Tamilnadu

News January 6, 2026

குமரியில் நாளை இங்கெல்லாம் கரண்ட் கட்…!

image

வடசேரி, ஆசாரிபள்ளம் மற்றும் தடிக்காரன்கோணம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜன.7) நடைபெற இருப்பதால் புத்தேரி, வீரநாரயணமங்கலம், கோதைகிராமம், வடசேரி, கிருஷ்ணகோவில்,மேலகலுங்கடி, கலுங்கடி, சக்திகார்டன், அருமநல்லூர், திடல், கீரிப்பாறை, அழகியபாண்டியபுரம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது என அறிவிப்பு. SHARE IT

News January 6, 2026

விருதுநகர்: நீதிமன்றம் அருகே கஞ்சா விற்பனை

image

ராஜபாளையம் நீதிமன்றம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த ஆவாரம்பட்டி தெருவை சேர்ந்த புவனேஸ்வரன் 20, மாதவ ராஜா 25, இருவரிடம் சோதனையில் தலா 100 கிராம் அளவுக்கு கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. கஞ்சாவை கைப்பற்றி கைது செய்து தப்பி ஓடிய ஒத்தப்பட்டி தெருவை சேர்ந்த பூவரசன் 23, என்பவரை போலீசார் தேடுகின்றனர்.

News January 6, 2026

விருதுநகர்: நீதிமன்றம் அருகே கஞ்சா விற்பனை

image

ராஜபாளையம் நீதிமன்றம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த ஆவாரம்பட்டி தெருவை சேர்ந்த புவனேஸ்வரன் 20, மாதவ ராஜா 25, இருவரிடம் சோதனையில் தலா 100 கிராம் அளவுக்கு கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. கஞ்சாவை கைப்பற்றி கைது செய்து தப்பி ஓடிய ஒத்தப்பட்டி தெருவை சேர்ந்த பூவரசன் 23, என்பவரை போலீசார் தேடுகின்றனர்.

News January 6, 2026

தென்காசி: இன்று இங்கெல்லாம் மின்தடை

image

தென்காசி மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று (ஜன.6) மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், தென்காசி நகர், மங்கம்மாள் சாலை, சக்திநகர், காளிதாசன் நகர், ஹவுசிங் போர்டு, கீழ்புலியூர், ஆழ்வார்குறிச்சி, கருத்தபிள்ளையூர், ஏ.பி.நாடானூர், துப்பாக்குடி, சம்பன்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் இருக்காது. SHARE

News January 6, 2026

தென்காசி: இன்று இங்கெல்லாம் மின்தடை

image

தென்காசி மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று (ஜன.6) மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், தென்காசி நகர், மங்கம்மாள் சாலை, சக்திநகர், காளிதாசன் நகர், ஹவுசிங் போர்டு, கீழ்புலியூர், ஆழ்வார்குறிச்சி, கருத்தபிள்ளையூர், ஏ.பி.நாடானூர், துப்பாக்குடி, சம்பன்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் இருக்காது. SHARE

News January 6, 2026

மயிலாடுதுறை மக்களுக்கு எச்சரிக்கை

image

மயிலாடுதுறை பொதுமக்கள் இணையதளத்தை பயன்படுத்தும் போது வரும் தேவையற்ற செயலிகளை(apps) தங்களது தொலைபேசியில், பதிவிறக்கம் செய்ய வேண்டாம். இதன் மூலம் உங்களுடைய தொலைபேசி ஹேக் செய்யப்பட்டு உங்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News January 6, 2026

திருச்சி: கையும் களவுமான சிக்கிய விஏஓ

image

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த பச்சைபெருமாள்பட்டியில் கிராம நிர்வாக அலுவலராக (விஏஓ) பிரபு என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வைரபெருமாள்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரிடம் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.5,000 லஞ்சம் பெற்றுள்ளார். அப்போது மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News January 6, 2026

தாராபுரம் அருகே வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது

image

தாராபுரம் அருகே அலங்கியம் பகுதியை சேர்ந்த கவுண்டத்தாள், இவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் ரூ.99,500-ஐ திருடி சென்றார். இது குறித்து அலங்கியம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சுகுமார் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து ரூ.99,500-ஐ பறிமுதல் செய்தனர்.

News January 6, 2026

அமெரிக்காவில் இருந்து புகார்.. மதுரையில் வழக்குப்பதிவு

image

மதுரை எல்லீஸ் நகர் சரவணன் 52 .அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வசிக்கிறார். இவரது எல்லீஸ் நகர் வீட்டில் அதே பகுதியைச் சேர்ந்த ஹவுஸ் பாட்ஷா என்பவர் அத்துமீறி நுழைந்து ஒரு பகுதியை ஆக்கிரமித்ததாகவும், சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும் வெளிநாட்டு வாழ் இந்தியர் செல் மூலம் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பினார். அதன் அடிப்படையில் ஹவுஸ் பாட்ஷா மீது, எஸ் எஸ் காலனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

News January 6, 2026

சிவகங்கை: புதிய தேர்வு தேதி அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 116 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டு 04.11.2025 அன்று நடைபெற இருந்த தேர்வு நிர்வாக காரணங்களுக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த தேர்வானது வரும் ஜன.9 அன்று சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற் தகுதி தேர்வு நடைபெறும் என்று மாவட்ட காவல் நிர்வாக அதிகாரி அறிவித்துள்ளார்.

error: Content is protected !!