Tamilnadu

News January 5, 2026

கடலூர்: பொதுமக்களிடம் 571 மனுக்கள் பெற்ற ஆட்சியர்

image

கடலூரில் இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 571 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் அளித்தனர். அந்த மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காண வேண்டும் என மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News January 5, 2026

ஈரோடு இரவு ரோந்து காவலர் விபரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

News January 5, 2026

வேலூர் மடிக்கணினிகளை வழங்கிய கலெக்டர்!

image

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (ஜனவரி 05) முத்துரங்கம் அரசினர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 873 மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், அமுலு விஜயன், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் பாபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காஞ்சனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News January 5, 2026

திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (ஜன.05) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

News January 5, 2026

அரியலூர்: தவிகவில் இணைந்த அதிமுக பிரமுகர்

image

அரியலூர் அதிமுக பிரமுகர் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற வேட்பாளரும், அதிமுக மாவட்ட கவுன்சிலர் சேர்மன் சந்திரசேகர், தமிழக வெற்றி கழகத்தின் நிறுவன தலைவர் விஜய் முன்னிலையில், மாவட்ட செயலாளர் சிவா தலைமையில், தவெகவில் இணைந்து கொண்டார். அவருக்கு விஜய் பொன்னாடை அணிவித்து வாழ்த்து கூறினார். மேலும் தவெகவில் இணைந்த அதிமுக பிரமுகருக்கு அரியலூர் மாவட்ட தவெக அனைத்து பொறுப்பாளர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

News January 5, 2026

சேலம்: FREE கேஸ் சிலிண்டர் விண்ணப்பிப்பது எப்படி?

image

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற <>இங்கே கிளிக் <<>>செய்து தங்களுக்கு விருப்பமான கேஸ் நிறுவனத்தைத் (Indane/Bharat/HP) தேர்வு செய்யவும்
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4.மேலும் விவரங்களுக்கு 1800-266-6696 அழைக்கவும். ஷேர் பண்ணுங்க

News January 5, 2026

கோவை: FREE கேஸ் சிலிண்டர் விண்ணப்பிப்பது எப்படி?

image

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற <>இங்கே கிளிக்<<>> செய்து தங்களுக்கு விருப்பமான கேஸ் நிறுவனத்தைத் (Indane/Bharat/HP) தேர்வு செய்யவும்
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4.மேலும் விவரங்களுக்கு 1800-266-6696 அழைக்கவும். ஷேர் பண்ணுங்க

News January 5, 2026

தருமபுரி அரசு கல்லூரியில் ‘உலகம் உங்கள் கையில்’ நிகழ்ச்சி

image

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று மாலை 3 மணி அளவில் உலகம் உங்கள் கையில் – 10,00,000 மடிக்கணினிகளை மாணவ, மாணவியர்களுக்கு காணொளி கட்சி மூலாம் தொடங்கினார். இதை தொடர்ந்து, தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் மடிக்கணினிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி பங்கேற்று மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கினர்.

News January 5, 2026

மாணவர்களுக்கு பயிற்சிப்பட்டறை நடத்தும் எம்பி

image

தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறுவது எப்படி?
என்ற பயிற்சிப்பட்டறை திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் மாணவர்களுக்கு வரும் 25 ஆம் தேதி நடத்த உள்ளார். இதற்குமுன் பதிவு செய்வதற்காக மேல் உள்ள க்யூ ஆர் யை ஸ்கேன் செய்ய வேண்டும். மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ள: 9445500346 என்ற தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 5, 2026

பெரம்பலூர்: தோஷங்கள் நிவர்த்தியாக இங்க போங்க!

image

பெரம்பலூர் மாவட்டம் கூடலூர் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற நாகேஸ்வர சுவாமி திருக்கோயில், தோஷங்கள் நிவர்த்தியாகும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவருக்கு அபிஷேகம் செய்து, தோஷ நிவர்த்தி பரிகாரம் செய்து மனமுருகி வழிபட்டால், தோஷங்கள் நிரவர்தியாகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. மேலும் உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!