Tamilnadu

News January 7, 2026

மதுரை ஜல்லிக்கட்டிற்கு விண்ணப்பிக்கலாம்

image

மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள உள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 5 மணி முதல் ஜனவரி 8ம் தேதி வரை மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்ய முடியும். மஞ்சுவிரட்டில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்களும், காளைகளும் தங்கள் முன்பதிவை இன்று மாலை 5 மணி முதல் விண்ணப்பத்தை தொடங்கலாம்.

News January 7, 2026

ராணிப்பேட்டையில் மின்தடை; உங்க ஏரியா இருக்கா?

image

ராணிப்பேட்டை மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால், நாளை (ஜன.8) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாம்பாக்கம், கலவை, திமிரி, ஆற்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின் தடை செய்யப்படும். எனவே பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தபட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News January 7, 2026

தி.மலை: பாட்டிலுக்கு ரூ.10 கேட்டால்… உடனே CALL!

image

தி.மலை மாவட்ட மக்களே உங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பிளாக்கில் விற்பனை நடப்பது, குறிப்பிட்ட நேரத்தை தாண்டி விற்பனை, விலைக்கு மேல் ரூ.10 கேட்பது, மேலும் எந்த வித மோசடி செயல்கள் நடந்து வந்தாலும், அதுகுறித்து உடனடியாக 04175-232619 என்ற லஞ்ச ஒழிப்புத் துறை எண்ணிற்கு புகார் அளிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 7, 2026

திருப்பத்தூர்: செவிலியர் மீது ஏறிய லாரி!

image

ஆம்பூர் அடுத்த சான்றோர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் நேதாஜி (30). பெங்களுருவில் செவிலியராக வேலை செய்து வருகிறார். இவர், நேற்று (ஜன.6) இரவு ஆம்பூர் கோவிந்தபுரம் நெடுஞ்சாலையில் இரவு 11 மணியளவில் ஓட்டிவந்த பைக் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 7, 2026

நீலகிரி: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (ஷேர் பண்ணுங்க)

News January 7, 2026

விழுப்புரம்: பாட்டிலுக்கு ரூ.10 கேட்டால்.., உடனே CALL!

image

விழுப்புரம் மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பிளாக்கில் விற்பனை நடப்பது, குறிப்பிட்ட நேரத்தை தாண்டி விற்பனை, விலைக்கு மேல் ரூ.10 கேட்பது, மேலும் எந்த வித மோசடி செயல்கள் நடந்தாலும், அதுகுறித்து உடனடியாக 04146-259216 என்ற லஞ்ச ஒழிப்புத் துறை எண்ணிற்கு புகார் அளிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 7, 2026

வேலூர்: பாட்டிலுக்கு ரூ.10 கேட்டால்.., உடனே CALL!

image

வேலூர் மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பிளாக்கில் விற்பனை நடப்பது, குறிப்பிட்ட நேரத்தை தாண்டி விற்பனை, விலைக்கு மேல் ரூ.10 கேட்பது, மேலும் எந்த வித மோசடி செயல்கள் நடந்தாலும், அதுகுறித்து உடனடியாக 0416-2220893 என்ற லஞ்ச ஒழிப்புத் துறை எண்ணிற்கு புகார் அளிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 7, 2026

காஞ்சி: வீட்டின் பின்புறம் நேர்ந்த விபரீதம்

image

உத்திரமேரூர் ஒன்றியம் ராவத்தந்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கனகம்மா (75). இவர் கடந்த 1-ந்தேதி வீட்டின் பின்புறம் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் பரிதாபமாக பலியானார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 7, 2026

கள்ளக்குறிச்சியில் 100% இழப்பீடு!

image

கள்ளக்குறிச்சி மக்களே.. புயல், வறட்சி, மழை, பூச்சி தாக்குதல், நோய் தாக்குதல் மற்றும் விலங்குகளால் உங்களின் பயிர்கள் சேதம் அடைகிறதா? இனிமேல் இவற்றால் ஏற்படும் இழப்பிற்கு, PMFBY திட்டத்தின் மூலம் எளியமுறையில் 100% வரை இழப்பீடு பெறலாம். இதுகுறித்த மேலும் தகவல்களுக்கு இங்கு <>க்ளிக் <<>>செய்யவும் அல்லது அருகில் இருக்கும் கிராமப்புற சேவை மையங்களை அணுகவும். ஷேர் பண்ணுங்க!

News January 7, 2026

செங்கல்பட்டு அருகே அதிர்ச்சி!

image

செங்கல்பட்டு மணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (55), குடும்பத் தகராறு காரணமாகச் சித்தியுடன் வசித்து வந்தார். கடந்த 4-ம் தேதி வீட்டின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த அவர், சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!