Tamilnadu

News January 5, 2026

சிவகங்கை: ரூ.1,20,940 சம்பளத்தில் BANK வேலை; இன்றே கடைசி APPLY

image

சிவகங்கை மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு இன்றே (ஜன.5) கடைசி நாள். சம்பளம் ரூ.64,820 – ரூ.1,20,940 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவர். இந்த நல்ல வாய்ப்பை அனைவருக்கும் SHARE செய்யுங்க.

News January 5, 2026

சிவகங்கை: ரூ.1,20,940 சம்பளத்தில் BANK வேலை; இன்றே கடைசி APPLY

image

சிவகங்கை மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு இன்றே (ஜன.5) கடைசி நாள். சம்பளம் ரூ.64,820 – ரூ.1,20,940 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவர். இந்த நல்ல வாய்ப்பை அனைவருக்கும் SHARE செய்யுங்க.

News January 5, 2026

வில்லியனுார்: மனைவி பணம் தராததால் கணவன் தற்கொலை!

image

வில்லியனூர் பைபாஸ், பாரதி நகரைச் சேர்ந்தவர் சக்திவேல் (36). இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி சரியாக வேலைக்கு செல்லாமல், குடிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் பணம் தராததால் மனைவியுடன் கோபித்துக்கொண்டு, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News January 5, 2026

புதுகை: பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி

image

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அடுத்த தோப்புவயல் டாஸ்மாக் கடை அருகே, நேற்று முகமது நசீம் (35) பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு எதிரே பைக்கை ஓட்டி வந்த வினோத் காந்தி (32) மோதியதில் முகமது நசீமிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி யாஸ்மின் (30) அளித்த புகாரில் மணமேல்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 5, 2026

கள்ளக்குறிச்சியில் துடிதுடித்து பலி!

image

திருநாவலூர் ஒன்றியம் காம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வந்த நீதிதாஸ் என்பவர் கடந்த ஜூன்.3 ஆம் தேதி சேலம் சாலை, ஆத்தூர் அருகே சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 5, 2026

மயிலாடுதுறை: மேம்பாலம் நாளை திறப்பு!

image

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை கும்பகோணம் மார்க்கம் காவேரி நகர் பகுதியில் மொழிப்போர் தியாகி மாணவ மணி சாரங்கபாணி மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலம் சிதிலமடைந்து காணப்பட்டதால் தற்பொழுது மேம்பாலம் சீரமைக்கும் பணி நடைபெற்று பணிகள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் நாளை டிசம்பர் 5ஆம் தேதி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.

News January 5, 2026

தருமபுரி கலெக்டர் அறிவித்தார்!

image

திருநங்கை இச்சமுகத்தில் சந்திக்கும் எதிர்ப்புகளை மீறி தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து தனித்திறமையை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த வருகின்றனர். கடந்த 2025-2026ம் ஆண்டு நிதிக்கான சிறந்த திருநங்கைகளுக்கான விருது, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் திருநங்கைகள் தினத்தன்று பாராட்டுச் சான்றிதழ் மற்றும் காசோலை வழங்கப்படுகின்றது என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

News January 5, 2026

குமரியில் 2,300 மாணவர்களுக்கு இலவச லேப்டாப்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் முதற்கட்டமாக 11 அரசு கல்லூரிகள் 17 அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள் என்று மொத்தம் 28 கல்லூரிகளைச் சேர்ந்த 2,300 மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது. இன்று மாலை நாகர்கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் 672 பேருக்கு இலவச லேப்டாப் களை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தலைமை வகிக்கிறார்.

News January 5, 2026

ராஜபாளையத்தில் மதுபானக் கூடத்தில் பணம் திருட்டு

image

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே அரசு மதுபானக் கடையில் மதுபானக் கூடம் செயல்பட்டு வருகிறது. திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த கோபி மேலாளராக பணிபுரிந்து வருகிறாா். கோபி மதுபானக் கூடத்தை பூட்டிவிட்டு காலையில் வந்து பாா்த்தபோது பூட்டை உடைத்து ரூ. 6000 திருடப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறுத்து வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News January 5, 2026

JUST IN: சென்னையில் காதலிக்க மறுத்த பெண்ணை கொல்ல முயற்சி

image

சென்னை நெற்குன்றத்தில் சிலம்பரசன் என்ற நபர் கல்லூரி மாணவி ஒருவரை 3 மாதங்களாக தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்துள்ளார். மேலும், மதுபோதையில் இருந்த அவர், இன்று காலை காயப்போட துணியை எடுக்க சென்ற மாணவியை மாடியில் இருந்து தள்ளி விட்டு கொல்ல முயற்சித்துள்ளார். சுயநினைவின்றி கிடந்த மாணவிக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!