Tamilnadu

News January 6, 2026

சிவகங்கையில் இன்று இங்கெல்லாம் மின்தடை

image

சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தான் துணைமின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுதால், இன்று (ஜன-06) செவ்வாய்க் கிழமை காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை ஸ்ரீராம்நகர், கோட்டையூர், பள்ளத்தூர், கொத்தமங்கலம், கானாடுகாத்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. அதற்கேற்ப உங்கள் பணிகளை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள். SHARE IT…

News January 6, 2026

தஞ்சை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தஞ்சாவூரில், சுதந்திரப் போராட்ட வீரர்களின் குறைகளைக் கேட்டறியும் கூட்டம் வரும் ஜன.8-ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் கலந்து கொண்டு ஓய்வூதிய பலன்கள் தொடர்பான தங்கள் குறைகளையும், ஆலோசனைகளையும் நேரில் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News January 6, 2026

தென்காசி மக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தென்காசி முகாம்களில் புதிய வாக்காளர்கள் சேர்த்திட படிவம் 6 – 22,629 நீக்கல், ஆட்சேபனைக்கான படிவம் 7236, முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களுக்கான படிவம் 8 – 6818 ஆகிய எண்ணிக்கையில் பெறப்பட்டுள்ளது. மேலும், 01.01.2026 அன்று 18 வயது நிரம்பிய அனைத்து தகுதியான நபர்களும் 18.01.2026 வரை தங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து கொடுக்கலாம் என ஆட்சியர் தகவல்.

News January 6, 2026

புதுச்சேரி: இன்று இங்கெல்லாம் மின் தடை

image

புதுச்சேரியில் அமைந்துள்ள காரைக்கால் மாவட்ட மின் துறையில் பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று (06.01.2026) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பாரதியார் ரோடு, வண்டிக்கார தெரு, நேரு வீதி, மாதா கோவில் வீதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் மின் விநியோகம் இருக்காது என காரைக்கால், நகரம் I மின்துறை உதவிப் பொறியாளர் அறிவித்துள்ளார். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News January 6, 2026

திருவள்ளூர்: அதிமுக துணைச் செயலாளர் அதிரடி நீக்கம்!

image

திருவள்ளூர் மாவட்ட அதிமுக துணைச் செயலாளர் பாஸ்கரன் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டிற்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி, அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட வகித்து வந்த அனைத்து பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக நீக்கப்படுவதாக இபிஎஸ் அறிவித்தார்.

News January 6, 2026

பெரம்பலூர்: சைக்கிளில் மீது கார் மோதல்-ஒருவர் பலி

image

வல்லாவரம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செல்வகுமார் (46) என்பவர் சென்னைக்கு சென்று கொண்டிருக்கும் பொழுது, சைக்கிளில் சென்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத 45-வயது மதிப்பு தக்க நபரை மோதியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத அந்த நபர் உயிரிழந்தார். இது குறித்து மங்களமேடு காவல்துறையினர் வழக்குப் பதிந்து, அவர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

News January 6, 2026

அரியலூர்: தனியார்ப் பள்ளி வாகனம் மோதி இளைஞர் பலி

image

கடலூர் மாவட்டம், நடன சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (21). இவர் சபரிமலை செல்வதற்காக பூஜை சாமான்கள் வாங்க அரியலூர் மாவட்டம், பெரிய கிருஷ்ணாபுரத்தில் உள்ள அம்மன்குளம் அருகே சென்று கொண்டிருந்தபோது, கடலூரைச் சேர்ந்த தனியார்ப் பள்ளி ஒன்றின் வாகனம் மோதியுள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இது குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 6, 2026

விழுப்புரம்: ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது!

image

விழுப்புரம் அருகே கொண்டங்கி கிராமத்தில் வாத்துக்களுக்கு தீவனமாக பயன்படுத்த ரேஷன் அரிசியை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த சுபாஷ் (27) என்ற இளைஞரை குற்றப்பிரிவு போலீசார், நேற்று கைது செய்தனர். மேலும், அவரது வீட்டில் இருந்து 1,100 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், இது தொடர்பாக, பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 6, 2026

சென்னையில் தடம் புரண்ட ரயில்!

image

சென்னை எழும்பூர் அடுத்த சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் நின்ற பயணிகள் விரைவு ரயில் பெட்டிகள் இணைக்கும் போது, பெட்டிகள் தடம் புரண்டது. பெட்டிகள் இணைக்கும் போது, விபத்து ஏற்பட்டதாலும், பயணிகள் இல்லாததாலும் பாதிப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

News January 6, 2026

கோவையில் பெண்ணால் ஏற்பட்ட பரபரப்பு!

image

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வருவதையொட்டி நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த பொது மக்களை தீவிர பரிசோதனைக்கு பிறகு உள்ளே அனுப்பினர். அப்பொழுது கோவை சின்னவேடம்பட்டி சேர்ந்த நந்தகுமார் தங்கமணி தம்பதியர் சொத்து பிரச்சனை காரணமாக தீக்குளிப்பதற்காக 3 லிட்டர் டீசல் உடன் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!