India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெரம்பலூா் மாவட்ட சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.எஸ்.அனிதா எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், எஸ்.பி-யின் உத்தரவின்படி தலைக்கவசம் அணியாதவா்கள் ரூ.2,500 அபராதம் செலுத்தினால் மட்டுமே வாகனங்கள் விடுவிக்கப்படுவதாக பரவி வரும் தகவல் போலியானது எனவும் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டத்தில் உள்ள பொது அரங்குகள், மாநாட்டு அறைகள், சமுதாய கூடங்கள், மண்டபங்கள் போன்ற மூடிய வளாகங்களில் இரவு 10 மணி முதல் காலை 6:00 மணி வரை ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது என்றும், தவிர்க்க முடியாத காரணங்களுக்கு சார் ஆட்சியரிடம் எழுத்துப்பூர்வ அனுமதி பெற்ற பின்னரே, ஒலிபெருக்கியை பயன்படுத்த வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா அழகன்வயல் கிராமத்தில் வரும் ஜன.21ம் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமினை முன்னிட்டு ஜன.12ம் தேதி முன் மனுக்கள், அழகன்வயல் பி.எம்.எஸ் திருமண மண்டபத்தில் பெறப்பட உள்ளது. ஆகவே பொதுமக்கள் தங்களது மனுக்களை இதில் அளித்து பயனடையலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

உடையார்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, வேலப்பன் செட்டி ஏரிக்கரையில் நாகல்குழி கிராமத்தைச் சேர்ந்த செல்லையா (29), பிலாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சேகர் (54) மற்றும் இளமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் (26) ஆகியோர் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து 3 பேர் மீதும் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.

செம்பனார்கோவில் அருகே திருச்சம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மெய்யப்பன் (25). இவர் 17 வயது மாணவி ஒருவரை கடந்த 6-ந் தேதி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீசார் மெய்யப்பனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்

புதுவை கலெக்டர் அலுவலகத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை ஒழிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் குலோத்துங்கன் தலைமை வகித்தார். மேலும் சீனியர் எஸ்.பி கலைவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் தனியார் கொரியர் நிறுவனங்கள் மூலம் பார்சல் எடுத்து வரும் பொழுது தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் வருகின்றனவா என்பது குறித்து போலீசார் கண்காணிக்க வேண்டுமென கலெக்டர் உத்தரவிட்டார்.

கோட்டூர் அருகே, ஒரத்தூர் கீழத்தெருவைச் சேர்ந்தவர் சந்திரா(38). கணவனை இழந்த இவர் தனியாக கூரை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்ந்லையில் நேற்று முன்தினம் மாலை இவர் கியாஸ் அடுப்பில் சமையல் செய்தபோது எதிர்பாராதவிதமாக வீட்டு கூரையில் தீப்பிடித்து எரிந்துள்ளது. சந்திராவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் சந்திராவை மீட்டுள்ளனர். மேலும் இந்த தீ விபத்தில் கூரைவீடு முற்றிலும் எரிந்து சேதமானது.

திருப்பூர் மக்களே, வாட்ஸ் அப்பில் ஆதார் அப்டேட் செய்ய வேண்டும் என கூறி APK ஃபைலை இன்ஸ்டால் செய்யச் சொல்வார்கள். நீங்கள் அந்த Fileஐ டவுன்லோடு செய்தவுடன், உங்கள் போனின் முழு கட்டுப்பாடும் மோசடிக்காரர்களிடம் சென்று விடும். அதன் மூலம் உங்கள் OTP, PIN, வங்கி விவரங்களை அவர்கள் எளிதாக திருட முடியும். மேலும், வங்கிகளில் ஒருபோதும் வாட்ஸ்அப், SMS (அ) சமூக வலைதளங்கள் மூலம் APK ஃபைல்களை அனுப்பாது. (SHARE)

கோம்பையை பகுதியை சோ்ந்த காய்கறி வியாபாரி ராஜ்குமாா் 2 தினங்களுக்கு முன் சாலையில் உடலில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். கொலை குறித்து போலீஸ் விசாரணையில் ராஜ்குமாருக்கும், முத்துராஜ் என்பவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு இருந்தது தெரியவந்தது. இதனால் முத்துராஜ் கூலிப்படை சேர்ந்த 2 பேருடன் ராஜ்குமாரை கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர்.

தருமபுரியில் ‘உங்கள் கனவை சொல்லுங்க’ திட்டம் நேற்று (ஜன.9) தொடங்கப்பட்டது. தருமபுரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ.சதீஷ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மணி ஆகியோர் கலந்துக்கொண்டனர். மேலும் இதில் அரசுத்துறை அதிகாரிகள், நகர மன்ற தலைவர் லட்சுமி மாது மற்றும்
மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Sorry, no posts matched your criteria.