India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பரமக்குடி அருகே மஞ்சக்கொள்ளை கிராமத்தில் நேற்று மதியம் வெறிநாய் ஒன்று தெருவில் சுற்றி வந்துள்ளது. வீட்டு வாசலில் இருந்த பெண்கள், முதியவர்களை துரத்தி துரத்திக் கடித்தது முதியவர்கள் சிலர் தடுக்க முடியாமல் கீழே விழுந்தனர். இரு பெண்கள் உட்பட 14 பேரை நாய் கடித்தது. இவர்கள் அனைவரும் ராமநாதபுரம் GH-யில் அனுமதிக்கப்பட்டனர்.

வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி சேர்ந்தவர் சதீஷ்(32). எம்பிஏ படித்த இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி காளீஸ்வரி பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு சென்று இருந்தார். சதீஷுக்கு நுரையீரல் கேன்சர் இருந்துள்ளது. இதற்காக சிகிச்சை பெற்றும் தொடர்ந்து வலி இருந்து வந்துள்ளது. இதனால் வீட்டில் தூக்கிட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டார். மா.சத்திரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

கயத்தாறு பகுதி சன்னதுபுதுக்குடியை சேர்ந்தவர் செல்வகணேஷ் (24). இவர் கங்கை கொண்டான் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த செல்வ கணேஷ், நேற்று திடீரென வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் களைக்கொல்லி மருந்து குடித்தார். மயங்கிய இவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்தார்.

அருப்புக்கோட்டை கணேஷ் நகரை சேர்ந்தவர் ஜெயபால், 41. இவர் ராணுவ அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். தன் குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று நேற்று முன் தினம் வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப் பட்டு திறந்து கிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்த போது 14.5 பவுன் நகை,வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரிந்தது. அருப்புக்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

வேலூர் தனியார் பல்கலைக்கழகத்தில் இன்று (ஜன.10), 12ம் வகுப்பு மாணவர்களுக்கான ‘வெற்றி நமதே’ நிகழ்வு நடைபெறுகிறது. இதில், பொதுத்தேர்வை அச்சமின்றி எழுதி அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி, வேலைவாய்ப்புகள் நிறைந்த உயர்படிப்புகள் என்னென்ன, என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் போன்ற பயனுள்ள ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன.

கனிம வளங்கள் கேரளாவிற்கு கடையம் பகுதியில் இருந்து அதிகளவில் கொண்டு செல்லப்படுவதாக குறிப்பிட்டு கடையம் பகுதியை சேர்ந்த திமுக மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் சந்திரசேகர் திமுகவில் இருந்து விலகியுள்ளார். இது குறித்து, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இப்பகுதியில் சுற்றுச்சூழலை காப்பாற்ற முடியாததால் பொறுப்பில் இருந்து விலகுகிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

கனிம வளங்கள் கேரளாவிற்கு கடையம் பகுதியில் இருந்து அதிகளவில் கொண்டு செல்லப்படுவதாக குறிப்பிட்டு கடையம் பகுதியை சேர்ந்த திமுக மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் சந்திரசேகர் திமுகவில் இருந்து விலகியுள்ளார். இது குறித்து, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இப்பகுதியில் சுற்றுச்சூழலை காப்பாற்ற முடியாததால் பொறுப்பில் இருந்து விலகுகிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஊட்டியில் இருந்து தங்காடு கிராமத்திற்கு கடந்த 7-ம் தேதி 36 பயணிகளுடன் சென்ற மினிபேருந்து மணவாடா பகுதியில் கட்டுப்பாட்டு இழந்த விபத்திற்கு உள்ளாது. இதில், பேருந்தில் பயணித்தவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த பவளம் என்ற பெண்மணி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்தார்.

நாமக்கல் மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, ஜன.13 முதல் திருச்சி, துறையூர் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல ஆட்சியர் துர்காமூர்த்தி உத்தரவு. பேருந்துகள் ‘சிங்கப்பூர் ஸ்டுடியோ’ நுழைவாயில் வழியாக உள்ளே நுழைந்து, நேரக்காப்பாளர் அறை வழியாக வெளியேற வேண்டும். பயணிகள் பேருந்து நிலையத்தின் உட்புறத்திலிருந்தே பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, ஜன.13 முதல் திருச்சி, துறையூர் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல ஆட்சியர் துர்காமூர்த்தி உத்தரவு. பேருந்துகள் ‘சிங்கப்பூர் ஸ்டுடியோ’ நுழைவாயில் வழியாக உள்ளே நுழைந்து, நேரக்காப்பாளர் அறை வழியாக வெளியேற வேண்டும். பயணிகள் பேருந்து நிலையத்தின் உட்புறத்திலிருந்தே பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.