Tamilnadu

News January 3, 2026

தஞ்சை: ஆற்றில் மிதந்து வந்த சடலம்

image

கண்டிதம்பட்டு உச்சி மாஞ்சோலை பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (33). கொத்தனாரான இவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில், ஈச்சன்விடுதி வழியாக செல்லும் கல்லணைக்கால்வாயின் மெயின் வாய்க்காலில் சதீஷ்குமார் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சிற்றம்பலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சதீஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

News January 3, 2026

மயிலாடுதுறை: 2025-ல் இத்தனை திருட்டா?

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2025) 98 திருட்டு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றுள் 8 வழக்குகள் பெருங்கொள்ளை குற்ற வழக்குகள் ஆகும். இந்த திருட்டு குற்ற வழக்குகள் தொடர்பாக 104 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், திருட்டுப்போன ரூ.81 லட்சத்து 82 ஆயிரம், மொத்த சொத்து மதிப்பில் ரூ.63 லட்சத்து 85 ஆயிரத்து 750 மதிப்புள்ள சொத்துகள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

News January 3, 2026

திருப்பூரில் குறைந்த விலையில் பைக்!

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு உரிமை கோரப்படாத இருசக்கர வாகனங்கள் பொது ஏலம் விடுபடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 433 இருசக்கர வாகனங்கள் வருகின்ற 12ஆம் தேதி நல்லூரில் உள்ள மாவட்ட காவல் ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏல விடப்படும் எனவும். இதனை 10 மற்றும் 11ஆம் தேதிகளில் நேரில் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHAREIT

News January 3, 2026

திருப்பூரில் குறைந்த விலையில் பைக்!

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு உரிமை கோரப்படாத இருசக்கர வாகனங்கள் பொது ஏலம் விடுபடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 433 இருசக்கர வாகனங்கள் வருகின்ற 12ஆம் தேதி நல்லூரில் உள்ள மாவட்ட காவல் ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏல விடப்படும் எனவும். இதனை 10 மற்றும் 11ஆம் தேதிகளில் நேரில் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHAREIT

News January 3, 2026

விழுப்புரம்: மனைவி கண்முன்னே கணவர் பலி!

image

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் தனது மனைவி, மகனுடன் விழுப்புரத்தில் இருந்து திருக்கோயிலூர் மார்க்கமாக சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது, மூகையூர் அருகே எதிரே வந்த லாரி மோதி கார் விபத்துக்குள்ளானது. இதில், முருகன் தனது மகன், மனைவி கண்முன்னே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அரகண்டநல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 3, 2026

புதுகை: தவறி விழுந்த மாணவன் பரிதாப பலி!

image

பொன்னமராவதி அடுத்த காரையூரை சேர்ந்தவர் சுதர்சன்(21). இவர் (டி.29) அன்று காரையூர் அடுத்த காரவயல் வயல் பகுதியில் உள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக ஏரியுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக மரத்திலிருந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது தந்தை அளித்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

News January 3, 2026

திருப்பத்தூர் பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை (ஜன3) மின்சார பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் மாலை வரை மின்தடை ஏற்படும் என மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர். மின்கம்பிகள் பராமரிப்பு, டிரான்ஸ்பார்மர் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளதால், குறிப்பிட்ட நேரங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.

News January 3, 2026

பெரம்பலூர்: படுக்கையிலிருந்து விழுந்த பெண் பலி!

image

குன்னம் தாலுகா, நமையூர் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் மஞ்சுளா (49). இவர் சிறு வயதிலிருந்தே சற்று மனநலம் குன்றியவர் என கூறப்படுகிறது. ஏற்கனவே பெற்றோர் இறந்த காரணத்தால் மஞ்சுளா, அவரது தம்பி செந்தில்குமார் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை படுக்கையிலிருந்து மஞ்சுளா தவறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.

News January 3, 2026

திருவாரூர்: இன்று இதை MISS பண்ணாதீங்க!

image

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இன்று (ஜன.03) மற்றும் நாளை (ஜன.04) காலை 9:30 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கல் தொடர்பான சிறப்பு முகம் நடைபெற உள்ளது. மேலும் இந்த முகாமில் 1-1-2026 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6-ஐ பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 3, 2026

புதுச்சேரியில் மருத்துவ மாணவர் கைது

image

புதுச்சேரி, அரியாங்குப்பம் ஆர்.கே.நகர், வாலிபால் மைதானம் அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவரை போலீசார் மடக்கிப் பிடித்து சோதனை செய்ததில், 1,460 கிராம் கஞ்சா வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர். விசாரணையில், அவர் டில்லியைச் சேர்ந்த லக் ஷ்யவிஜ் என்பதும், அவர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் பயின்று வருவதும் தெரிய வந்ததையடுத்து, அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!