India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உரிமை கோரப்படாத 433 இருசக்கர வாகனங்கள் வரும் ஜனவரி 12-ம் தேதி காலை 10 மணிக்கு ஏலம் விடப்படுகின்றன. ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் ஜனவரி 9, 10 தேதிகளில் வாகனங்களை நேரில் பார்வையிடலாம். பங்கேற்பாளர்கள் ஆதார் அட்டை மற்றும் ரூ.3,000 முன்பணம் செலுத்தி டோக்கன் பெற வேண்டும். ஏலம் எடுத்தவுடன் முழுத்தொகை மற்றும் GST செலுத்தி வாகனத்தைப் பெற்றுக்கொள்ளலாம். SHAREIT

வியாசர்பாடி எருக்கஞ்சேரி பகுதியை சேர்ந்த சுதந்தரம் (61) இவரது வீட்டின் மொட்டை மாடியில் கடந்த 30ம் தேதி இருவர் பட்டம் பறக்கவிடுவதை பார்த்த அவர் கண்டித்துள்ளார். மறுநாள் 2 பேரும் போதையில் வந்து அவரது வீட்டில் இருந்த சிசிடிவி மற்றும் பொருட்களை அடித்து சேதப்படுத்தினர். புகாரின் பேரில் இருவரையும் தேடி வந்த போலீசார் நேற்று முன்தினம் 17 வயது சிறுவர்களை கைது செய்து, 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு, அரசு பள்ளிகளில் எம்ஜிஆா் சத்துணவுத் திட்டத்தின் கீழ் சமையல் உதவியாளா் பணியிடங்களை நேரடி நியமனம் செய்யப்படவுள்ளது. இப்பணி 10ம் வகுப்பு தேர்ச்சி (அ) தோல்வி அடைந்த பெண்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும், இதற்கு 2026 ஜன 9ம் தேதி கடைசி நாள் ஆகும். விருப்பமுள்ளவர்கள் https://erode.nic.in/notice_category/recruitment/ என்ற லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்தார். SHARE பண்ணுங்க!

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

நீலகிரி மக்களே, பிறப்பு சான்றிதழ் என்பது நம் அடிப்படையான தேவைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக பள்ளியில் சேர, அரசாங்க வேலையில் பணியமர, பாஸ்போர்ட் அப்ளை உள்ளிட்டவற்றிக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் தேவை. எனவே பிறப்பு சான்றிதழ் அப்பளை பண்ணாமல் இருந்தாலோ (அ) தொலைந்து போயிருந்தாலோ உடனே இந்த <

ஆற்காட்டை அடுத்த கணியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன்(67). இவரது அனைவி ஜீவா. இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர், கீழ்விஷாரம் பகுதியில் உள்ள தனது மகன் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, நெடுஞ்சாலையைக் கடந்த போது அந்த வழியாக வந்த வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பூபாலன் உயிரிழந்தார். அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் குமாரச்சேரியில், இலவச வீட்டுமனை பட்டாவை வருவாய் கணக்கில் பதிவேற்றம் செய்ய ரூ.2,000 லஞ்சம் வாங்கிய வாலாஜாபாத் பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தவேலுவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். காவலாளி சிவக்குமாருக்கு DCM உதயநிதி ஸ்டாலின் வழங்கிய பட்டாவைப் பதிவேற்ற ஆனந்தவேலு லஞ்சம் கேட்டுள்ளார். சிவக்குமாரின் புகாரின் பேரில், நேற்று பணத்தை அவர் வாங்கும்போது கைது செய்தனர்.

காட்பாடியில் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்பாடி மிஷன் காம்பவுண்ட் பகுதியில் மதுபோதையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அசோக் நகரை சேர்ந்த மகேந்திரன் (23) என்பதும், அவர் மீது திருட்டு, வழிப் பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மகேந்திரனை கைது செய்தனர்.

விக்கிரவாண்டி அடுத்த வெங்கதூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜாக்கண்ணு (61) இவரது மகன் பாஸ்கரனுக்கும் மருமகளுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், மருமகள் பிரிந்து சென்றார். இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்த ராஜாக்கண்ணு, நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்துப் புகாரளிக்கப்பட்டதை அடுத்து, கெடார் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓசூரில் புதிதாக விமான நிலையம் அமைக்கும் திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் மத்திய அமைச்சரின் கருத்தால் புதிய நம்பிக்கை பிறந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆம், கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 150 கிலோமீட்டர் தூரத்திற்குள் புதிய விமான நிலைய அமைக்கக் கூடாது என்ற ஒரு ஒப்பந்தம் இருந்தது. அதனை மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு அதனை தளர்த்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.