Tamilnadu

News January 7, 2026

திருவள்ளூர்: 9 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்!

image

திருவாலங்காடு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த சிறுமியிடம் அதே பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன்(51), நெல்சன்(23) ஆகியோர் பாலியல் வன்முறை செய்ய முயன்றனர். அப்போது சிறுமி கூச்சலித்த சத்தம் போட்டடும், அவர்கள் தப்பி ஓடினர். அச்சிறுமி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து புகாரில் இருவரையும் நேற்று(ஜன.6) போலீசார் கைது செய்தனர்.

News January 7, 2026

சேலம்: ரூ.520-ல் ரூ.10 லட்சம் காப்பீடு!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

News January 7, 2026

கரூர்: ரூ.520-ல் ரூ.10 லட்சம் காப்பீடு!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவு

News January 7, 2026

தூத்துக்குடி கலெக்டரின் முக்கிய அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளுக்கு உயர்தர இணைய சேவை வழங்கும் திட்டம் தொடங்க உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் இளம் பகவத் தெரிவித்துள்ளார். எனவே, இதில் பயனடையும் தொழில் பங்கிட்டாளர்கள் https://tanfinet.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 7, 2026

திருச்சி: பொங்கல் சிறப்பு ரயில் அறிவிப்பு

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் பல்வேறு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலியில் இருந்து திருச்சி வழியாக செங்கல்பட்டிற்கு வரும் 9 மற்றும் 16 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயிலை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களது பயணத்தை எளிதாக்கி கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News January 7, 2026

புதுச்சேரி: ஆன்லைன் மோசடியில் ரூ.5.25 லட்சம் இழப்பு

image

முதலியார்பேட்டை பகுதியில் வசிக்கும் நபருக்கு, போலியான ஆர்.டி.ஓ. பெயரில் இ-செலான் லிங்க் வந்துள்ளது. அதனை நம்பி வங்கி விவரங்களை அதில் உள்ளிட்டதால், அவரது கணக்கில் இருந்து ரூ.3,64,718 பறிக்கப்பட்டது. இதேபோல் மதகடிப்பட்டு, வில்லியனூர், அரியாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் ரூ.5,25,148 ஆன்லைன் மோசடியில் பொதுமக்கள் இழந்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 7, 2026

கஞ்சா வைத்திருந்த நபர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

சோமரசம்பேட்டை புங்கனூர் பகுதியில் கர்நாடக மாநிலத்திலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து அதில் 2.100 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த கள்ளிகுடியை சேர்ந்த சந்தோஷ் என்பவரை கடந்த 01.12.25ம்தேதி திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர்.இவரின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் விதமாக,இவர் மீது குண்டர் தடுப்பு ஆணையினை இன்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பிறப்பித்துள்ளார்.

News January 7, 2026

தஞ்சை: அரசு பள்ளியில் கொள்ளை – 2 பேர் கைது

image

தஞ்சாவூர் மாவட்டம் இராராமுத்திரை கோட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பாபநாசம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர் மற்றும் 15 வயதுடைய ஒரு சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 7, 2026

ஸ்ரீவி: கத்தியால் குத்தி கொலை செய்தவர் கைது

image

கூமாப்பட்டி ஆத்தங்கரைப்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் (30) நெடுங்குளத்தில் தனது உறவினரான செல்வராணி வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை செல்வராணியின் சகோதரர் சுந்தரலிங்கம் என்பவர் ஈஸ்வரனிடம் தகராறில் ஈடுபட்டு ஈஸ்வரனை கத்தியால் குத்தி கொலை செய்தார். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட கூமாப்பட்டி போலீசார் சுந்தரலிங்கத்தை கைது செய்தனர்.

News January 7, 2026

தருமபுரியில் நாளை பவர் கட்!

image

பாப்பிரெட்டிப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.8) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடாசமுத்திரம், மோளையானூர், தேவராஜபாளையம், சாமியாபுரம் கூட்ரோடு, இருளப்பட்டி, மாரியம்பட்டி, பூதநத்தம், அலமேலுபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!