Tamilnadu

News January 3, 2026

திண்டுக்கல் மூச்சு திணறி குழந்தை பலி!

image

திண்டுக்கல் அருகே எரியோடு இந்திரா காலனியை சேர்ந்தவர் பழனிச்சாமி (25).இவர் தனது மனைவி, 8 மாத ஆண் குழந்தையுடன் திண்டுக்கல் வேடபட்டியில் அவரது உறவினர் வீட்டில் குடியிருந்து வருகிறார்.கடந்த சிலநாட்களாக இவரது குழந்தை உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.நேற்று திடீரென குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை!

News January 3, 2026

கரூர்: சித்தப்பாவுடன் முறையற்ற உறவு!பகீர் சம்பவம்

image

கோவையை சேர்ந்தவர் ரத்தீஷ் மனைவி இந்திராணி (26) என்பவர், கரூரில் பணியாற்றி வரும் அவரது சித்தப்பா வினோத்வுடன்(35) திருமானம் தாண்டிய உறவில் இருந்துள்ளார். இதனை கண்டித்ததால் ரத்தீஷை கொலை செய்துள்ளனர். இந்த வழக்கில் இந்திராணி கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று வினோத் மற்றும் கொலைக்கு உடந்தையாக செயல்பட்ட அரவக்குறிச்சியை சேர்ந்த சுரேஷ்(43) ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

News January 3, 2026

தென்காசி: சாலை விபத்தில் தந்தை, மகன் பரிதாப பலி

image

தென்காசி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் கண்ணன் தனது குடும்பத்தோடு கடையநல்லூர் அருகே டூவீலரில் வந்த போது எதிரே வந்த கார் மோதியதில் அவரது 5 வயது மகன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். காவலர் கண்ணன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். அவரது மனைவிக்கு தென்காசி தனியார் மருத்துவமனையில் சிகிச்சஅளிக்கப்பட்டு வருகிறது.

News January 3, 2026

தூத்துக்குடி: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

விளாத்திகுளம் க.சுப்பிரமணியபுரம் தெற்கு தெரு பகுதியைச்சேர்ந்த முனியசாமி என்பவரின் மகன் பிரசாத் (24). இவருக்கு வாகன விபத்தின் காரணமாக காலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக பிரசாத் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார், இதனால் மனவேதனையில் இருந்த பிரசாத் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் விசாரணை.

News January 3, 2026

விருதுநகர்: 7th படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு

image

விருதுநகர் அருகே கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி. அருகில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் 7th படித்து வருகிறார். அரையாண்டுத் தேர்வு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளார். பெற்றோர் வேலைக்குச் சென்றதால் வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். விருதுநகர் மகளிர் போலீசார் வேல்முருகனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News January 3, 2026

கோவை: சித்தப்பாவுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய மனைவி!

image

கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள நல்லட்டிபாளையம் சேர்ந்தவர் ரத்தீஷ் மனைவி இந்திராணி (26) என்பவர், கரூரில் பணியாற்றி வரும் அவரது சித்தப்பா வினோத்வுடன்(35) திருமானம் தாண்டிய உறவில் இருந்துள்ளார். இதனை கண்டித்ததால் ரத்தீஷை கொலை செய்துள்ளனர். இந்த வழக்கில் இந்திராணி கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று வினோத் மற்றும் கொலைக்கு உடந்தையாக சுரேஷ்(43) ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

News January 3, 2026

பல்லடத்தில் வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது!

image

பல்லடம் – மங்கலம் ரோடு, அறிவொளி நகர் வாய்க்கால் அருகே, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, ஈச்சர் வேனில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள், மூட்டை மூட்டையாக கொண்டு வந்த திருப்பூர், அவிநாசிகவுண்டம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் முனியாண்டி, 48 என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 500 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

News January 3, 2026

தி.மலை: கூலித் தொழிலாளி மயங்கி விழுந்து பலி!

image

சென்னையை சேர்ந்த எலெக்ட்ரீஷியன் முத்து (51) இவர் தி.மலையில் எலெக்ட்ரீஷியன் வேலை செய்து வந்தார். குடும்பத் தகராறு காரணமாக இவர் மனைவி இவரை பிரிந்து சென்றுள்ளார். இந்த நிலையில், இவர் தனது நண்பர் ஊரான செய்யாறு வட்டம் கீழ்நீர்குன்றம் கிராமத்தில் கூலி வேலைகளை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் விவசாய நிலத்தில் வேலை செய்த போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 3, 2026

கள்ளக்குறிச்சி: கொண்டாட வந்தவர் துடிதுடித்து பலி!

image

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூா், கொழுந்திராம்பட்டைச் சோ்ந்தவா் சி.பவுல்ராஜ் (31). இவா் சென்னையில் எலெக்ட்ரிஷியன் தொழில் செய்துவந்தாா். புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்த அவர், நேற்று முன்தினம் பைக்கில் சொறையம்பட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, எதிரே வந்த டிராக்டர் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இது குறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 3, 2026

வேலூர்: 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதல் – ஒருவர் பலி!

image

வேலூர்: தாராபடவேடு கிராமத்தைச் சோ்ந்தவா் ரவி (60). மெக்கானிக்கான இவர், பள்ளிக்குப்பம் – காட்பாடி சாலையில், நேற்று தனது வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அதேசமயம், காட்பாடியை சோ்ந்த திவாகா், தனது பைக்கில் பள்ளிக்குப்பம் நோக்கி சென்று கொண்டிருந்தாா். 2 பைக்குகளும் நேருக்கு நேர் மோதியதில் தூக்கி வீசப்பட்ட ரவி, படுகாயமடைந்து உயிரிழந்தார். இதுகுறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!