India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காரைக்கால் மாவட்டத்தில் புதுச்சேரி அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், கார்னிவல் – “2026” கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க விருப்பமுள்ள உள்ளுர் கலைஞர்கள் தங்களின் விண்ணப்பத்தினை, நாளை (05.01.2026) திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்குள் காரைக்கால் மாவட்ட கலை பண்பாட்டுத்துறை அலுவலகத்தில் சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தஞ்சை மக்களே உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? <

வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்த பணிகள் தொடர்பாக, கிருஷ்ணகிரியில் உள்ள அனைத்து 1,149 ஓட்டுச்சாவடிகளில் தகுதியுள்ள குடிமக்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக இன்று 04.01.26 (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தகுதியுள்ள குடிமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் உள்ளிட்ட விண்ணப்பங்களை இம்முகாம்களில் சமர்ப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

நாகை மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா?<

தாடிக்கொம்பு, அழகுசமுத்திரபட்டி பிரிவு அருகே திண்டுக்கல்–கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூரில் இருந்து மதுரை நோக்கி அதிவேகமாக சென்ற கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி அப்பளம் போல் நொறுங்கியது. சம்பவத்தில் திருப்பூரை சேர்ந்த சேகர்(55) சம்பவ இடத்திலேயே பலியானார். டிரைவர் பாண்டித்துரை காயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

உடன்குடி அருகே கல்லாமொழி பகுதியைச் சேர்ந்தவர் மேரி (51). இவரின் மகன் விவேக் (32) என்பவர் மீன்பிடி தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த விவேக் அரிவாளால் மேரியை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து விவேக்கை கைது செய்தனர்.

திருச்சி மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? <

கரூர் மாவட்டம் குளித்தலை, மாயனூர், சிந்தாமணிப்பட்டி, வெங்கமேடு, லாலாபேட்டை, தோகைமலை ஆகிய காவல் நிலைய பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மது விற்ற பாப்பாத்தி (64), ஆசைத்தம்பி (57), ராமசாமி (60), செந்தில்குமார் (44), கிருஷ்ணமூர்த்தி (35), ராசம்மாள் (60) ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் 144 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

வீரபாண்டி அருகே உள்ள பாலார்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன் (33). இவர் அப்பகுதியில் கோழிப்பண்ணையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். தினமும் இரவில் கோழிகளுக்கு தீவனம் வைத்து வீடு திரும்புவார். நேற்று முன்தினம் இரவு தீவனம் வைக்க சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் நேற்று (ஜன.3) அங்கு சென்று பார்த்த போது பிரபாகரன் மின்சாரம் தாக்கி உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு.

விழுப்புரம் மாவட்டத்தின் 25-வது காவல் கண்காணிப்பாளராக (SP) சாய் பிரனீத் IPS பொறுப்பேற்ற பின், நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அதிரடி திட்டங்களை அறிவித்துள்ளார். கல்லூரி மாணவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.