பை தவிர்க்கவும்.” இவ்வாறாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதுவை லாஸ்பேட்டை மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று (21-01-2026) காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை அவ்வை நகரின் ஒரு பகுதி, ராஜாஜி நகர், அசோக் நகரின் ஒரு பகுதி மற்றும் அதனைசார்ந்த பகுதிகளில், அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் மின் விநியோகம் முற்றிலும் தடைபடுமென்று புதுச்சேரி மின்வாரியம் அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் மிகவும் பிரபலமான கோயில்களில் மணக்குள விநாயகர் கோயிலும் ஒன்று, இந்த கோயிலுக்குச் சென்றால் தடைகள் நீங்கும், ஞானம், வெற்றி, செழிப்பு கிடைக்கும், மன அமைதி உண்டாகும், புதிய முயற்சிகளுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கும், குழந்தை பாக்கியம், குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற பல நன்மைகளை பெறலாம். இங்குள்ள விநாயகரின் அருள் மிகுந்த ஆற்றல் வாய்ந்ததாக நம்பப்படுகிறது. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.